View status

View My Stats

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

ஹஸ்ரத் மாமா பேசுகிறார்கள்

குழந்தையைத் தூங்க வைப்பதென்பது பொறுப்புதானே தவிர கவலையோ வேதனையோ பிரச்சனையோ அல்ல. 

கொஞ்சத்தெரியாவிட்டால், தூங்க வைக்கத்தெரியவிட்டால், தூங்க மாட்டேன் என்று குழந்தை பிடிவாதம் பிடித்தால் அது பிரச்சனையாகலாம். 

நான் சொல்வது உங்களுக்குப்புரியாவிட்டால் அது பிரச்சனை. விளக்குவதற்கு எனக்குப் பாதை கிடைக்காவிட்டால் அது பிரச்சனை. நான் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு அதைச் செய்யாமலிருந்தால் அது இன்னும் பெரிய பிரச்சனை. 

இதேபோல மார்க்கத்தைப் பார்ப்பீர்களேயானால், ஏற்கனவே நீங்கள் புரிந்துகொண்ட மார்க்கம் வேறாகவும் நான் சொல்வது வேறாகவும் இருக்கும். 

அப்படியானால் மார்க்கத்தைப் போதித்த உலமாக்கள் ஏன் இப்படியெல்லாம் சொல்லவில்லை? 

காரணம் இரண்டு: ஒன்று அவர்களுக்கே புரியவில்லை. இரண்டு, அவர்களுக்குப் புரிந்துள்ளது, ஆனால் சொன்னால் மக்களுக்கு புரியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஏனெனில் மக்களில் பலர் தம் பிரச்சனைகளை அவர்களிடம் கொண்டுசெல்லவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக