View status

View My Stats

திங்கள், 7 மார்ச், 2022

கற்பனை

 கற்பனை என்பது நிஜம்தான். திரைபோடப்பட்ட நிஜம். திரையைக் கிழித்துவிட்டு கற்பனை செய்யுங்கள். 

பெரிய காரியத்தை அலட்சியப்படுத்த முடியுமெனில் அதை எளிதாகப் பெறமுடியும். அப்படிச் செய்ய கற்பனையின் ஆற்றல் வளர வேண்டும். 

மனித மனதால் எதை கற்பனை செய்ய முடியவில்லையோ அதை அடைய முடியாது. 

எந்தக் காரியத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை மன ஓர்மையுடன் செய்யவேண்டும். 

அதற்கு அந்த வேலையில் ஆர்வம், உற்சாகம் எல்லாம் வேண்டும். 

உற்சாகம் வருவதற்கு முதலில் கற்பனை வேண்டும். எனவே கற்பனையில்தான் நாம் தொடங்கவேண்டும். 

நாம் எதைக் கற்பனை செய்கிறோமோ அது அப்படியே நடக்கும். 

கற்பனை செய்யும்போது இல்லாத பொருளை இருப்பதாகவே செய்யவேண்டும். 

இதற்கு என்ன அர்த்தமெனில், இதுவரை நாம் அனுபவித்து வந்த இன்ப துன்பங்களுக்கெல்லாம் காரணம், இல்லாத, நடக்காத ஒன்றை இருப்பதாகவும் நடப்பதாகவும் நாம் நினைத்ததுதான். 

நினைவாற்றல் வளர்ச்சியடைந்திருந்தால் இது நன்றாக விளங்கும். எந்த நேரத்தில் நினைத்த எந்த நினைப்பு எந்த விளைவை உண்டாக்கி இருக்கிறதென விளங்கும். 

Supernatural Forces என்று சொல்லப்படும் அற்புத சக்திகள் அனைத்துமே கற்பனைதான். ஆனால் அது நம்மைப் பொறுத்தவரை நிஜமாக மாறிவிடும். அப்போதுதான், நம்மைச்சுற்றி, நமக்குள்ளேயே இவ்வளவு சக்திகள் உள்ளனவா என்பது விளங்கும். 

எந்தெந்த வகையிலெல்லாம் இச்சக்திகளைப் பயன்படுத்தலாம் என்பதற்கு எல்லையே கிடையாது. நம்முடைய கற்பனையை கிண்டல் செய்கிறவனும் தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த கற்பனையைத்தான் செய்துள்ளான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக