View status

View My Stats

திங்கள், 7 மார்ச், 2022

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

 ஒருநாள் ஹஸ்ரத் மாமா சொன்னார்கள்:


கோபம் என்பது ஒரு நி’அமத் (அருட்கொடை) ஆகும்.


எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். கோபம் ஒரு அருட்கொடையா? கோபப்படக்கூடாது என்றுதானே எல்லாரும் சொல்வார்கள். ஆனால் மாமா ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?!


எப்படி கோபம் ஒரு அருட்கொடையாகும் என்று கேட்டோம். 


கோபம் வந்தால்தானே கோபத்தை அடக்க முடியும்? கோபத்தை அடக்கி ஆள்கின்ற வாய்ப்பு எப்போது வருகிறது? கோபம் வரும்போதுதானே? 


நீ காட்டிலே போய் தனியாக இருந்தால் உனக்குக் கோபம் வருமா? 


சமுதாயத்தில், குடும்பத்தில் இருக்கும்போதுதானே அந்த வாய்ப்பு வரும்? 


அப்படியானால் கோபத்தை அடக்கி ஆள்கின்ற வாய்ப்பை கோபம்தானே கொடுக்கிறது? அதனால்தான் கோபம் ஒரு நிஅமத் (அருட்கொடை) என்று சொன்னேன் என்றார்கள்!


கோபம் ஒரு அருட்கொடையோ இல்லையோ ஹஸ்ரத் மாமா எங்களுக்குகெல்லாம் கிடைத்த ஒரு அருட்கொடைதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக