View status

View My Stats

புதன், 28 பிப்ரவரி, 2024

புத்தர் பேசுகிறார் - 2


• வழி வானத்தில் இல்லை. இதயத்தில் இருக்கிறது. 
• நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நாம். எல்லாமே எண்ணத்தில்தான் தொடங்குகிறது. 
• செய்யவேண்டியதையெல்லாம் இன்றே செய்துவிடு. நாளைக்கு இறப்பு வந்துவிடலாம்.
• ஒவ்வொரு செயலையும் முழுமையாகச் செய், இதுதான் உன் கடைசிச் செயல் என்பதைப்போல.
• எதிலும் ஒட்டிக்கொண்டிருப்பதில்தான் துன்பத்தின் வேர் உள்ளது.
• நதிகளிடமிருந்து கற்றுக்கொள். சிறு சிறு வழிகளில் ஓடும் தண்ணீர் சப்தமிட்டுக்கொண்டே செல்லும். ஆனால் பெரும் ஆறுகள் அமைதியாகப் பயணிக்கும். முழுமையற்றதெல்லாம் சப்தமிடுகிறது. பரிபூரணமானதெல்லாம் அமைதியாக இருக்கிறது. 
• கோபமடைவது என்பது அடுத்தவரின் தவறு உன்னை தண்டிக்க அனுமதிப்பதாகும். 
• சந்தோஷத்துக்கான வழி எதுவுமில்லை. வழியே சந்தோஷம்தான். 
• ஆன்மிகப்பாதையில் உனக்கு ஆதரவளிக்க யாருமில்லையெனில், தனியாகவே போ. 
• தாமரை இலைமேல் தண்ணீரைப்போல எதிலும் ஒட்டாமல் இரு. 
• வேதனை நிச்சயமானது. ஆனால் வேதனைப்படவேண்டுமா என்பது உன் விருப்பம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக