View status

View My Stats

சனி, 6 மார்ச், 2021

எங்கள் ஞானாசிரியர் ஹஸ்ரத் மாமா சொன்னவற்றிலிருந்து கொஞ்சம்
======================================================

தெய்வத்தன்மைக்கு வளர்ச்சியில்லை என்று இதற்குமுன் சொல்லியிருக்கிறேன் – அப்படியானால் எப்படி வளருமென்று கேட்டால், இப்போது நம்மிடம் உள்ளது fully developed தெய்வத்தன்மைதான். அப்ப ஒவ்வொரு ஆளிடமும் குறிப்பிட்ட அளவுதான் தெய்வத்தன்மை இருக்கிறதென்று எந்த அர்த்தத்தில் சொன்னேன்? Fully developed-ஆக perfect தெய்வத்தன்மைதான் இருக்குமென்றால், ஒவ்வொரு மனிதரிடமும் குறிப்பிட்ட சதவீதம்தான் தெய்வத்தன்மை இருக்குமென்று நான் எப்படிச் சொன்னேன்? 

அவனவன் நெஞ்சில் இருக்கின்ற குப்பைகளின் அளவைப் பொறுத்து தெய்வத்தன்மை மறைந்திருக்கும் (என்று அர்த்தம்). 

எல்லாரிடத்திலும் நெருப்பிருக்கிறது. ஆனால் உங்களிடம் பூத்திருக்கும் நீரு இரண்டு இஞ்ச்சுக்கு மொத்தம். நெருப்பு இருக்கிறதென்று ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. இவருக்கு உள்ள குப்பைகளோ இரண்டரை அடிக்கு இருக்கிறது. அதைத்தாண்டி தெய்வத்தன்மையை (இருப்பதை) பார்க்க முடியவில்லை. அது தெய்வத்தன்மையின் பலவீனமல்ல. மனிதனுக்குள் அடைபட்டதன் காரணமாக, அதன் விதிகளுக்கு உட்பட்டு அது நிற்கிறது. 
 
நீங்கள் செய்யக்கூடிய conscious பயிற்சிகளின் காரணமாக, அந்த குப்பைகளெல்லாம் தனக்குத்தானாகவே நீங்க ஆரம்பிக்கிறது. அதன்பிறகு ஏற்கனவே பரிபூரண நிலையில் இருக்கும் தெய்வத்தன்மை வெளிவர ஆரம்பிக்கும். 

அப்படியானால், ஆன்மிகப் பயிற்சி என்பது புதிதாக ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கல்ல. மறைந்து கிடப்பதை வெளிக்கொண்டுவருவதுதான். தோண்டி எடுப்பதுதான். Inventionக்கும் discoveryக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல. முன்னது புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பது / உருவாக்குவது. பின்னது ஏற்கனவே உள்ளதை / மறைந்துள்ளதை மீண்டும் கண்டெடுப்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக