View status

View My Stats

சனி, 6 மார்ச், 2021

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து:
===============================================
தன்னைப் பார்ப்பது -- 
ஒரு பிரச்சனையை எடுத்து வைத்துக்கொண்டு நேருக்கு நேராக அதனோடு மோதுவதுதான் தன்னைப் பார்ப்பதென்பதாகும். [கையில் ஏற்படும் வலியை எப்படி குணப்படுத்துவது என்ற பயிற்சியை உதாரணம் காட்டுகிறார்கள்]. 
ஒத்திப் போடுதல் – 
எந்தக் காரியத்தை இப்போது செய்ய வேண்டாமென்று ஒருவன் ஒத்திப் போடுகிறானோ அந்தக் காரியத்தில்தான் அவனது வெற்றி இருக்கிறது. 
ஏன் சுவைக்கிறோம்? – 
இன்பமோ துன்பமோ வரும்போது அதை ஏன் நாம் சுவைக்கிறோம்? [அதில் சந்தோஷமோ துக்கமோ அடைகிறோம்]. எல்லாவற்றையும்விட நான் பெரியவன் என்பதில் போதிய நம்பிக்கை இன்னும் வரவில்லை என்பதால்தான். 
இரண்டு காரணங்கள் – 
ஒரு மனிதன் ஒரு விஷயத்தைப் பற்றி திரும்பத்திரும்பப் பேசுவதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று சந்தோஷம், இரண்டு, நடக்காமல் போய்விடுமோ என்ற அச்சம். 
பேச்சு – 
எவன் பேச்சை பிசிறின்றி சுத்தமாகப் பேசுகிறானோ அவன் வாழ்வும் பிசிறின்றி சுத்தமாக ஓடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக