View status

View My Stats

செவ்வாய், 19 ஜூலை, 2016

வான் கோழி வளர்ப்பு :





தமிழ்நாட்டில் ஒரு சில பெண்கள் வீடுகளில் வான்கோழிவளர்ப்பதை ஒரு தொழிலாகச் செய்து வருகின்றனர்குறைந்தமுதலீட்டில் நிறைந்த வருவாய் அளிக்கும் தொழிலாக இதுஇருக்கிறது.

வான்கோழிகள்பெரும்பாலும் அடைகாப்பது இல்லைவான்கோழிமுட்டையை மழைபனிக்காலத்தில் 7 நாள் வரையிலும்காற்றுஇளவேனிற் காலத்தில் 6 நாள் வரையிலும்வெயில் காலத்தில் 4நாள் வரையிலும் சேமித்து அடை வைக்க பயன்படுத்த வேண்டும்.நாட்டுக்கோழி அடைகாக்கும் பருவத்தில் வான்கோழிமுட்டைகளை வைத்து குஞ்சுகள் பொரிக்கும் வழக்கம் உண்டு.நாட்டுக் கோழிகளில் 7 முட்டை வரையிலும் அடை வைக்கலாம்.அடைகாக்கும் நாள் 28. செயற்கை முறையில் பொரிக்கஇன்குபேட்டர் எந்திரத்தைப் பயன்படுத்தலாம்பெரும்பாலும்தற்பொழுது இம்முறையே பயன்படுத்தப்படுகிறதுவான்கோழிகுஞ்சு பருவம்வான்கோழி வளர்ப்பில் மிக முக்கியமானகாலகட்டம் ஒரு மாதம் வரை வளர்ப்பதாகும்பொரித்த குஞ்சுகளைமுடி உலர்ந்த பின் செயற்கை வெப்பமாக புரூடர் அமைத்து புரதம்நிறைந்த தீவன உணவு கொடுக்க வேண்டும்குளூகோஸ் கலந்தகுடிநீரை வைக்க வேண்டும்வறுகடலை தூள் செய்து உணவாககொடுக்கலாம்அவித்த முட்டையின் வெண்கரு மட்டும்எல்லாவகை தானியங்களுடன் கலந்து கொடுக்கலாம்இதற்கென்றுபிரத்யேகமாக குஞ்சு தீவனங்கள் தயாரிப்பாளர்கள் உண்டு.வாங்கியும் பயன்படுத்தலாம்குஞ்சு பருவத்தில் குடிநீரினால்பெருமளவு உயிர் சேதாரம் ஏற்படும்அப்படிப்பட்ட சூழ்நிலையைத்தவிர்க்க குடிநீரை கோழியின் நோய் ஆய்வகம்கால்நடைபல்கலைக்கழகம்நாமக்கல் (04286-266 226) என்ற விலாசத்தில்இயங்கும் பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்து குடிநீரைக்கொடுக்க வேண்டும்தீவன மூலப் பொருள்களில் அப்ளோடாக்சின்என்ற கொடிய நச்சினால் வான்கோழி குஞ்சுகள் இறக்கும்இதனைதவிர்க்க மக்காச்சோளம்மீன் தூள்புண்ணாக்கு வகைகள்,தானியங்கள்தவிடு மற்றும் ஏனைய மூலப்பொருட்கள் தீவனபகுப்பாய்வு மையம் (04286-266 288) கால்நடை பல்கலைக்கழகம்,நாமக்கல் என்ற விலாசத்தில் இயங்கும் தர ஆய்வுக்கூடத்தில்ஆய்வு செய்து கால்நடை மருத்துவர் ஆலோசனை பெற்று தீவனம்தயாரித்துக் கொடுக்க வேண்டும். 20 நாளைக்கு பின்பசுந்தீவனங்களைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்வான்கோழிகுஞ்சு வளரும் பருவம்இந்த காலகட்டத்தில் வான்கோழிகள்பசுமையான இலைகளை விரும்பி உண்ண ஆரம்பிக்கும்.குதிரைமசால்வேலிமசால்முயல்மசால்காசினி கீரைஅகத்தி,கேரட்கல்யாணி முருங்கைசித்தகத்தி, (சுபாபுல்கிளரிசிடியாஇலைகளை வாடவிட்டு கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்)அருகம்புல்பொடுதலைகோரை புற்கள்காராமணிசவுண்டல்,கடலைக்கொடிகள்மல்பெரி முருங்கைகோ வைகை மாட்டு தீவனபுல்கீரை வகைகள்காய்கறிபழங்கள் என இயற்கையாககிடைப்பவைகளை உணவாகக் கொடுக்கலாம்மழைக்காலங்களில்தேங்கிய மழைநீர் மண் படிந்த இலைகளைக் கொடுக்கக்கூடாது.தோப்புகள் விவசாய நிலங்கள்தரிசு நிலங்கள்மலர்த்தோட்டம்,பழத்தோட்டம்தென்னந் தோப்புகள் இவைகளில் வான்கோழிவளர்க்கலாம்விவசாயத்தில் தீமை செய்யும் புழுபூச்சி,கொசுக்களை உணவாக உட்கொண்டு பாதுகாக்கிறதுதென்னையில்உள்ள காண்டாமிருக வண்டு குப்பை கூளங்களில் முட்டை இட்டுபுழுக்களை பெருக்கும் அந்த இளம்புழுக்களை வான்கோழிஉணவாக உட்கொள்வதால் காண்டாமிருக வண்டு கட்டுப்படும்.அரிசிநெல்மணிகளை பெருமளவு கொடுப்பதை தவிர்க்கவேண்டும்குடிநீரினை நிழலான இடங்களில் வைக்க வேண்டும்.வெயில் பட்டு குடிநீர் சூடாவதை தவிர்க்க வேண்டும்முட்டைபருவம்வான்கோழிகளின் பெட்டை சுமாராக 7, 8 மாதங்களில்முட்டை இட ஆரம்பிக்கும்இந்த காலகட்டத்தில் வான்கோழிகள்பெட்டை குறைவாகவும்சேவல் அதிகமாகவும் இருந்தால் சேவல்சண்டை இட்டுக்கொள்ளும் ரத்தக்காயம் ஏற்படும்கோழியில்இருந்து முட்டை வந்ததாமுட்டையில் இருந்து கோழி வந்ததாஎன்று விவாதிக்காமல் கோழியில் இருந்து எப்படி பணம் ஈட்டலாம்என்று உருப்படியாக தொழில் செய்யலாம்வான்கோழிக்கு எதிரிகள்நாய்நரிகீரிகாட்டுபூனைவீட்டுப்பூனைவல்லூறு திருடர்கள்,காக்கைகழுகு இவைகளில் இருந்து தப்பிக்க ஒரு வளர்ந்தவான்கோழிக்கு 5 சதுர அடி இடம் என்ற வகையில் கொட்டகைஅமைத்து வளர்க்கலாம்மேலும் இயற்கை வேளாண் பற்றிபயிற்சியும்தேவையான இடுபொருள்களும் உள்ள வானொலிஉழவர் சங்கம்திருச்சி-2. 0431-271 6891ல் வான்கோழி தீவனங்கள்நல்ல முறையில் கிடைக்கிறது.


வான்கோழி வளர்ப்பு முறைகள் 
வான்கோழிகள் வளர்த்திட கீழ்க்கண்ட வளர்ப்பு முறைகளைக்கடைப்பிடிக்கலாம்.

1.புறக்கடை வளர்ப்பு(Backyard system)
2.மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில்வளர்ப்பு (Semi-intensive system)
3. ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு(Deeplitter rearing)
4.கம்பி வலை மேல் வான்கோழிகள் வளர்த்தல்(Slate floor rearing)

புறக்கடை வளர்ப்பு:
நம்முடைய கிராமபுறங்களில் விவசாயிகள் வீட்டுத்தோட்டங்களில் வான்கோழிகளை வளர்ப்பதை பார்த்திருப்பீர்கள்.வீடுகளில் இருக்கும் நெல்அரிசிகுறுணைகம்புசோளம்தவிடு,எஞ்சிய சமைத்த உணவுசமையல் அறைக் கழிவுகள் ஆகியவைவான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன.

புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குத் தானியங்கள்,கீரைகள்களைகள் போதுமான அளவு கிடைத்து விடும்ஆனால்புரதச்சத்து தேவை நிறைவு பெறாதுஇதை ஈடுகட்ட கடலைப்பிண்ணாக்கு / எள்ளுப் பிண்ணாக்குசூரியகாந்திப் பிண்ணாக்குஇவற்றில் ஏதாவது ஒன்றினைத் தண்ணீரில் ஊறவைத்து இத்துடன்சிறிதளவு தவிடு வகையினைச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரே சமயத்தில் அதிகமாக வைக்காமல் சிறிது சிறிதாகத் தீவனம்வைக்க வேண்டும்தண்ணீரில் ஊற வைத்து ஒரிரு நாட்கள் கழித்துஅக்கலவையினை தீவனமாகப் பயன்படுத்தக் கூடாதுபழையஊறவைத்த பிண்ணாக்கில் பூஞ்சக்காளான் வளர்ச்சி ஏற்படுவதால்வான்கோழிகளுக்கு இது தீங்களிக்கும்.

இடவசதி:
வீட்டைச்சுற்றி 5 செண்ட் நிலம் இருந்தால் அது ஒரு ஜோடிக்குஇடவசதி போதுமானதாக இருக்கும்இரவு நேரத்தில் அடைத்துவைத்திட ஒரு சிறிய அறை தேவைப்படும்அல்லது பெரியகூடைகள் தேவைப்படும்முட்டைகளிட ஒரு சிறிய இருட்டானஇடம் தேவைப்படும்.

மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்க்கும் முறை:
வியாபார முறையில் வான்கோழிப் பண்ணை அமைத்திட,மேய்ச்சலுடன் கொட்டகை கட்டி வளர்க்கும் முறைபுறக்கடைமுறையைவிடச் சிறந்ததாகும்ஒரு ஆண் வான்கோழிக்கு,கொட்டகையில் 5-6 கொட்டகையில் சதுர அடியும்ஒரு பெட்டைவான்கோழிக்குச் சுமார் 4 அடி இடவசதியும் தேவைப்படும்.

இந்தக் கொட்டகையில் நெல் உமி அல்லது கடலைத் தோல் போட்டு,ஆழ்கூளம் அமைத்து விட வேண்டும்சுமார் 100 வான்கோழிகள்கொண்ட பண்ணை அமைத்திட 20 ஆண் வான்கோழிகள் தேவை.இதற்காகச் சுமார் 20 அடி அகலம்சுமார் 25 அடி நீளம் கொண்ட ஒருகொட்டகை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கொட்டகையைச் சுற்றிச் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்குகம்பிவலை கட்டப்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு விடலாம்புல்பூண்டுகள்களைகளை ஒரிரு நாட்களில் தின்று விடும்இந்தஇடத்தில் அருகம்புல் கொண்டு வந்து போடலாம்கலப்புத் தீவனம்இரண்டு அல்லது மூன்று முறை தினமும் அளிக்கலாம்.

ஆழ்கூள முறையில் கொட்டகையில் வான்கோழி வளர்ப்பு:
கோழிகளை வளர்ப்பது போல் வான்கோழிகளையும்ஆழ்கூளமுறையில் கொட்டகையில் வளர்க்கலாம்ஆழ்கூளம்அமைப்பதற்கு நெல்உமி அல்லது கடலைத் தோலைசிமெண்ட்தரையின் மீது ஆறு அங்குலத்திற்கு பரப்பவேண்டும்.இம்முறையில் வான்கோழிகளை வியாபார நேர்கிகல் வளர்க்கவேண்டுமானால் குறைந்தது 200 வான் கோழிகள் கொண்டபண்ணையை அமைக்கவேண்டும்.

இம்முறையில் 40 ஆண் வான்கோழிகளுக்கு, 160 பெட்டைவான்ாகழிகள் என்ற விகிதத்தில் வளர்க்கலாம்ஒரு சேவல்வான்கோழிக்கச் சுமார் 5-6 சதுர அடி இடவசதியும் ஒரு பெட்டைவான்கோழிக்குச் சுமார் 4 சதுர இடவசதியும் தேவை. 40 ஆண்கோழிகளுக்கு 200 முதல் 240 சதுர இடவசதியும் 160 பெட்டைவான்கோழிகளுக்கு 640 சதுர இடவசதியும் தேவைவளர்ந்தவான்கோழிகள் வளர்ப்பதற்கு தனிக் கொட்டகையும் குஞ்சுகள்வளர்ப்பதற்கு தனிக்கொட்டகையும் அமைத்திடவேண்டும்.

கம்பி வலைச் சட்டங்களில் மேல் வான்கோழிகள் வளர்ப்பு:

அதிகமாக மழைபெய்யும் இடங்களிலும்ஆழ்கூளம் காய்ந்தநிலையில் வைக்க முடியாத இடங்களிலும் கம்பிவலைச்சட்டங்களைப் பொருத்தி அதன் மேல் வான்கோழிகளைவளர்க்கலாம்இதற்கான கொட்டகையினை அமைப்பதை ஆழ்கூளமுறையில் போன்றே கட்டிக் கொள்ள வேண்டும்ஆனால்சிமெண்ட் காங்கிரிட் கொண்ட தரை அமைக்க வேண்டியஅவசியமில்லை.

ஏனென்றால் கோழிகளைக் கம்பி வலைகளின் மேல் விட்டுத் தானேவளர்க்கப்போகின்றோம்பக்கவாட்டுச் சுவர்கம்பிவலைச்சட்டத்திற்கு மேல் 11/2 அடி உயரத்திற்கு அமைத்துக் கொள்ளவேண்டும்சட்டமானது ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம்இடைவெளி கொண்ட கம்பி வலையினை 2 அடிக்கு 2 அடிமரச்சட்டங்களை அமைத்துக் கொண்டு அதன்மேல் பொருத்திவிடவேண்டும்.

இந்தக் கம்பி வலைச் சட்டங்களை மண் தரைமீது ஒவ்வொன்றாகஅடுக்கி வைத்து விடலாம்அவற்றின் மீது வளர்ந்தவான்கோழிகளை வளர்த்திடலாம்சிறிய குஞ்சுகளைகம்பிவலைச் சட்டத்தின் மீது வளர்க்க வேண்டுமானால் ஒருஅங்குலத்திற்கு 2 அங்குலம் கொண்ட கம்பி வலையை மரச்சட்டம்மீது பொருத்திக் கொள்ளலாம்கம்பிவலைச் சட்டத்தின் மேல்விட்டு வான்கோழிகளை வளர்த்தால் பலவிதமானநோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளித்திடலாம்.

பெரிய வான்கோழிகள் இனவிருத்திக்காக வளர்க்கும் பட்ச்த்தில்பண் வான்கோழிகளின் மார்புப் பகுதி கம்பிவலையினால் காயம்ஏற்படலாம்இதைத் தடுத்திடபாதி இடம் கம்பிவலைச் சட்டஅமைப்பு கொண்ட கொட்டகை அமைக்கும் பொழுது ஒரு குஞ்சுக்குசதுர அடி இடவசதியும்ஒரு வளர்ந்த வான்கோழிக்கு சுமார் 5 சதுரஅடி இடவசதியும் போதுமானதுமுடிந்த அளவிற்கு வளர்ந்தவான்கோழிகளை ஆழ்கூளத்தில் வளர்க்க முயற்சிக்கலாம்.

கம்பிவலைக் சட்டத்தின் மேல் குஞ்சுகளை வளர்க்கலாம்
கம்பி வலைச் சட்டத்தின் மேல் இனவிருத்திக்கானவான்கோழிகளை வளர்க்கும் பட்சத்தில் தீவனத்தில் குறைந்தது 2.5தாது உப்பும், 3 கிளிஞ்சலும் கலந்து இருக்க வேண்டும்இந்தஅளவில் குறைவு ஏற்பட்டால் கால்களில் வாதம் ஏற்பட்டு நடக்கமுடியாமல் கஷ்டப்படும்மேலும் முட்டையிடக்கூடிய பகுதிஆழ்கூளமாக இருப்பது சிறந்தது.

அப்பொழுதுதான் முட்டைகள் உடையாமல் இருக்கும்சுத்தமானஆழ்கூளமாக இருந்தால் மட்டுமே சுத்தமான முட்டைகள் பெறமுடியும்சுத்தமான முட்டைகளையே குஞ்சு பொரிக்க அவயத்தில்வைத்திட இயலும்.

வான்கோழித் தீவனப் பராமரிப்பு:

வான்கோழிகளுக்குச் சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமேஅதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெற முடியும்.வான்கோழிப் பண்ணையில் செலவிடப்படும் தொகையில் 70சதவிகிதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகின்றதுஒருபெட்டை வான்கோழியின் எடையோ சராசரியாக 3 கிலோகிராம்உள்ளதுவான்கோழி வருடத்திற்கு 70 கிராம் எடைக்கொண்ட 100முட்டைகள் இடவேண்டும் என்றால் (அதாவது 7 கிலோ எடையுள்ளமுட்டைகள்நல்ல தரமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனம்அளிக்கப்படவேண்டும்அதேபோல் 45 கிராம் எடையுள்ள ஒரு நாள்வயதுள்ள குஞ்சு 84 நாடகளுக்குள் (12 வார வயதிற்குள்) 2.5-3.0கிலோ எடை பெற வேண்டுமெனில் நல்ல தரமான சத்துள்ளதீவனம் அளிக்கப்படவேண்டும்.

வான்கோழிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கீழ்வருமாறு.
தண்ணீர்
மாவுப்பொருள்
புரதம்
கொழுப்பு
நார்ப்பொருள்
தாது உப்புக்கள்
உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்)


வான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு:

ஆண்பெட்டை வான்கோழிகளுக்கான சத்துக்கள் தேவை.வேறுபடுவதால் இவைகளை குஞ்சு பொரித்தவுடன்தனித்தனியாகப் பிரித்து வளர்ப்பது நல்லதுவான்கோழிகளுக்குத்தீவனம் தயாரிக்க சாதாரணமாக மற்றக் கோழிகளுக்குப்பயன்படுத்தப்படும் தீவன மூலப் பொருட்களையேபயன்படுத்தலாம்குஞ்சு பொரித்தவுடன் எவ்வளவு விரைவில்தீவனம் அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் வான்கோழக்குஞ்சுகளக்குத் தீவனத்தைப் பிரகாசமான வெளிச்சத்தில்வைக்கவேண்டும்சில சமயங்களில் தீவனம் மற்றும் தண்ணீர்தொட்டிகளில் பளிச்சென்று பீங்கான் குண்டுகளைப் போடுவதால்தீவனம் மற்றும் தண்ணீர் உட்கொள்ளக் குஞ்சுகள்தூண்டப்படுகின்றனமுதல் இரண்டு நாட்களுக்குத் தீவனத்தைச்சுத்தமான பழைய செய்தித்தாள் மேல் தூவிவிடலாம்.

ஆரம்ப நாட்களில் தீவனத்தைப் பாத்திரத்தில் நிறையக் குவித்துவைத்துதீவனம் உட்கொள்ளத் தூண்ட வேண்டும்பொதுவாககுஞ்ச பருவத்தில் இறப்பு விகிதம் 10 விழுக்காடு வரை இருக்கும்.குஞ்சுப் பொரித்த முதல் நாளில் இருந்து கால்சியம்பி வைட்டமின்மருந்தினைத் தண்ணீரில் கலந்து இரண்டு மாதங்கள் வரைத்தவறாமல் கொடுக்கவேண்டும்.

நாம் சொந்தமாகத் தீவனம் தயாரிக்கும் போது உள்ளூர் சந்தையில்கிடைக்கும் விலை மலிவான தீவனப்பொருட்களைக் கொண்டுகுறைந்த விலையில் தீவனம் தயார் செய்து கொள்ளலாம்.

குஞ்சுத்தீவனம்:
வான்கோழிக் குஞ்சுகளுக்கு முதல் நான்கு வாரங்களுக்கு 28விழுக்காடு புரதமும், 2800 கிலொ கலோரிகள் (1 கிலோவிற்கு)எரிசக்தி அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும்இத்தீவனத்தைத்தயாரிக்கும் முறைபற்றி இங்குக் காண்போம்.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-40 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-38 பங்கு
மீன் தூள்-9 பங்கு
தவிடு வகைகள்-10 பங்கு
எண்ணெய்-1 பங்கு
தாது உப்பு-2 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள (வைட்டமின் 25 கிராம் மற்றும் பி வைட்டமின் 50 கிராம்கலந்து தரவேண்டும்.

நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு 26 விழுக்காகடு புரதமும், 2900கிலோ கலோரிகள் (கிலோவிற்குஎரிசக்தியும் அடங்கிய தீவனம்அளித்தல் வேண்டும்.

இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைப்பற்றி இங்கு காண்போம்.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-45பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-30 பங்கு
மீன் தூள்-10 பங்கு
தவிடு வகைகள்-10 பங்கு
எண்ணெய்-2 பங்கு
தாது உப்பு-3 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ,டி-20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்கலந்து தரவேண்டும்.

வளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு:
வளரும் பருவத்தில் வயது அதிகமாகும் சமயத்தில் புரதச் சத்தின்தேவைப் படிப்படியாகக் குறைகிறதுஅதே சமயத்தில் எரிசக்தியின்தேவை படிப்படியாகக் கூடுகிறதுஎனவே அந்தந்த வளர்ச்சிப்பருவத்திற்கு ஏற்ற சமச்சீர் தீவனம் அளிப்பது அவசியமாகிறது.வளரும் வான்கோழிகளுக்கான தீவனத்தை 8 முதல் 14 வாரங்கள்வரை அளிக்கவேண்டும்இத்தருணத்தில் 22 விழுக்காடு புரதமும்3000 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்குஎரிசக்தியும் அடங்கியதீவனம் அளித்தல்வேண்டும்.

தீவனக்கலவை
மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு -45 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-31 பங்கு
மீன் தூள்-10 பங்கு
தவிடு வகைகள்-10 பங்கு
எண்ணெய்-1 பங்கு
தாது உப்பு-3 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ,டி-20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்கலந்து தரவேண்டும்.

முட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப்பராமரிப்பு:

இத்தீவனமானது 14 முதல் 28 வார வான்கோழிகளுக்குஅளிக்கப்படவேண்டும்இத்தீவனத்தில் 14 விழுக்காடு புரதமும் 3200கிலோ கலோரிகள் (1 கிலோவிற்குஎரிசக்தியும் அடங்கிய தீவனம்அளித்தல்வேண்டும்இத்தீவனத்தை தயாரிக்கும் முறை கீழேகொடுக்கப்பட்டுள்ளது.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-50 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-20 பங்கு
மீன் தூள்-10 பங்கு
தவிடு வகைகள்-15 பங்கு
எண்ணெய்-2 பங்கு
தாது உப்பு-3 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ,டி-20 கிராம் மற்றும் பி வைட்டமின் 20 கிராம்கலந்து தரவேண்டும்.

இத்தீவனத்தைப் பொடியாகவோ அல்லது குச்சித் தீவனமாகவோஅளிக்கலாம்இத்துடன் தீவனத் தட்டுக்களில் கிளிஞ்சல்எந்நேரமும் கிடைக்குமாறு போட்டு வைக்கலாம்.
குச்சித் தீவனம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள் அனைத்துச்சத்துக்களும் சமச்சீர் அளவில் வான்கோழிகளுக்குக்கிடைக்கின்றன.

தீவன விரயம் குறைவு மற்றும் சத்துக்கள் உபயோகிக்கும் திறன்அதிகம்.

நச்சுத் தன்மை குறைக்கப்படுகிறது அல்லது நீக்கப்படுகிறது.

தீவனம் உட்கொள்ளும அளவம் தீவன மாற்றுத் திறனும்அதிகரிக்கின்றன.

கோழிகளின் உடல் எடை சமச்சீராக இருக்கும்.

முட்டைக் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு:

சுமார் 30 வார வயதில் வான்கோழிகள் முட்டையிடஆரம்பிக்கின்றனவான்கோழிகளின் முட்டைகள் சுமார் 70 கிராம்இருக்கும்முட்டையிடும் கோழிகளுக்கு 14 விழுக்காடு புரதமும், 2900 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்குஅடங்கிய தீவனம்அளித்தல் வேண்டும்இத்தீவனத்தைத் தயாரிக்கும் முறைப்பற்றிஇங்கு காண்போம்.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-50 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-22 பங்கு
அரிசித் தவிடு-19 பங்கு
மீன் தூள்-5 பங்கு
எண்ணெய்-1 பங்கு
தாது உப்புக் கலவை

(டிசிபி 1.0 சதவிகிதம்கால்சைட் 1.0 சதவிகிதம் மற்றும் கிளிஞ்சல்1.0 சதவிகிதம்)-3 பங்கு
இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ,டி-20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்கலந்து தரவேண்டும்.

மேலும் முட்டைக்கோழிகளுக்குக் கிளிஞ்சல் தூள் 1 சதவிகிதம்சேர்த்துக் கொடுக்கவேண்டும்இதிலிருந்து முட்டை உற்பத்திக்குத்தேவையான கால்சியச் சத்து கிடைக்கிறது.

இனப்பெருக்கக் கோழிகளுக்குத் தீவனம் அளித்தல்:

முதல் 12-16 வாரங்களுக்கு இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கப்படும்வான்கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தையே இனப்பெருக்கக்கோழிகளுக்கும் அளிக்கலாம்.

அதன் பின்னர் இக்கோழிகள் கூடுதல் உடல் எடை அடைவதைதடுக்கக் தீவனக் கட்டுப்பாட்டு முறை அல்லது குறைவான புரதத்தீவனம் அளித்தல் முறை மூலம் உடல் பருமன் அடைவதைத்தடுக்கவேண்டும்.

இனப்பெருக்கக் கோழிகளுக்கு 12 விழுக்காடு புரதமும், 2900 கிலோகலோரிகள் (1 கிலோவிற்குஎரிசக்தியும் கொண்ட தீவனம்அளிக்கவேண்டும்இத்தீவனத்தைத் தயாரிப்பது எப்படி என்பதைப்பற்றிக் காண்போம்.

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு-55 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு-20 பங்கு
அரிசித் தவிடு-17 பங்கு
மீன் தூள்-5 பங்கு
தாது உப்புக் கலவை

(டிசிபி 1.0 சதவிகிதம்கால்சைட் 1.0 சதவிகிதம் மற்றும் கிளிஞ்சல்1.0 சதவிகிதம்)-3 பங்கு
இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ,டி-20 கிராம் மற்றும் பி வைட்டமின் 50 கிராம்கலந்து தரவேண்டும்.

இனப்பெருக்கக் கோழிகளில் இருந்து கிடைக்கும் கருமுட்டைகளைஅடை வைக்கும் போது சுமார் 10 சதவிகிதம் முட்டைகள் கருஉற்பத்தியாகாமல் இருக்க வாய்ப்புள்ளதுஇதற்கு முக்கியக்காரணம் இனப்பெருக்கக் கோழிகளின் தீவனத்தில் போதிய அளவுவைட்டமின்கள் பி, மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள்இல்லாமல் இருப்பதாகும்.

பெட்டைக் கோழிகளுக்கு மேற்கண்ட சத்துக்களுடன் மெக்னீசயம்சத்தும் கூடுதலாகச் சேர்த்து அளிக்கவேண்டும்வான்கோழிகளின்கருமுட்டை வளர்ச்சியின் போது 5-15 விழுக்காடு வரை கருக்கள்இறந்து விட வாய்ப்புள்ளது.

அதே போல் 10 விழுக்காடு வரை இளம் குஞ்சுகள் குஞ்சு பொரித்தஓரிரு நாட்களில் இறந்து விடுவதும் உண்டுஇளம் குஞ்சுகள்அதிகஎண்ணிக்கையில் இறப்பதைத் தடுக்க இனப்பெருக்கக் கோழிகளின்தீவனத்தில் தேவையான அனைத்துச் சத்துக்களும் இருக்கும்படிபார்த்துக்கொள்ளவேண்டும்.


வான்கோழி பராமரிப்பு முறைகள்:

நாட்டுக் கோழிகள் அல்லது வான்கோழிகள் மூலமாகக் குஞ்சுகள்பொரித்திருந்தால் தாய்க்கோழிகளே தம் குஞ்சுகளுக்குத்தீவனத்தைப் பொறுக்கி எடுத்துக் கொள்வதைக் கற்றுக் கொடுத்துவிடும்தன்னுடைய காலால் கிளறிதான் ஓரிரு தானியங்களைப்பொறுக்கிச் சாப்பிடுவதை பார்த்துக் குஞ்சுகளும் தான் ஓரிருதானியங்களைப் பொறுக்கிச் சாப்பிடுவதைப் பார்த்து குஞ்சுகளும்தானியங்களை சாப்பிடப் பழகிவிடும்.

அடைகாத்தல்:
இயந்திரங்கள் மூலமாகப் பொரிக்கப்படும் குஞ்சுகளைகோழிக்குஞ்சுகள் வளர்ப்பது போல்
அடைக்காப்பான் அமைத்து மின்சார குண்டு விளக்கைப் பொட்டுதரையில் உமியிட்டு அதன் மேல் செய்தித்தாள்களை பரப்பிவிட்டுஅதன் மேல் குஞ்சுகளை விடலாம்.

திறந்த தட்டுக்களில் தீவனம் வைத்திடவேண்டும்தண்ணீர்ப்பாத்திரங்களும் வைத்திட வேண்டும்தண்ணீர்ப் பாத்திரங்களும்வைத்து விட வேண்டும்இளம்குஞ்சுகளுக்குப் போதுமான வெப்பம்அளித்திடவேண்டும்.

தாய்க்கோழி எந்த அளவிற்கு வெப்பத்தைத் தன் குஞ்சுகளுக்குதேவைப்படும் பொழுது அளிக்கிறதோ அந்த அளவிற்கச்செயற்கையாக வெப்பம் அளித்திடவேண்டும்.
நான்கு தீவனத்தட்டுகள்நான்குத் தண்ணீர்த் தட்டுகள்வைத்திடவேண்டும்.

வெப்பம் அளித்திட 100 வாட் மின்விளக்கு நான்குத் தரையிலிருந்துசுமார் 2 அடி உயரத்தில் தொங்கும் படி அமைத்துக் கொள்ளலாம்.இதற்கு 2 அடி நீளமுள்ள இரண்டு மரப்பலகைகளை அல்லதுபிளாஸ்டிக் பைப்களை எடுத்துக் கொண்டு கூட்டல் குறி வடிவத்தில்(+) பொருத்திக் கொள்ளலாம்ஓரங்களில் மின்விளக்குபொருத்தக்கூடிய வகையில் மின் இணைப்பு கொடுக்கவேண்டும்.

இந்தக் கூட்டல் குறி வடிவ அமைப்பினைக் கயிற்றால் கட்டித்தொங்கவிடவேண்டும்அடைகாப்பானுக்குள் தரையிலிருந்து 2 அடிஉயரத்தில் தொங்கும்படி விடலாம்இரு கட்டைகளின் நான்குமுனைகளிலும் மின்விளக்குகளைப் பொருத்தி மின்இணைப்புகொடுத்து எரிய விடலாம்இரண்டு மின்விளக்குகளுக்கு ஒருசுவிட்சு என்றக் கணக்கில் அமைத்துக் கொள்ளவும்.

தேவையான பொழுது நான்கு மின் விளக்குகளையும் எரியவிடலாம்அல்லது இரண்டு மின் விளக்குகளை அணைத்துவிடலாம்இந்த அமைப்பினைத் தான் 'அடைகாப்பான்என்றுஅழைக்கின்றோம்இதை ஆங்கிலத்தில் 'புருடர்என்றுஅழைக்கின்றோம்.
இந்த புருடருக்குள் வான்கோழிகுஞ்சுகள் பொரித்த நாளிலிருந்துசுமார் 10 முதல் 14 நாட்கள் வரை வளர்க்கலாம்.

வெயில் காலமாக இருந்தால் செயற்கையாக மின்விளக்குகள்மூலமாக அளிக்கப்படும் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.அதாவது 2 மின்விளக்குகள் மட்டும் எரிய விடலாம்.மழைக்காலமாக இருந்தால் 4 மின்விளக்குகளையும்எரியவிடலாம்பகல் நேரத்தில் அதிக வெப்பம் இருந்தால்மின்விளக்குகளை அணைத்து விடலாம்இதைக் கண்டறிவதுமிகவும் எளிதுஉஷ்ணம் புருடரில் போதவில்லையெனில் எல்லாக்குஞ்சுகளும் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து இருக்கும்.

அப்பொழுது சூட்டை அதிகப்படுத்திடவேண்டும்செயற்கை வெப்பம்அதிகமாக இருந்தால் அடைக்காப்பானின் ஓரத்திற்குச் சென்றுவிடும்சுறுசுறுப்பற்ற நிலையுடன் காணப்படும்.மின்விளக்குகளுக்கு அடியில் வருவதற்கு தயங்கும்இதை உற்றுக்கவனித்தால் போதுமான சூடு அடைகாப்பானில் இருக்கிறதாஇல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும.
தாய்க்கோழி அளிக்கும் அளவிற்கே சூடு கொடுத்திட வேண்டும்.

புருடருக்குள் வான்கோழி குஞ்சுகள்:

குஞ்சுகளின் இறகுகள் முழுமையாக வளருவதற்கு பொரித்தநாளிலிருந்து சுமார் 3 வார காலமாகும்அதுவரை தன்னுடையஉடல் வெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளக் கூடியஅளவிற்கு மூளை வளர்ச்சி பறவையினத்திற்கு கிடையாது.அதற்காகத் தான் செயற்கை முறையில் வெப்பத்தை அளித்துவளர்க்கச் செய்கிறோம்அடைகாப்பான் பொருத்துவதுதாய்க்கோழியின் அரவணைப்பில் இருப்பது போன்ற அமைப்பைஏற்படுத்துவதற்குத் தான் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

வான்கோழிக் குஞ்சுகள் மிகக் குறைந்த காலத்தில் அதிக எடைபெறுவதால் அதனுடைய 2வது வார வயதிற்குள் உடல் முழுவதும்இறகுகள் வளர்ந்து விடும்.


ஆழ்கூள முறையில் வளர்க்கும் சமயத்தில் ரண்டாவதுவாரத்திற்குப் பறிகு அதாவது 10 முதல் 14வது நாளுக்குப் பின்அடைகாப்பானை நீக்கிவிட்டு ஒரு குஞ்சுக்கு 0.5 சதுர அடி இடவசதிஅளித்து வளர்க்கலாம்.

வான்கோழிக் குஞ்சுகள் மூன்று வார வயதிலிருந்து சுமார் ஐந்துவார வயதை அடையும் வரை படிப்படியாக இடவசதியைஅதிகரித்து ஒரு சதுர அடி இடவசதியும் அதற்குப்பின் 8 வாரவயதினை அடையும் சமயத்தில் 2 சதுர அடியும், 12 வார வயதினைஅடையும் சமயத்தில் 3 சதுர அடியும், 12 வார வயதினை அடையும்சமயத்தில் 3 சதுர அடியும் கொடுக்கவேண்டும்இடவசதிகுறைவாகக் கொடுத்தால் ஆழ்கூளம் ஈரமாகிவிடும்மேலும் பலநோய்ப்பிரச்சினை ஏற்படும்.


இனப்பெருக்கம்

செயற்கை முறைக் கருவூட்டல்:

சாதாரணமாக ஆண் வான்கோழிகள் அதிக எடை இருப்பதாலும்,இனச்சோர்க்கையில் அதிக நாட்டம் இல்லாமல் இருப்பதாலும்பெரும்பாலான சமயங்களில் முறையான இனச்சேர்க்கைநடைபெறுவதில்லைநல்ல முறையில் இனச்சேர்க்கைநடைபெறாத சமயத்தில் இடும் முட்டைகள் கருவுற்றமுட்டைகளாக இருக்காது.

எனவே இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காகவேசெயற்கை முறைக் கருவூட்டலைக் கையாளலாம்.

ஆண் கோழிகள் 9 மாத வயதானவுடன் அவைகளைப் பிடித்து மடிமீது உட்கார வைத்து ஒரு கையால் அவற்றின் வயிற்றுப்பகுதியையும் தேய்த்து விட்டால் ஆண் விந்து வெளிப்படும்.இவ்வாறு தொடர்ந்து பழக்கப்படுத்தி வந்தால் ஒரு மாதக் காலத்தில்ஆண் கோழிகள் நல்ல முறையில் செயற்கையாக விந்தினைஅளிக்கத் தொடங்கிவிடும்.

விந்துவுடன் எச்சம்சிறுநீர்தூசிஇரத்தம் ஆகியவைகலந்திருப்பதாலும் அதனைச் செயற்கைக் கண்ணாடிக் குவளையில்சேகரித்துஉடனடியாக 10 முதல் 15 நிமிடத்திற்குள் ஊசியாகசெலுத்தப்படும் குழாயின் மூலம் பெட்டைக் கோழியின்கருப்பையினுள் செலுத்திவிடவேண்டும்.


முட்டையிடும் பருவக் காலத்தில் வாரம் ஒரு முறை மாலைவேளைகளில் முட்டையிட்ட பிறகுசெயற்கை முறைக்கருவூட்டல் செய்தால்கிடைக்கும் முட்டைகள் அனைத்தும்கருவுற்று இருக்கும்.


ஒவ்வொரு முறையும் ஒரு ஆண் வான்கோழியிலிருந்துசெயற்கையாகக் கால் முதல் முக்கால் மில்லரி வரை விந்தினைப்பெற முடியும்இதைக் கொண்டு 10 முதல் 12 கோழிகளுக்குசெயற்கை முறைக் கருவூட்டல் செய்யலாம்.

மேலும் செயற்கை முறைக் கருவூட்டல் செய்யும் பொழுதுஅனைத்து வான்கோழிகளுக்கும் ஒரே நாளில் செய்யாமல் சுழற்சிமுறையில்குறிப்பிட்ட நாட்களில்குறிப்பிட்ட எண்ணிக்கையில்செய்வது நல்லது.


வான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும்தடுப்பு முறைகளும்:

வான்கோழிகளைப் பராமரிக்கும் முறைகளில ஏதேனும்குறைபாடுகள் இருந்தாலோ அல்லது அவற்றின் உடல்களில்எதிர்ப்புச் சக்தி குறைந்தாலோ நோய்கள் அதிக அளவில்தாக்குகின்றனஆனால்வான்கோழிகள் சில குறிப்பிட்டநோய்களுக்குகோழிகளைக் காட்டிலும் அதிக நோய் எதிர்ப்புச்சக்திக் கொண்டவை.

உதாரணமா நச்சுயிரி நோய்களான மேரக்ஸ் நோய் மற்றும் சிறுமூச்சுக் குழல் நோய்வான்கோழிகளைப் பெருமளவில்தாக்குவதில்லைஇராணிக்கெட்கோழி அம்மை மற்றும்ஒட்டுண்ணிகளால் ஏற்படும் இரத்தக் கழிச்சல் நோய்வான்கோழிகளைக் குறைந்த அளவிலேயே தாக்குகின்றனநோய்எதிர்ப்புச் சக்தி இருப்பினும்சில வகை நோய்களிலிருந்துவான்கோழிகளால் தப்ப முடிவதில்லை.

குறிப்பாகக் கோழிக் காலராகோழிடைபாய்டுமைகோபிளாஸ்மா,நீலக் கொண்டைகருப்புத்தலைஏரிசிபிலஸ் மற்றும்குடற்புழுக்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் தடுக்கும்முறைகளைத் தெரிந்து கொள்வோம்.


நோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும்அறிகுறிகள்
எந்தவகை நோயாக இருப்பினும்நோய் தாக்கப்பட்டவான்கோழிகள் சோர்ந்தும்சுறுசுறுப்பில்லாமலும்தீவனம்உட்கொள்ளாமலும்தண்ணீர் அருந்தாமலும் இருக்கும்இவைகள்பொதுவான அறிகுறிகள்.


ஆனால்வான்கோழிகள் சில குறிப்பிட்ட நோய்களால்பாதிக்கப்படும் போதுஅவற்றின் தன்மைக்குத் தகுந்தாற்போல்அறிகுறிகள் தென்படும்குறிப்பாகசுவாச உறுப்புகள் சம்பந்தமானநோயினால் பாதிக்கப்படும் போதுமூக்கிலிருந்து சளி ஒழுகிக்கொண்டும்கண்கள் வீங்கியும்நீர் வடிந்து கொண்டும் இருக்கும்.ஆனால்உணவுக் குழாய் சம்பந்தமான நோய்களால் அல்லதுகுடற்புழுக்களினால் பாதிக்கப்பட்டிருப்பின்வான்கோழிகளின்எச்சம் வழக்கத்தை விடக் கழிச்சலாகவோ அல்லது இரத்தம்கலந்தோ அல்லது வேறு நிறுத்துனோ காணப்படும்.

அதே சமயம் வெளிப்புற ஒட்டுண்ணிகள் அதிக அளவில்வான்கோழிகளைத் தாக்கும் போதுஅவற்றின் இறகுகள்பளபளப்பின்றி வறண்டும்தத்தம் அலகுகளினால் இறக்கைப்பகுதிகளையும்உடலையும் அடிக்கடி தேய்த்து விட்டுக்கொண்டிருப்பதையும் காணலாம்சிலநேரங்களில்இந்தஒட்டுண்ணிகள் இறகுகளில் ஒட்டிக் கொண்டிருப்பதையும்காணலாம்.
இளம் வான்கோழிக் குஞ்சுகளைப் பொறுத்தவரையில்எந்த ஒருநோயினால் பாதிக்கப்படும் போதும்போதிய அளவு வெப்பம்இருந்தாலும் ஒன்றொடொன்றுகூட்டமாக மோதிக்கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.


இராணிக்கெட் நோய்

நச்சுயிரி (வைரஸ்கிருமியினால் உண்டாகும் இந்த வகைநோயினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகள்வெள்ளை நிறத்தில்எச்சமிடுவதால்இது வெள்ளைக் கழிச்சல் நோய் எனவும்கூறப்படுகிறதுமுட்டையிடும் பருவத்தில் இருக்கும்வான்கோழிகள் பாதிக்கப்படும் போது முட்டையின் தரம்குறைவதுடன் அவைகள் இடும் முட்டைகளின் எண்ணிக்கையும்அதிக அளவில் குறைந்து விடுகின்றது.

அதிக எண்ணிக்கையில் இறப்பும் ஏற்படும்மீதமுள்ள பிழைத்தமுட்டையிடும் வான் கோழிகள் சுமார் நான்கு வாரங்களுக்குப் பின்,பழைய எண்ணிக்கையை அடைந்து விடும்அத்துடன்லேசானசுவாசக் கோளாறுகளுக்கான அறிகுறிகளும் தென்படும்.தேவையான தடுப்பூசியைப் போடுவதன் மூலம் இந்நோயிலிருந்துகோழிகளைக் காப்பாற்றலாம்.
அம்மை நோய்
இது வான்கோழிகளை அதிகமாகப் பாதிக்கும் நோயாகும்ஒருவகை நச்சுயிரியால் ஏற்படும் இந்நோய்கோழி அம்மை வகையைச்சார்ந்ததுபாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகளின் மூக்குவாய்,தலைகண்இமை ஆகிய பகுதிகளில் கொப்புளங்கள் போன்றுகட்டிகள் தோன்றும்தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் வராமல்தடுக்கலாம்இருப்பினும்கோழிகளைப் போல் நோய் எதிர்ப்புசக்தியானது நீண்ட நாட்களுக்கு நீடித்து இருப்பதில்லைமேலும் 3அல்லது 4 மாத இடைவெளியில் மீண்டும் தடுப்பூசி போடுவதன்மூலம் நோய்த் தாக்குவதைத் தடுக்கலாம்நோய் வந்த பின் போரிக்களிம்பை வேப்பெண்ணையில் கலந்து கொப்புளங்களில் தடவலாம்.


மூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை

நச்சுயிரியால் உண்டாகும் இந்த நோய்இளம் வான்கோழிக்குஞ்சுகளையே அதிகம் தாக்கக்கூடியதுமூக்கின் உட்பகுதியில்உள்ள எலும்புப் பகுதி பாதிக்கப்படுவதுடன் மூக்கின் சுவாசப் பாதைமுழுவதும் சளி அடைத்துக் கொள்வதால்மூச்சு விடுவதில் சிரமம்ஏற்படும்இவ்வாறு பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் சுமார் 10முதல் 15 சதவிகிதம் வரைஇத்துடன் எச்செரிச்சியா கோலைஎன்னும் பாக்டீரியா கிருமிகள் சேர்ந்து தாக்கும் போதுமூக்கில்இருக்கும் சளியானது சீழ்போன்று மாறுவதற்கான வாய்ப்புகள்அதிகமுண்டுஅத்துடன்கல்லீரலும்இதயமும் வீக்கத்துடன்இருப்பதையும் காணலாம்.

எரிசிபெலஸ்

இந்நோயினால் பாதிக்கப்பட்ட 13 வார வயதுக்கு மேற்பட்டவான்கோழிகளின் தலைப்பகுதியின் தோளில் சொறி போன்றபுண்கள் ஏற்படும்தலையின் மீது இருக்கும் சிறிய சதைப் பகுதிவீங்கிக் காணப்படும்இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆண்வான்கோழிகளின் விந்திலுள்ள உயிரணுக்கள்கருவுறச் செய்யும்தன்மையை இழந்து விடுகின்றனநோயினால் பாதிக்கப்பட்டவான்கோழிகளுக்குபென்சிலின் போன்ற உயிர்க்கொல்லி மருந்தைஊசி மூலம் செலுத்தலாம்.

கோழிக் காலரா

பாஸ்சுரெல்லா மல்டோசிடா என்னும் பாக்டீரியா கிருமிகளால்ஏற்படும் இந்த நோய்பத்து வாரங்களுக்கு மேற்பட்டவான்கோழிகளையே அதிக அளவில் தாக்கும்அப்போது, 50சதவிகிதத்திற்கு மேலாக இறப்பு நேரிடும்பாதிக்கப்பட்டவான்கோழிகளுக்கு நுரையீரல் பாதிப்பினால் சளிக்காய்ச்சல்ஏற்படும்.

மேலும்நோய்வாய்ப்பட்ட வான்கோழிகள் சோர்ந்தும்தீனிஎடுத்துக் கொள்ளாமலும்மூக்கு மற்றும் கண்ணிலிருந்து நிர்வடிந்து கொண்டும் இருக்கும்துர்நாற்றத்துடன் கூடிய கழிச்சலும்ஏற்படும்நாள்பட்ட நோயாக இருப்பின் மூச்சுத் திணறல்கால்நொண்டுதல்கழுத்து திருகிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகளும்தென்படும்.

இறப்பறிசோதனை மேற்கொள்ளும் போது உடல் பகுதி முழுவதும்அதிக அளவில் சிவந்து இருப்பதுடன் உள்ளுறுப்புகள் அனைத்தும்இரத்தப் புள்ளிகளுடன் காணப்படும்குறிப்பாககல்லீரலின் பலபகுதிகள் பாதிக்கப்பட்டு வெள்ளை நிறப்புள்ளிகளாகத் தோன்றும்.


கோழி டைபாய்டு:

சால்மொனெல்லா கேலினேரம் எனும் பாக்டீரியா கிருமிகளால்ஏற்படும் இந்நோய் குறிப்பாக வளரும் மற்றும் வளர்ந்தநிலையிலுள்ள வான்கோழிகளைத் தாக்கும்தீவனம் உண்ணாமை,சோர்வுகுறவைாக முட்டையிடுதல் போன்ற பொதுவானஅறிகுறிகள் காணப்பட்டாலும்நீர்த்த மற்றும் சளிக்கலந்தாற்போன்ற எச்சமே இந்த நோய்க்கான முக்கியமான நோய்அறிகுறியாகும்இந்த இளங்குஞ்சுகள் பாதிக்கப்படும் போதுமஞ்சள்நிறத்தில் எச்சம் காணப்படும்இறந்த கோழிகளைப் பரிசோதிக்கும்போதுஉடல் பகுதிகள் மஞ்சள் நிறத்துடனும்குறிப்பாகக் கல்லீரல்கருமைக் கலந்த சிவப்பில் மினுமினுப்பாகக் காணப்படும்.


சுவாச நோய்கள்

கொரைசா என்றழைக்கப்படும் இந்நோய் போர்ட்டெல்லா ஏவியம்என்னும் பாக்டீரியா கிருமிகளால் ஏற்படுகிறதுபாதிக்கப்பட்டவான்கோழிக் குஞ்சுகளின் கண்கள் சிவந்தும்மூக்கில் நீர்வடிந்துகொண்டும் காணப்படும்அவைகள் மூச்சு விடும் போது இலேசானஇரைச்சல் ஏற்படும்இறந்த கோழிகளில் இறப்பறி சோதனைமேற்கொள்ளும் போதுமூக்கின் துவாரங்களில் சளி அடைத்துக்கொண்டிருப்பதைத் தெளிவாகக் காணலாம்சுமார் 5 வாரவயதுடைய கோழிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.இருப்பினும்முட்டையிடும் தருணத்தில் இந்த நோய் காணப்படும்போது தும்மல் அதிக அளவில் ஏற்படுகிறது.
இரத்தக் கழிச்சல் நோய்

அடினோ வைரஸ் எனப்படும் நச்சுயிரியால் ஏற்படும் இந்த நோய்35 முதல் 50 நாட்களுக்குட்பட்ட வான்கோழிகளைத் தாக்கும் .பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு இரத்தத்துடன் கூடிய கழிச்சல்ஏற்படும்அதனால் கோழிகளின் பின்பக்க இறகுகள் இரத்தம்பட்டுக்காய்ந்து இருப்பதைக் காணலாம்இரத்தப் போக்கு அதிகம்இருப்பதால்கோழிகள் அதிகம் இறப்பதற்கு வாய்ப்புண்டுஇறந்தகோழிகளைப் பரிசோதிக்கும் போதுஇரத்தச் சோகையால் உடல்வெளிறிக் காணப்படும்.

முகவீக்க நோய்:

மைக்கோப்ளாஸ்மா என்னும் கிருமிகளால் ஏற்படக்கூடியஇந்நோயானது மூக்குப் பகுதியில் காணப்படும் மென்மையானகுருத்தெலும்புகளைப் பாதிக்கின்றதுஅப்போதுஅதிக அளவில்அப்பகுதியில் சளி கட்டிக்கொள்வதால்முகம் வீக்கமடைந்துகாணப்படும்இறந்த கோழிகளைப் பரிசோதிக்கும் போதுகண்ணாடிபோல் காட்சியளிக்க வேண்டிய காற்றுச் சவ்வானது சற்றேஅழுக்கடைந்த நுரையுடன் காணப்படும்இந்நோயானதுமேலும்நாள்படும் போது காற்றுச் சவ்வுகளில் மாவு போன்ற பொருட்கள்ஒட்டிக் கொண்டு இருப்பதைக் கண்கூடாகக் காணலாம்இதுவே,இந்நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்மேலும் காலில்மூட்டுகளும் பாதிக்கப்பட்டு நீர் கோர்த்துக் கொள்ளும்.


பூஞ்சை நோய்கள்:

அஃப்ளோ நச்சு என்பதுஒரு வகைப் பூஞ்சைக் காளானிலிருந்துஉற்பத்தியாகக் கூடியதுகல்லீரலையே குறியாக வைத்துத்தாக்கக்கூடிய இந்த நச்சினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகள்சோர்ந்தும்தீனி எடுத்துக் கொள்ளாமலும்இறக்கைகள் தளர்ந்தும்காணப்படும்மேலும்இறந்த வான்கோழிகளைப் பிரேதஇறப்பறிசோதனை செய்து பார்த்தால்உடல்பகுதி முழுவதும்சிவந்து வீக்கத்துடன் இருப்பது தெரியவரும்கல்லீரல் அளவில்பெருத்தும் சற்று தொட்டுப் பார்த்தால் கடினமாகவும் இருக்கும்.


கருப்புத்தலை நோய்:

இந்து நோய் ஹிஸ்டோமோனாஸ் மெலியாகிரிடிஸ் எனும் ஓரணுஉயிரணுவால் ஏற்படக்கூடியதுஇக்கிருமிகள்குடல் மட்டும்ஈரலைகடுமையாகப் பாதிப்பதால்இரண்டு அல்லது மூன்றுநாட்களில் வான்கோழிகள் அதிக அளவில் இறந்து விடும்.அவைகள் மஞ்சள் நிறத்தில் எச்சமிடும்இந்நோய்உருண்டைப்புழுவின் முட்டைகளின் மூலமாகத் தீவனத்துடன் கலந்து,வயிற்றை அடைந்து நோயை உண்டாக்குகிறதுஆகவேஇந்நோய்வராமல் தடுக்க முறையான குடற்புழு நீக்க மருந்து கொடுத்துவரவேண்டும்.
இரைப்பை வீங்கித் தொங்குதல் இரைப்பை தளர்ச்சியுறுவதேஇவ்வகை நோய் ஏற்படுவதற்குக் காரணம்.

குறிப்பிட்ட சில வகையைச் சார்ந்த வான்கோழிகளிடையே இதுபரம்பரை நோயாகக் காணப்படுகிறதுஆனால் கடும் வெயில்காலங்களில் போதுமான அளவு தண்ணீர் கொடுக்காதிருப்பதே மிகமுக்கியக் காரணம் ஆகும்இச்சமயத்தில்வான்கோழியின்இரைப்பை பெரிய கால்பந்து அளவில் கூட வீங்கி விடும்இதுபோன்ற நோயுள்ள வான்கோழி இடும் முட்டைகளையோ அல்லதுஆண் வான் கோழிகளால் அணைந்து கிடைக்கும்முட்டைகளையோ அடை வைத்துப் பொரிக்காமல் இருப்பதுநல்லது.


நீலக்கொண்டை நோய்:
கரோனா எனும் நச்சுயிரியால் ஏற்படும் இந்த நோயால்பாதிக்கப்பட்ட வான்கோழிகளின் தலைப்பகுதியும்தோல் பகுதியும்கருப்பு நிறத்தில் மாறிவிடும்பாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகள்சோர்வுடன் தீவனம் உண்ணாமல் இருக்கும்பச்சை நிறம் கலந்தபழுப்பு நிறத்தில் எச்சமிருக்கும்உயிர்க்கொல்லி மருந்துகளுடன்வைட்டமின்கள்தாது உப்புகள் கலந்து அளிக்கவேண்டும்.


வான்கோழிகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் முறைகள்:

அனைத்துத் தடுப்பூசிகளையும் உரிய காலத்தில் போடவேண்டும்.

தரமான குஞ்சுகளைச் சிறந்த பண்ணைகளிலிருந்துவாங்கவேண்டும்.

வான்கோழிகளைப் பராமரிக்கும் இடம்தண்ணீர் தேங்காதபகுதியாக இருக்கவேண்டும்.

நோய் தாக்கப்பட்ட பண்ணைகளிலிருந்துவான்கோழிக்குஞ்சுகளை வாங்கக்கூடாது.

பண்ணைகளை எலித் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கவேண்டும்.

குடற்புழு நீக்க மருந்தை மாதம் ஒரு முறை கொடுப்பதன் மூலம்அக உண்ணிகளையும்தக்க மருந்து கலந்த நீரில் வான்கோழிகளைநனைத்து எடுப்பதன் மூலம் புற உண்ணிகளையும்கட்டுப்படுத்தவேண்டும்.

சுத்தமான தண்ணீர் மற்றும் தீவனத்தை அளிக்கவேண்டும்.

இறந்து போன வான்கோழிகளையோகுஞ்சு பொரித்தமுட்டைகளையோ உடனுக்குடன் அப்புறப்படுத்தி புதைத்தோஅல்லது எரித்தோ விடவேண்டும்.

நோய்களுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட ஆரம்பித்தாலோஅல்லது வான்கோழிகள் ஏதேனும் இறந்து விட்டாலோஉடனேகால்நட மருத்துவரை அணுகி இறந்த வான்கோழிகளைஇறப்பறிசோதனை செய்து எந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுஎன்பதை அறிந்து மற்றக் கோழிகளுக்கு அந்நோய் பரவாதவண்ணம் தடுப்பு மருந்தைக் கொடுக்கவேண்டும்.

வான்கோழிகளை விற்பனை செய்தபின்ஒவ்வொரு முறையும்ஆழ்கூளம்எச்சம் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்திபண்ணையைகிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அந்தந்தப் பகுதிகளில் ஏற்படக்கூடிய பொதுவான நோய்களுக்குத்தகுந்தவாறு தடுப்பூசி போட்டுவான்கோழிகளுக்குப் போதியபாதுகாப்பு அளிக்கவேண்டும்.

குறிப்பாகஇராணிக்கெட் நோய்க்கான லசோட்டா அல்லது ஆர்டிஎப்தடுப்பூசியை 2-7 நாட்களில் கண் அல்லது மூக்கில் இரண்டுசொட்டும்ஆர்டிவிகே என்னும் தடுப்பூசியை 8வது வாரத்தில்,இறக்கையில் ஊசி மூலமும் அளிக்கவேண்டும்அதே போல்,அம்மை நோய்க்காகஎப்பிவி என்னும் தடுப்பு மருந்தைஇறக்கையில் ஊசி மூலம் 2-3 வது வார வயதில்கொடுக்கவேண்டும்.

மேலே கூறியவாறு சரியான நேரத்தில் நோய்க்கானகாரணங்கைளக் கண்டறிவதன் மூலம் சரியான நடவடிக்கைகளைமேற்கொள்வதன் மூலமும் வான்கோழிகளை நோய்களின்தாக்கத்திலிருந்து பாதுகாத்து இலாபகரமான முறையில் பண்ணைத்தொழிலை மேற்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக