View status

View My Stats

திங்கள், 7 மார்ச், 2022

எங்கள் ஞானாசிரிய ஹஸ்ரத் மாமா சொன்னதிலிருந்து

 செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும் / Dos and Don’ts

Don’ts

1. நான் பேசிக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு வருகின்ற எண்ணங்களை வைத்து எனக்கு உதாரணம் காட்டுவதோ, ஒத்து ஊதுவதோ கூடாது. 

2. ஒருவரிடம் கேட்கும்போது இன்னொருவர் அதற்கு பதில் சொல்லக்கூடாது.

3. என்னைப் பாராட்டிப் பேசுவது கூடாது.

4. ஆச்சரியப்படக்கூடாது, அதிகமாக  சந்தோஷமும் படக்கூடாது.

5. அவசரப்படக்கூடாது.

6. எரிச்சல் / பொறாமை கூடாது

7. தக்க காரணம் இல்லாமல் எந்தச் செயலையும் [பாதியில்] விட்டுவிடக்கூடாது. அலுப்பு காரணமாக விட்டால் போச்சு. 

8. எந்த விளைவுக்கும் – நல்லதோ கெட்டதோ – இதுதான் காரணமென்று முடிவு செய்துவிடக் கூடாது. 

9. குரு வந்த பிறகு, சொந்த புத்திக்கு இடம்தரக்கூடாது. 

10. எதிர்பார்ப்பு கூடாது.

11. கடன் வாங்கிவிட்டு திருப்பிக்கொடுக்காமல் இருக்கக்கூடாது. அந்தப் பணத்தை rotation-லும் விடக்கூடாது. 

12. Bed-coffee, tea எல்லாம் குடிக்கக்கூடாது.

13. நிர்வாணமாகக் குளிக்கக்கூடாது.

14. கையை நீட்டக்கூடாது. அது திருட்டு அல்லது பிச்சை.

15. ’என்னவோ நினைத்தேன்’ என்பது போலெல்லாம் பேசக்கூடாது. 

16. ஒரு காரியத்தில் வெற்றியடைய நேர்மறையான உணர்வைத்தான் உந்து சக்தியாக வைக்கவேண்டும். பொறாமை, பழி உணர்ச்சி போன்ற எதிர்மறை எண்ணங்களை வைக்கக்கூடாது. 

17. சாப்பிடும்போது பேசக்கூடாது.

18. என்ன வருமானம் என்று கேட்பதும் / சொல்வதும் கூடாது.

19. தொட்டுப்பேசக்கூடாது. அது பெண்மை. 

20. Rationlaisation [செய்த செயலை நியாயப்படுத்துவது], Projection [ஒருவர்மேல் கொண்ட எதிர்மறை உணர்ச்சியை, வெறுப்பை, கோபத்தையெல்லாம் இன்னொருவர் மேல் காட்டுவது], Inhibition [இது கூடாது, அது கூடாது என்று நம்மை நாமே தடை செய்துகொள்ளும் தேவையற்ற தடையுணர்ச்சி] – இம்மூன்றும் [நமது பாதையில்] கூடாது. 

21. மனதில் தோன்றுவதையெல்லாம் உடனுக்குடன் செய்துவிடக்கூடாது.

22. பேசும்போது கையசைப்பது, சாப்பாட்டுத் தட்டில் உள்ள அப்பளத்தை எடுத்து கடித்துப் பார்ப்பது, இனிப்பை எடுத்து சுவைத்துப் பார்ப்பது – இதெல்லாம் கூடாது. 

23. அரித்தால் உடனே சொரியக்கூடாது. அரிப்பு போகாவிட்டால் மெதுவாக, உணர்ந்து சொரியலாம். இப்படியெல்லாம் செய்தால் நம்மை தொந்தரவு செய்வதை நம்முடைய Conscious விட்டுவிடும். Sub-conscious வேலை செய்ய ஆரம்பிக்கும். 

24. பேசும்போது நம் கண் அலையக்கூடாது. எதிராளியின் கண்ணையும் அலையவிடக்கூடாது.

25. தன்னை மறந்து சிரிப்பதும், அரட்டையடிப்பதும் கூடாது. அது வெற்றியின் தலையில் கல்லைத் தூக்கிப் போடுவதாகும்.

26. பேசும்போது, ‘ஆனால், ‘வந்து’ என்றெல்லாம் சொல்லக்கூடாது.

27. ஒரு காரியத்தை ஆரம்பித்து அரைகுறையாக நிறுத்தக்கூடாது. அப்படிச் செய்தால் அது மற்ற காரியங்களையும் முடிக்க விடாமல் செய்துவிடும்.

28. நெருங்கிய நண்பர்களிடம் பேசினாலும், அடுத்தவர்கள் மீது பழிகூறிப் பேசக்கூடாது.

29. வேதனையான, வெறுப்பை உமிழும் உணர்வுகளையெல்லாம் [unpleasant emotions] வெளிப்படுத்தக்கூடாது. 

30. லாடம் கிடைத்தவுடன் குதிரை வாங்க நினைக்கக்கூடாது. [புறத்தூண்டுதலின் பேரில் ஒரு ஆசையை வளர்த்துக்கொள்ளக்கூடாது].

31. நேரம் கெட்ட நேரத்தில் ஃபோன் பேசுவது, விஜயம் செய்வதெல்லாம் கூடாது. அது தோல்வியைத்தரும். 

32. அடுத்தவர் பணம் எண்ணும்போது பார்க்கக்கூடாது. அது நமக்கு உரிமையில்லாத அழகான பெண்ணை ரசிப்பதைப் போன்றது. நம்மிடம் இல்லையே என்ற ஏக்கம் வந்துவிடும்.

33. கடைப்பேச்சை வீட்டுக்கும், வீட்டுப்பேச்சை கடைக்கும் கொண்டு போகக்கூடாது. [கடை என்பது அலுவலகம் / தொழிலுக்கான குறியீடு].

34. ஒரு விஷயத்தில், ‘இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று அடுத்தவருடைய கருத்தைக் கேட்கக் கூடாது. 

35. மக்களிடம் காட்டுவதற்காக செலவு செய்யக்கூடாது.

36. மனைவிக்கு ஆலோசனை வார்த்தையால் சொல்லக்கூடாது. 

37. மகிழ்ச்சி வருவது தவறல்ல. ஆனால் பத்து வினாடிகளுக்கு மேல் அதை அனுமதிக்கக்கூடாது.

38. உணர்ச்சிவசப்படாமல் / ரொம்ப சந்தோஷப்பட்டுவிடாமல் வரவிட்ட பணத்தை ஏற்கனவே போட்ட திட்டப்படிதான் செலவு செய்யவேண்டும். கூடுதலாக, புதிதாக எதுவும் செய்யக்கூடாது.

39. டென்ஷனாக உள்ளபோது அசையக்கூடாது.

40. இஸ்முகளை / மந்திரங்களை மெட்டு போட்டும், அர்த்தம் பார்த்தும் ஓதக்கூடாது. 

41. அடுத்தவரின் சாப்பாட்டைப் பார்க்கக் கூடாது.

42. குழப்பத்தோடு வெளியில் போகக்கூடாது. [அதை நீக்கிவிட்டுப் போகலாம்].

43. எதற்கெடுத்தாலும் ஆண்டவனைக் கூப்பிடக்கூடாது. அது அவனுக்கே சலிப்பை ஏற்படுத்தும்.

44. வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி உற்சாகத்தோடு வெளியில் சொல்லக்கூடாது. அடுத்த காரியம் நடக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக