View status

View My Stats

சனி, 6 மார்ச், 2021

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்ன சில முத்துக்கள்
=========================================
மனதை கூர்மையாகத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆண்டவன் படைத்துள்ளான். (ஆனால் நாம்தான்) அதைக் கெடுத்துவிட்டோம். குப்பைகளைப் போட்டு மூடி வைத்துவிட்டோம்.  
இந்த குப்பைகளை அகற்றுவதுதான் நாம் கொடுக்கும் பயிற்சிகளாகும்.  We are all-knowing and all-powerful. எல்லா ஞானமும் எல்லா சக்தியும் இருக்கிறது. எதையும் நம்மால் அடைய முடியும். 
சிலது கிடைக்கிறது, சிலது கிடைக்கவில்லை என்றால் ஏன்? கிடைப்பதைவிட நீங்கள் பெரிசு என்ற நினைப்பும், கிடைக்காவிட்டால், அதைவிட உங்களை நீங்கள் சின்னதாகவும் நினைக்கிறீர்கள் (என்று அர்த்தம்). இந்த (மாதிரியான) நினைப்பே குப்பை (யாகும்). 
உங்களிடம் பத்தாயிரம் ரூபாய் இருந்தால், ஒருவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்குவது எளிது. 
உங்களிடம் ஒரு பைசா கூட இல்லாமலிருந்தால் நூறு ரூபாய்கூட கடன் வாங்க முடியாது 
(காரணம் பணம் இருக்கும்போது உள்ள மனநிலை, பணம் இல்லாதபோது இருக்காது). 
தீர்ந்த ஆசை இருந்தால், தீர்ந்த எண்ணம் இருக்கும், தீர்ந்த எண்ணம் இருந்தால் தீர்ந்த குரலிருக்கும். 
அப்படி இருக்குமானால், ஒரு பொருளை எண்ணியவுடன் அது (எங்கிருக்கிறதோ) அங்கிருந்து கிளம்பி வருவது தெரியும். 
அதனால்தான் வெற்றி அடைவதற்கு சக்தி கொஞ்சம்தான் தேவை, தோல்வி அடைவதற்குத்தான் சக்தி அதிகமாகத் தேவை என்று சொன்னேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக