View status

View My Stats

சனி, 6 மார்ச், 2021

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து
===============================
• நம்மிடம் அறிவிருக்கிறது என்று காட்டுவதும் வழித்துக்கொண்டு காட்டுவதும் ஒன்று. 
• நீங்கள் சாய்ந்து கொண்டிருப்பது அல்லாஹ்வின் முதுகில் என்று உங்களுக்குத் தெரியவில்லை.
• வாழ்க்கையில் தோல்வி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதில் பாதி இருந்தால் போதும் வெற்றி அடைந்துவிடலாம். 
[அதாவது, தேவைக்கு அதிகமான சக்தியை தவறான திசையில் செலவழிப்பதன் விளைவாக நாம் நம் முயற்சிகளில் தோற்றுக்கொண்டுள்ளோம்].  
• வாழ்வில் உங்களுக்குப் பிரச்சனைகள் உள்ளதா? நீங்கள் கொடுத்துவைத்தவர்தான். [அப்போதுதானே பிரச்சனைகளைத் தீர்க்கும் சக்தி உங்களிடம் உள்ளதை உணர்ந்துகொள்ளலாம்]. 
• அடைந்து இழந்த ஒன்றை திரும்ப அடைவது முதன் முதலாக அடைவதைவிட கஷ்டம். 
• அமைதி என்பது உணர்ச்சி கலக்காமல் இருப்பதுதான்.
• ஓதும்போது, அர்த்தம் பார்த்தும், மெட்டுப் போட்டும் ஓதக்கூடாது. 
[அப்படி ஓதினால் கவனம் / மனம் நமக்கு அர்த்தம் தெரிகிறது என்ற அகந்தையிலும், ராகம் பாடுவதிலும் சென்று ஓதும் நோக்கத்தையே கெடுத்துவிடும்]. 
• மூன்று ‘ஷன்’கள் கூடாது. Procrastination, Projection and Rationalization. 
ஒத்திப்போடுவது, 
ஒருவர் மீது உள்ள கோபத்தை (எதிர்மறை உணர்ச்சியை) இன்னொருவர்மீது காட்டுவது, 
செய்த தவறை நியாயப்படுத்துவது 
– இந்த மூன்றும் ஆன்மிகப் பாதையில் ஹராம் [செய்யவே கூடாதவை] ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக