View status

View My Stats

ஞாயிறு, 24 ஜூலை, 2016

தேங்காய் தண்ணீர் அற்புத மருத்துவம்


பத்து நாட்கள் தொடர்ந்து தேங்காயை உடைக்கும் தண்ணீரை குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!?...

இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்குமே தெரியும்.

இப்போது நாம் பார்க்கப் போவது
தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றிதான்.

இதோ அட்டகாசமான சில
டயட் டிப்ஸ்.....

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.

பத்தே நாட்களில் உங்கள் எடையை ஏழு கிலோ குறைக்க வேண்டுமா..?

அப்ப கோக்கனட் வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க.

1. நோய் எதிர்ப்பு சக்தி

தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோய் எதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.

2. தைராய்டு ஹார்மோன்கள்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல் பட வழி வகுக்கும்

3. சிறுநீரக பிரச்சனைகள்

சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்று வதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்து விடவும் செய்யும்.

4. செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்.

ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச் சத்து வளமாக நிறைந்துள்ளது.

இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

5. எடையைக் குறைக்கும்

தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது.
மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும்.
இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

6. உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோ லைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

7. தலைவலி

இரவில் அதிகமாக மது அருந்தி விட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.

8. நீர்ச்சத்து அதிகமாகும்

தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல் பட முடியும்.

9. கர்ப்பிணிகளுக்ககு நல்லது

கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக