View status

View My Stats

சனி, 6 மார்ச், 2021

என் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து 

உங்களுக்கு என்ன வேண்டும் என்று crystal clearஆகப் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் தமிழிலேயோ அரபியிலேயோ வசனம் பேசினால் அல்லாஹ்வுக்குப் புரியாது. உங்களுக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும்? (என்று முடிவு செய்துவிட்டு) மனதை அப்படி (அதன் பக்கம்) செலுத்துங்கள். You have the privilege of thinking what you want which is the greatest privilege. நமக்கு எது வேண்டுமோ, அதை நினைக்க, அதற்கு ஆசைப்படும் சக்தி, எப்போது வரும்? ஆசைப்பட்டால் கிடைக்கும் என்று இருந்தால்தான் வரும். 

பெரிய மினாரா மேல் ஏற வேண்டும் என்ற ஆசை பெரிய மினாரா இல்லாவிட்டாலோ, அதன் கடைசி கும்பம் இல்லாவிட்டாலோ வராது. எனவே, உங்களின் தாழ்வு மனப்பான்மை ‘கட்’ ஆகும்போதுதான் அடைய முடியும் என்ற நம்பிக்கையே வரும். 

ஆசைப்படுவது

உங்கள் வாழ்க்கைக்கு சமீப காலத்தில் என்ன வேண்டுமோ அதைப் பற்றிக் குழப்பமில்லாமல், பயப்படாமல், அவசரப்படாமல், அதை விளக்கமாக கற்பனை செய்யுங்கள். அப்படிச் செய்வதற்கு முன்னால் நீங்கள் சாய்ந்துகொண்டு, கோணிக்கொண்டெல்லாம் இருக்கக்கூடாது. ஏனெனில் நீங்கள் அடைய நினைப்பதை பற்றி ஆசைப்படுவதுதான் பெரிய இபாதத். ஆசையும் ஒரு வகையான பிரார்த்தனைதான் என்று ஒரு நூலில் எழுதியிருக்கிறேன். உலமாக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்களென்றுதான் அப்படி எழுதினேன். உண்மையில், பிரார்த்தனை என்று சொன்னாலே ஆசை என்றுதான் அர்த்தம். ஆசைப்பட்டாலே அது துஆவாக மாறிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக