View status

View My Stats

வியாழன், 12 நவம்பர், 2015

'கான்கிரீட் காட்டில் ஓர் தோட்ட வீடு'...! சாதித்து காட்டிய 'முகப்பேர் சிங்'

சிறியதாக ஓர் மாடித்தோட்டம் அமைத்து, அதை பராமரிக்கவே, மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில், வீட்டைச் சுற்றியும், வீட்டின் மாடியிலும், நூற்றுக்கும் மேற்பட்ட தாவர வகைகளை கொண்டு, தோட்டம் அமைத்து முப்பது ஆண்டுகளாக அவற்றை பராமரித்து வருகிறார், சென்னையைச் சேர்ந்த ஜெஸ்வந்த் சிங். சென்னை, முகப்பேர், ஸ்பார்டன் அவின்யூவில் இருக்கும், பசுமை நிறைந்த அவரது வீட்டில், அழகிய மாலைப் பொழுதில், அவரைச் சந்தித்தோம். தலையில் டர்பன் கட்டயபடி நம்மை வரவேற்ற ஜெஸ்வந்த் சிங்கிடம், தமிழில் பேச யோசித்த நமக்கு, செந்தமிழில் அழகாய் பேசி இன்ப அதிர்ச்சி அளித்தார்.

"எனது சொந்த ஊர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர். என்னுடைய தாத்தா, குடும்பத்துடன் 1937ம் ஆண்டு வேலை தேடி சென்னைக்கு வந்தேன். சில ஆண்டுகள் வேலை செய்த பின், சொந்தமாக  கட்டுமான தொழிலில் ஈடுபட தொடங்கினேன். தொடர்ந்து எனது தந்தையும் அதே தொழிலை செய்தார். நான் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன். எனது தந்தையுடன் சேர்ந்து நானும் அதே தொழிலை செய்தேன். 1978ம் ஆண்டில் இருந்து, இந்த வீட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக ஓர் துளசி செடியுடன் எங்கள் வீட்டின் தோட்டத்தை அமைக்கத் தொடங்கினோம். செடிகள் ஒன்றன் பின் ஒன்றாக வைக்கத் தொடங்கினோம். இன்று நாற்பதுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள், இருபதுக்கும் மேற்பட்ட பூச்செடிகள் மற்றும் காய்கறி செடிகள், நாற்பதுக்கும் மேற்பட்ட பழச்செடிகள், ஒவ்வொரு ராசிக்கும், நட்சத்திரத்துக்கும் பொருத்தமான செடிகள் வளர்த்தோம்.

தென்னை, வில்வம், ருத்ராட்சம் போன்ற மரங்கள், போன்சாய் (குட்டி மரங்கள்) முறையில் வளர்க்கப்பட்ட ஆலமரம், அரச மரம், போதி மரம், ஆகியன பச்சை பசேலென வளர்ந்து இப்போது காணப்படுகின்றன. இவற்றைக் காட்டிலும், இந்த வீட்டிற்கு தனி சிறப்பை ஏற்படுத்தித் தருபவை, தோட்டத்தை சுற்றி வளர்க்கப்பட்ட சந்தன மரங்கள் தான்." என்கிறார் ஜெஸ்வந்த் சிங்,

"என்ன சந்தன மரங்களா?" என்று பலர் ஆச்சரியத்துடன் கேட்கும் கேள்விக்கு ஜெஸ்வந்த் சிங்கிடம் பதில் தயாராக இருந்தது. "வீட்டில் சந்தன மரங்கள் வளர்ப்பதன் மீதான தடை 2002ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டுவிட்டது. வீட்டில் தாராளமாக சந்தன மரங்களை வளர்க்கலாம். ஆனால் வெட்டத்தான் கூடாது. இவற்றை வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, நாங்கள், அரசு அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களின் முன்னிலையில் தான் வெட்டினோம்" என்றார்.

வீட்டைச் சுற்றி பூத்துக்கிடந்த மலர்களும், வண்ண வண்ண பழங்களும் தம்மை காண, நம்மை அழைக்க, தோட்டத்தை சுற்றிக்காட்டினார் ஜெஸ்வந்த சிங். அவர் முதலில் எங்களிடம் அறிமுகப்படுத்தியது, தமிழ்நாட்டின் அரசு மலரான செங்காந்தளை. "செங்காந்தள் மலர் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் தான் உள்ளது. இந்த மலர், ஓர் ஆண்டில், மூன்று அல்லது நான்கு மாதங்கள் தான் பூத்திருக்கும். தேசியக்கொடி போல மேலே சிவப்பு நிறமும், நடுவில் வெள்ளை நிறமும், கீழே பச்சை நிறமும் அமைந்திருப்பது, இந்த மலரின் தனிச்சிறப்பு" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

அடுத்ததாக சிறு சிறு தொட்டிகளில் வளர்க்கப்படும் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடிகளின் அருகே சென்றோம். வசம்பு, ஆடாதொடை, நிலவாகை, சித்தரத்தை, கோபுரம் தாங்கி, நேத்திர மூலி, பூனை மீசை, கற்பூரப்புல், பிரண்டை, திப்பிலி, வெட்டிவேர், சிறியாநங்கை, வல்லாரை, நொச்சி, கற்றாழை போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. "இவற்றில் சில மூலிகைச் செடிகளை காண்பது அரிதாகிவிட்டது. உடலிலுள்ள பல குறைபாடுகளை போக்கும் திறம் வாய்ந்த மூலிகைகள் அனைத்தும், எங்கள் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

மூலிகைச் செடிகளை கடந்து சென்றால், வானை நோக்கி வளர்ந்திருக்கும் சந்தன மரங்கள் காட்சி அளிக்கின்றன. அவற்றின் கீழே, சிறிய பானைகளில் துளையிட்டு, கூடுகெட்டத்தெரியாத சிட்டுக்குருவிகளுக்கும் ஓர் வசிப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜெஸ்வந்த் சிங்.

வீட்டின் வாயிலில், ஒன்பது ராசிகளுக்கும் தனித்தனியாக ஒன்பது வகையான செடிகள் வரிசையாக தொட்டிகளில் வளர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர, இருபத்தியேழு நட்சத்திரத்துக்கும் தனித்தனியாக செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. "ஆரம்ப காலங்களில் ராசி, நட்சத்திரம் ஆகியவற்றில் எனக்கு பெரியளவு ஈடுபாடு இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், ஒவ்வொரு ராசி, நட்சத்திரத்துக்கும் ஏற்ற செடிகள் குறித்து அறிந்தேன். அதன்பிறகு தான், அனைத்து ராசி, நட்சத்திரங்களுக்கும் ஏற்ற செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன்" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

ராசி செடிகளின் அருகிலேயே அழகிய போன்சாய் மரங்களும் இருந்தன. ஆலமரம், அரசமரம், கொடுக்காபுளி ஆகிய போன்சாய் வகை மரங்கள் தோட்டத்தின் அழகுக்கு மேலும் மெருகூட்டினார். தொடர்ந்து மாடியில் உள்ள காய்கறி மற்றும் பழச்செடிகளிடம் அழைத்துச் சென்றார் ஜெஸ்வந்த சிங். சிறிய மாடியில், பலவகையான காய்கறிச் செடிகளை தொட்டிகளில் வளர்த்து, பராமரித்து வருகிறார். நாம் தினமும் உபயோகிக்கும் காய்கறிகளான, தக்காளி, வெண்டைக்காய், பீன்ஸ், ஐந்து வகை கத்தரிக்காய், முருங்கைக்காய், பாகற்காய், முட்டைக்கோஸ், பூக்கோசு, அவரைக்காய், கொடைமிளகாய், நான்கு வகை பச்சை மிளகாய் ஆகியன மாடியை அலங்கரிக்கின்றன.

பின்புறமுள்ள மாடியில், நாற்பதுக்கும் மேற்பட்ட பழ வகைகள் உள்ளன. மூன்று வகையான எலுமிச்சை, நெல்லி, மாம்பழம், இருவகையான ஆப்பிள், சப்போட்டா, விளச்சிப்பழம், பலாப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, பேரிச்சை, அத்தி, அன்னாச்சி, மூன்று வகையான ஆரஞ்சு, நாகப்பழம், சீமைப்பலா, கொய்யா, முந்திரி ஆகிய பழங்கள் பார்க்கும் போதே உண்ணத் தூண்டுகின்றன.

பழத்தோட்டத்தின் அருகே, தேனீக்கள் மொய்க்கும் வகையில் சிறிய தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. தேனை சேகரிப்பதுடன், செடிகள் நன்கு வளரவும் உதவுகின்றன. சேகரிக்கப்பட்ட தேனை, தேனீக்களை தொந்தரவு செய்யாமல், தம் கைகளைக் கொண்டே வெளியே எடுக்கிறார் ஜெஸ்வந்த சிங்.

எவ்வித மருந்துகளும் தெளிக்காமல், பூச்சிகளிடம் இருந்து செடிகளை காப்பாற்ற, சூரிய சக்தியில் இயங்கி, யூ.வி கதிர்வீச்சினால் பூச்சிகளை இழுக்கும் கருவியினை உபயோகிக்கும் ஜெஸ்வந்த் சிங், இந்தக் கருவியின் மூலம் ரசாயனங்கள் இன்றி இயற்கையான முறையில் செடிகளை பராமரிக்கலாம் என்கிறார். "செடிகளுக்கு பூச்சி மருந்துகள் இன்றி இயற்கை பொருட்களான வேப்ப எண்ணெய் அல்லது மாட்டுச் சாணத்தை கரைத்து தெளிக்கலாம். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, மிக்சியில் அரைத்து, சாறு எடுத்து, அதையும் செடிகளுக்குத் தெளிக்கலாம்" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

இறுதியாக, வீட்டில் இருக்கும் இயற்கை கழிவுகளைக் கொண்டு, அவரே தயாரிக்கும் உரத்தை காண்பித்து, அதை உருவாக்கும் முறையையும் நம்மிடம் விளக்கினார். "பெரிய தொட்டியை எடுத்துக்கொண்டு, காற்று புகும் அளவிற்குச், அதைச்சுற்றி சிறிய துளைகள் சிலவற்றை அமைக்க வேண்டும். தொட்டியின் கீழ் பகுதியிலும், கழிவு நீர் வெளிவரும் அளவிற்கு, சிறிய ஓட்டை ஒன்றை அமைக்க வேண்டும். தொட்டியின் உள்ளே, நெட்லான் எனப்படும் வலையைக் கொண்டு அடிப்பகுதியினை மூட வேண்டும். பின்னர், ஆறு அங்குலத்துக்கு செங்கற்கள் அல்லது ஜல்லிக்கற்களை நிரப்ப வேண்டும். பின் முட்டை ஓடு, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் வெங்காய்த் தோலைகளைத் தவிர, வீட்டில் மீந்துபோன அனைத்து இயற்கை உணவுப்பொருட்களையும் உள்ளே போட்டு, அதன் மேல் மாட்டு சாணத்தை போட வேண்டும், அதன் பின், மண்புழுக்கள் சிலவற்றை போட்டு, மறுபடியும் மீதமுள்ள உணவுப்பொருட்களை போட வேண்டும். இப்படி சில அடுக்குகளாக உணவுப்பொருட்களையும், சாணத்தையும் போட்டு, இறுதியாக தொட்டியை மூட வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, பெரிய தொட்டிக்கு, ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், அறுபதில் இருந்து எழுபது நாட்களுக்குப் பின், இயற்கை முறையிலான உரம் தயாராகிவிடும். ரசாயனங்கள் கலந்து விற்கப்படும் உரங்களை காட்டிலும் வீட்டில் தயார் செய்யப்படும் இயற்கை உரம் மிகவும் சிறந்தது" என்றார் ஜெஸ்வந்த் சிங்.

தனது வீட்டில் விளைவிக்கப்படும் செடிகளிலுள்ள பழங்கள், காய்கறிகள், பூக்கள் என அனைத்தையும் தன் வீட்டிற்கு உபயோகித்து, தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளிப்பதாக கூறிய ஜெஸ்வந்த் சிங், வீட்டிலேயே, செயற்கை ரசாயனங்கள் இன்றி விளையும் பழங்களையும், காய்கறிகளையும், தானும், தம் குடும்பத்தாரும், தம் நண்பர்கள் மற்றும் உறவினர்களும் உண்ணும் போது, தாம், மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

மரம் வளர்ப்பதன் அவசியத்தை சுவர்களில் எழுதி மக்களுக்கு விளக்குவதை காட்டிலும், வீடெங்கும் மரங்களையும், செடிகளையும் வளர்த்து, மக்களுக்கு தாம் ஓர் உதாரணமாக திகழுவதாக கூறி பெருமை அடைந்தார் ஜெஸ்வந்த் சிங்.

அவர், கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம், "சென்னையின் சிறந்த வீட்டுத்தோட்டம்" என்ற விருதையும் தமிழக அரசிடம் இருந்து பெற்றிருக்கிறார். வீட்டுத்தோட்டம் அமைத்து, அதில் ஏதேனும் சந்தேங்கள் எழுந்தால், தம்மை கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என தன் கைப்பேசி எண்ணையும் கொடுத்தார். 9840045621 என்கிற எண்ணில், அவரை தொடர்பு கொண்டு மக்கள் தங்களின் சந்தேகங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால், அவரை தொடர்பு கொள்பவர்களுக்கு வீட்டுத் தோட்டம் பற்றி சிறிதளவேனும் தெரிந்திருக்க வேண்டும் என்பது ஜெஸ்வந்த் சிங்கின் அன்புக் கட்டளை. இதற்கும் சேர்த்து நம் நன்றியை தெரிவித்துக் கொண்டு, பசுமை நிறைந்த தோட்டத்தை பிரிந்து செல்ல மனமின்றி, அங்கிருந்து கிளம்பினோம்.

செவ்வாய், 3 நவம்பர், 2015

பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் Multiple Part Time Earning methods to Make Money

வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பகுதி நேரத்தில் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. ஆனால் பலர் பலக் sms , MLM என்று ஏதாவது ஒன்றில் ஏமாற்றப்பட்டே வருகின்றனர். சரி நாம் ஒரு ஐடியா  கொடுக்கலாமே என்று யோசித்தபோது என் நினைவுக்கு வந்ததுதான் "ONLINE SERVICE".  இப்போது டிக்கெட் புக்கிங், பில் பேமென்ட், மொபைல் ரீசார்ஜ், DTH ரீசார்ஜ் என அனைத்து  வசதிகளும் வீட்டில் இருந்தபடியே செய்து விடலாம் என்று வந்துவிட்டது ஆனால் இந்த சேவைகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் என்று பார்த்தால் ஏற்க்கனவே தொழிலில் இருப்பவர்கள்தான் அதாவது மேல் வருமானத்திற்காக தான் பயன்படுத்தி வருகின்றனர்.  



இந்த சேவைகளை தனியாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்த வேண்டும் என்றால் கடை வாடகை, கரண்ட் பில், அட்வான்ஸ் என முதலீடு  அதிகருக்கும் அதேவேளையில் நஷ்ட்டம் வரவும் வாய்ப்பு உள்ளது(நம் அணுகுமுறையை பொறுத்து). ஆனால் இந்த சேவைகளை வீட்டில் இருந்தபடியே தொழிலாக  செய்யவேண்டும் என்றால்  கண்டிப்பாக  நஷ்ட்டம் வர வாய்ப்பு இல்லை ஆனால் வீடு இந்த சேவைகளை செய்ய ஏற்றதாக இருக்கவேண்டும், வீட்டின் முன்புறம் கடைபோல் அல்லது ஒரு கணினி வைக்கும் அளவுக்கு அறை இருந்தால் நல்லது. 



சரி இந்த சேவைகளை தொழிலாக செய்ய  விரும்புபவர்கள் தொடர்ந்து படிக்கவும், பிடிக்காதவர்கள் இந்த சேவைகளை தெரிந்து கொள்ள  படிக்கவும்

1. TICKET BOOKING

டிக்கெட் புக்கிங் என்று பார்த்தால் TRAIN, BUS, CINEMA போன்றவைகள் முக்கியமானவைகள்.

TRAIN : 

ரயில் முன்பதிவு  இப்போது  அதிகரித்துக்கொண்டே வருகிறது ஆனால் இதற்க்கானே சேவை வழங்கும் நிலையங்கள் என்று பார்த்தால் குறைவுதான். தைரியமாக செய்யலாம்.

சேவை தளங்கள்:

1 . IRCTC - www.irctc.co.in

IRCTC என்பது அரசிடம் ரயில் முன்பதிவு செய்ய  அனுமதி வாங்கிய நிறுவனம் மற்ற தனியார் நிறுவனங்கள் இவர்களிடம் உரிமம் வாங்கித்தான் தொழில் நடத்தி வருகின்றனர். ஆனால் IRCTC தளத்தை வீட்டில் மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் தொழில் ரீதியாக பயன்படுத்த வேண்டும் என்றால் AGENT அனுமதி நிறுவனத்தில் இருந்து வாங்க வேண்டும்.  வீட்டில் இருந்தபடியே நண்பர்கள் உறவினர்களிடம் மட்டும் வீட்டில் இருந்தபடியே சேவை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தளத்தை  பயன்படுத்தலாம். எந்த முன்பணமும் செலுத்தாமல்  நாம் எடுக்கும் டிக்கெட் செலவுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும் இன்டர்நெட் பேங்கிங் வழியாக.

இல்லை நீங்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது கடையில் இருந்தோ தொழில் ரீதியில் பயன்படுத்த நினைத்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொழில் நடத்தும் உரிமை பெற்றிருக்க வேண்டும். ஆனால் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு  கூட்டு சேவை அளிக்கும் நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.

2. BUS

பேருந்து முன்பதிவு இன்னும் அரசு பேருந்துகளில் அனுமதிக்கவில்லை அதனால் தனியார் பேருந்துகள் மட்டுமே பண்ண முடியும். தனியார் பேருந்துகள் முன்பதிவு செய்ய உதவும் தளங்கள்TICKETGOOSE.COM, REDBUS.IN இந்த இரண்டு தளங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய தேவையான முன்னணி இணையத்தளங்கள் ஆகும். இவர்களிடம் முன் பணம் செலுத்தாமல் டிக்கெட் எடுத்தால் வாடிக்கையாளர்களிடம் தான் டிக்கெட்  விலையை விட அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க முடியும், இவர்களிடம் உரிமம் பெற்றால் டிக்கெட் விலையில் நிறுவனம் நமக்கு கமிஷன் கொடுக்கும்.  ஆனால்  இவர்களிடம் உரிமம் எடுக்கும் தொகையில் வேறு ஒரு  கூட்டு சேவை அளிக்கும்  நிருவனமிடம் உரிமம் பெற்றால் உங்களுக்கு பல சேவைகள் கிடைக்கம் அந்த நிறுவனங்கள் பற்றிய விபரம் கீழே.
3.CINEMA TICKET

சினிமா டிக்கெட்டில் அதிக வருமானம் எதிர்பார்க்க முடியாது ஏன் என்றால் டிக்கெட் விலையை விட இணையத்தள நிறுவனமே 15 முதல் 25 ரூபாய் அதிக விலைக்கு விற்று வருகின்றன. ஏதாவது ஒரு படத்துக்கு அதிக DEMAND இருக்கும்போது பணம் பார்க்கலாம். சினிமா டிக்கெட் சேவை வழங்கும் முன்னணி தளங்கள் 

1.WWW.TICKETNEW.COM
2. WWW.SHANTICINEMAS.COM 
3.WWW.THECINEMA.IN  

2.BILL PAYMENT
இப்போது அனைத்து முன்னணி  நிறுவனங்களும் தங்களுடைய பில் பேமன்ட்களை ஆன்லைன் வழியாக செலுத்தும் வகையில் கொண்டு வந்துவிட்டன. அதனால் இந்த சேவை நிச்சயம் லாபம் கொடுக்கும்.

சேவை துறைகள்:

►INSURANCE
►TELEPHONE BILL
►ELECTRICITY BILL

இவற்றில் இன்சுரன்ஸ் மற்றும் டெலிபோன் பில் சேவைகள் மட்டும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உரிமம் பெற்று நடத்தலாம் ஆனால் ELECTRICITY BILL செலுத்தும்படி எந்த நிறுவனமும் இது வரை உரிமம் பெறவில்லை ஆனால் நீங்கள் அரசு இணையத்தளத்திலே பலருக்கு பில் கட்டும் வகையில் சேவைகள் வந்துவிட்டது. 

அரசு இணையதள  முகவரி  www.tnebnet.org/awp/TNEB/

உங்கள் வீட்டில் இருந்து கரண்ட் பில் கட்டும் இடம் தொலைவில் என்றால் தாராளமாக இதை தொடங்கலாம் ஒரு கார்டுக்கு 15-20 ரூபாய் வாங்கினால் கூட வரும் வருமானத்தில் உங்கள்  வீட்டு கரண்ட் பில் கட்டிவிடலாம்.


அனைத்து சேவைகளையும் தரும் நிறுவனங்கள்:

கீழே உள்ள நிறுவனங்கள் அனைத்து சேவைகளையும்(கூட்டு சேவை) ஒரே  உரிமத்தில் வழங்குகிறார்கள். அதாவது MOBILE RECHARGE, DTH RECHARGE, BUS RESERVATION, TRAIN RESERVATION, FLIGHTS RESERVATION, TELEPHONE BILL  போன்ற சேவைகள் அனைத்தையும் ஒரே உரிமத்தில் குறைந்த விலைக்கு வழங்குபவை

►ONE STOP SHOP - WWW.ONESTOPSHOP.IN
►SUVIDHAA            - WWW.MYSUVIDHAA.COM
►ITZCASH               - WWW.ITZCASH.COM
►ICASHCARD          -WWW.ICASHCARD.IN
►BEAM                    -WWW.BEAM.CO.IN

இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன  இவைகளில் உரிமம் பெற வேண்டும் என்றால் 1500 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை பிடிக்கும்.
பேருந்துக்கு மட்டும் உரிமம் வழங்கும் நிறுவனங்கள்:
►TICKET GOOSE  - WWWTICKETGOOSE.COM
►REDBUS             - WWW.REDBUS.IN

TRAIN, FLIGHT இருக்கை  போன்றவற்றின் நிலையை உடனுக்குடன் சுலபமாகவும், விரைவாகவும் தெரிந்துக்கொள்ள WWW.CLEARTRIP.COM தளத்தை பயன்படுத்தவும். ஆனால் இவர்கள் தளத்தில் சேவை கட்டணம் அதிகமாக பிடிப்பதால் பார்ப்பதற்கு மட்டும் இந்த தளத்தை பயன்படுத்தவும்.

கவனிக்கவும்:

1:  ஆரம்பத்திலேயே எந்த ஒரு நிறுவனத்திலும்  உரிமம் வாங்கி நஷ்ட்டம் அடைந்து விட வேண்டாம் முதலில் இன்டர்நெட் பேங்கிங் வழியே பயன்படுத்தி பார்த்து லாபம் உறுதி ஆனால் மட்டும் உரிமம் பெறவும்.

2: உரிமம் பெரும்முன் சரியான நிறுவனத்தையும், குறைந்த விலைக்கு உரிமம் கொடுக்கும் நிறுவனத்தையும் தேர்ந்தெடுக்கவும்(நான் நிறுவனத்தை  பரிந்துரைத்தால் பதிவின் நோக்கம் மாறிவிடும்)
 
3: அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வீட்டில் இந்த சேவைகளை பயன்படுத்த நினைத்தால் பகுதி நேரமாக செய்யவும்(மாலை இரண்டு மணி நேரங்கள் செய்தாலே போதும் லாபம் பார்க்கலாம்)

4: பாதுகாப்பு இல்லாத வீட்டில் வேளி ஆட்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் அளவுக்கு  யாரும் இந்த சேவையை வீட்டில் செய்ய முயற்ச்சிக்க வேண்டாம்.

5: வீட்டின் அருகே யாரேனும் இந்த தொழில் செய்பவர்கள் இருந்தால் அவர்களுடன் போட்டி போடுவதை தவிர்க்கவும். வேறு எங்கேயாவது இந்த சேவைகள் இல்லாத இடத்தில் அமைத்துக்கொள்ளவும்.

6:  இனி வரும் காலங்களில் எல்லாம் ஆன்லைன் சேவையாக வர இருப்பதால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ள தொழில்தான். நான் மேலே சொன்ன சேவைகள் தவிர்த்து SCHOOL, COLLEGE RESULTS, EMPLOYEMENT REGISTRATION, RENEWEL என பல சேவைகள் உள்ளன திறமையாகவும், சரியான கணிப்பும் இருந்தால் நிச்சயம் இந்த தொழில் மூலமே சரியான எதிர்க்காலத்தை அமைத்துக்கொள்ளலாம். எந்த தொழிலாக இருந்தாலும் நம் வெற்றி நம் அனுகும் முறையிலும், முழு ஈடுபாட்டிலும் தான் உள்ளது.

7: தயவு செய்து யாரும் ஆடம்பர செலவுக்காக இதை பயன்படுத்த வேண்டாம். ஏற்க்கனவே வருமானம் உள்ளவர்கள் உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள ஏழ்மையானவர்களுக்கு பரிந்துரைக்கவும்.

8: எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் கவுரவம் பார்க்காமல்  லட்சியத்தொடு தொடங்கினால்  இலக்கை எட்டிவிடலாம்.

இயற்கைப் புடலை...

குறைவான வேலையாட்கள், எளிதான பறிப்பு ஆகிய காரணங்களால்தால்தான் சமீபகாலமாக விவசாயிகளின் பார்வை, பந்தல் காய்கறிகள் பக்கம் திரும்பியுள்ளது. வெள்ளரி, பாகல், புடலை, பீர்க்கன் போன்ற காய்கறிகள் பந்தல் முறையில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அப்படி சாகுபடி செய்யும் பலரும் இயற்கை முறையில் இக்காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட இயற்கை காய்கறி சாகுபடியாளர்களை அவ்வப்போது அடையாளம் காட்டி வருகிறது, 'பசுமை விகடன்’. அந்த வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார், விருதுநகர் மாவட்டம், அச்சம்தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். இவர், பந்தல் அமைத்து புடலை சாகுபடி செய்து வருகிறார். 
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, அச்சம்தவிழ்த்தான். ஊருக்குள் நுழைந்தவுடனேயே பச்சைப் பசேலென படர்ந்திருக்கும் பந்தல், ராதாகிருஷ்ணனின் தோட்டத்தை அடையாளம் காட்டி விடுகிறது. கொடிகளில் தொங்கிக் கொண்டிருந்த புடலங்காய்களைப் பறித்துக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.
'நான் பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். பூர்வீக விவசாயக் குடும்பம்தான். எல்லாருமே தாராளமா ரசாயனம் தூவி மகசூல் எடுத்தவங்க. அப்பா காலத்துல மிளகாய், பருத்தி, கத்திரியைத்தான் அதிகம் சாகுபடி செஞ்சாங்க. நானும் அப்பா கூட ரசாயன முறையிலதான் விவசாயம் செய்தேன். என்னதான் உரம் போட்டாலும், பூச்சிக்கொல்லி தெளிச்சாலும் நோய்கள் கட்டுப்படலை. அதுக்கேத்தாப்புல வேலையாட்களும் கிடைக்கலை. கிடைச்சாலும் கூலி அதிகமா கேட்டாங்க. போதுமான விளைச்சலும் இல்லை. என்ன செய்யலாம்னு யோசனையில இருந்தப்பத்தான்... ஒரு நண்பர், இயற்கை விவசாயத்தைப் பத்தி சொல்லி, பசுமை விகடனை எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்துல வில்லிபுத்தூருக்கு நம்மாழ்வார் ஐயா வந்திருந்தாங்க. அந்தக்கூட்டத்துல கலந்துக்கிட்டேன். அங்கதான், இயற்கை விவசாயத்துனால மண்ணுக்கு, விவசாயத்துக்குக் கிடைக்கிற நன்மைகளைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். வீட்டுக்கு வந்ததும், அப்பாகிட்ட சொன்னேன். 'இயற்கை இயற்கைனு சொல்லுவாங்க. ஆனா, மகசூல் வராது. ரசாயன விவசாயம்தான் நல்லது’னு இயற்கை விவசாயத்து மேல நம்பிக்கை இல்லாமப் பேசினார், அப்பா.
ஆனாலும், நான் விடுல. இயற்கை விவசாயத்துல ஏதாவது சாகுபடி செஞ்சு மகசூல் எடுத்துக் காட்டணும்னு முடிவு செஞ்சு... முதல் கட்டமா ரெண்டு ஏக்கர்ல டீலக்ஸ் பொன்னி விதைச்சேன். ஏக்கருக்கு 42 மூட்டை வீதம் 2 ஏக்கர்ல மொத்தம் 84 மூட்டை விளைச்சல் கிடைச்சது. அது, ரசாயனத்துக்கு இணையான மகசூல்தான். இயற்கையில விளைவிக்கிறப்போ நாத்து வளர்ச்சி, நெல் மணிகள் எல்லாத்துலயும் நல்ல வித்தியாசம் தெரிஞ்சுது. அரிசியின் சுவையும் வித்தியாசமா இருந்துச்சு. அடுத்ததா, நாட்டுக்கத்திரியை இயற்கை முறையில 2 ஏக்கர்ல சாகுபடி பண்ணினேன். வீரியமான ரசாயனப் பூச்சிக்கொல்லி அடிச்சாலே கட்டுப்படாத பூச்சிகள் கூட...  இஞ்சிபூண்டுக் கரைசல், வேப்பெண்ணெய் ஸ்பிரே பண்ணுனதுல கட்டுப்பட்டுச்சு. காய்களும் திரட்சியா காய்ச்சுச்சு. மகசூலும் நல்லா இருந்துச்சு. அதுக்கப்பறம்தான் எங்க வீட்டுலயே இயற்கை விவசாயம் மேல நம்பிக்கை வந்துச்சு. அதுல இருந்து இயற்கை விவசாயம்தான் செய்றேன்' என்று முன்கதை கூறிய ராதாகிருஷ்ணன், தொடர்ந்தார்.
'கத்திரியில நல்லா மகசூல் கிடைச்சாலும், தினப்பறிப்புக்கு கூலி ஆள் கிடைக்கலை. அதனால, கத்திரியை விட்டுட்டு, வேற என்ன பயிர் சாகுபடி செய்யலாம்னு தேடுதலை ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல, (இரண்டு ஆண்டுகளுக்கு முன்) ஹைதராபாத்ல இருக்கிற சொந்தக்காரர் தோட்டத்துக்குப் போக வேண்டியிருந்துச்சு. அங்க, அவர் பந்தல் அமைச்சு புடலை சாகுபடி பண்ணிக்கிட்டு இருந்தார். தோட்டம் முழுக்க கொடி படர்ந்து தோரணம் கட்டுனது மாதிரி புடலங்காய் காய்ச்சுத் தொங்கிக்கிட்டிருந்ததைப் பார்க்கும்போதே, அடுத்ததா புடலைதான் போடணும்னு மனசுல நினைச்சுக்கிட்டேன். ஊருக்கு வந்ததும் அதுக்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டேன். முன் அனுபவம் இல்லாததால கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. ஆனாலும், முதல் அறுவடையிலேயே நல்ல மகசூல். இப்போ ரெண்டு வருஷமா புடலை சாகுபடி செய்துக்கிட்டு இருக்கேன். ஒரு ஏக்கர் புடலை இப்போ அறுவடையில இருக்கு. ஒரு ஏக்கர்ல இன்னும் கொஞ்சம் நாள்ல அறுவடை பண்ணலாம்' என்ற ராமகிருஷ்ணன், மகசூல் மற்றும் வருமானம் பற்றிச் சொன்னார்.
45 பறிப்புகள்... 11,250 கிலோ!
'புடலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய் பறிக்கிறேன். காலையில 6 மணியில இருந்து 8 மணிக்குள்ள பறிப்பு முடிஞ்சிடும். பந்தல் முறைங்கிறதுனால, காய்கள் பார்வைக்கு நல்லா தென்படும். ஒரு ஏக்கர் பறிக்க ரெண்டு ஆள் போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு பறிப்புனு 45 பறிப்புல இருந்து 50 பறிப்புகள் வரை பறிக்கலாம். ஒரு பறிப்புக்கு 250 கிலோவுல இருந்து 300 கிலோ வரை காய் கிடைக்கும். சிலசமயம் அதுக்கு அதிகமாவும் கிடைக்கும். சராசரியா 45 பறிப்பு, ஒரு பறிப்புக்கு 250 கிலோனு வெச்சுக்கிட்டாலே... மொத்தம் 11 ஆயிரத்து 250 கிலோ புடலங்காய் கிடைக்குது. ஒரு கிலோ 12 ரூபாய்ல இருந்து 18 ரூபாய் வரை விற்பனையாகுது.
இயற்கை முறை புடலைனு தனியால்லாம் விற்பனைக்கு அனுப்புறதில்லை. காய்கறி மார்கெட்டுக்குத்தான் அனுப்புறேன். ஆனா, மத்தவங்க கொண்டு வர்ற புடலையை விட என்னோட புடலை நீளமாவும், தரமாவும் இருக்கிறதால மத்தவங்களுக்குக் கொடுக்கிற விலையை விட கிலோவுக்கு 3 ரூபா வரை கூடுதல் விலை கொடுக்கிறாங்க, வியாபாரிகள். குறைஞ்சபட்சமா கிலோ 12 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலே 11 ஆயிரத்து 250 கிலோவுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவெல்லாம் போக 1 லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சிடும்' என்ற ராமகிருஷ்ணன்,
'காய்கறிகள்ல எப்பவுமே பந்தல் காய்கறிகளுக்கு நிலையான மார்க்கெட்டும் கட்டுப்படியான விலையும் இருக்குது. அதனால, எப்பவும் பந்தல் காய்கறி விவசாயிகளைக் கைவிடாது. மரம், இரும்பு, கல்னு பல முறையில் பந்தல் அமைக்கலாம். ஆனா, கல்தூண் அமைச்சிட்டா ரொம்ப வருஷம் தாக்குப்பிடிக்கும். பந்தல் அமைக்கிறதுக்கான ஆரம்பகட்ட செலவுகளைப் பார்த்து மலைக்காம இருந்தா, தொடர்ந்து பல வருஷங்களுக்கு லாபம் பார்க்க முடியும்' என்று ஆலோசனை சொன்னார்.
தொடர்புக்கு,
ராதாகிருஷ்ணன்,
செல்போன்: 9486588859. 

சாகுபடிப்பாடம்!
ஒரு ஏக்கர் பரப்பில் பந்தல் அமைத்து புடலை சாகுபடி செய்யும் விதம் குறித்து ராதாகிருஷ்ணன் சொன்ன விஷயங்கள், பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 180 கல்தூண்கள்!
பந்தல் காய்கறிகளுக்குப் பட்டம் கிடையாது. அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். புடலை 150 நாள் பயிர். தேர்வு செய்த நிலத்தில், 15 அடி இடைவெளியில் 10 அடி உயரமுள்ள கல்தூண்களை ஓர் அடி ஆழத்துக்குக் குழிபறித்து ஊன்ற வேண்டும். ஏக்கருக்கு 180 கல்தூண்கள் தேவைப்படும். பிறகு, கம்பி கொண்டு பந்தல் அமைத்து... 4 டிராக்டர் மட்கிய குப்பையைக் கொட்டி மினி டிராக்டர் மூலம் உழவு செய்து ஒரு வாரம் காய விட வேண்டும். பிறகு, ஓர் உழவு செய்து சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, வரிசைக்கு வரிசை 15 அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு வரிசையிலும் 2 அடி இடைவெளியில் கையால் குழி பறிக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் விதைநேர்த்தி செய்த புடலை விதைகளை விதைத்து மண் கொண்டு மூடி பாசனம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 300 கிராம் விதை தேவைப்படும்.
விதைத்த மறுநாள் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்ய வேண்டும். 5ம் நாள் முதல் 10ம் நாளுக்குள் தளிர் எட்டிப் பார்க்கும். 15ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா, 20 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து தோட்டம் முழுவதும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை இது போல தெளிக்க வேண்டும்.  
18ம் நாள் முதல் 20ம் நாளுக்குள் கொடி படரும். கொடி படர்ந்ததும், கொடிமுனையில் கயிறு கட்டி கயிற்றின் மறு முனையைப் பந்தலில் கட்ட வேண்டும். 35ம் நாளுக்குள் கொடி வளர்ந்து பந்தலை அடைந்து விடும்.
40ம் நாளுக்கு மேல் பூக்கத்தொடங்கும். 50ம் நாளுக்கு மேல் காய்கள் தென்படும். 60ம் நாளில் இருந்து காய் பறிக்கத் தொடங்கலாம். 75ம் நாளுக்கு மேல் அதிகளவில் காய்கள் காய்க்கும். 150ம் நாள் வரை காய் பறிக்கலாம்.
20, 40, 60 மற்றும் 80ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும்... 20 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 20 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 20 கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்த கலவையில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து, ஒவ்வொரு செடியின் தூரிலும் வைக்க வேண்டும்.

ஒரே சந்தையை நம்பக்கூடாது!  
'ராஜபாளையம், வில்லிபுத்தூர், சிவகாசினு மூணு ஊரு சந்தைகளுக்கும் நான் காய் அனுப்புறேன். எப்பவுமே ஒரே சந்தையை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. ஒரே சந்தையில மொத்தக் காயையும் விற்கும்போது விலையைக் குறைச்சிடுவாங்க. 'இதுதான் விலை... இல்லை வேண்டாம்னா எடுத்துக்கிட்டுப் போங்க’னு ஈஸியா சொல்லிடுவாங்க. காய்களைப் பறிச்சு மூட்டைக் கட்டி, அவ்வளவு தூரம் கொண்டு போய் விலைக்குப் போடும்போது, வியாபாரி வேண்டாம்னு சொன்னா அவ்வளவு கஷ்டமா இருக்கும். அதனால எப்பவுமே, குறைஞ்சது இரண்டு சந்தைகளையாவது கையில வச்சிருக்கணும். அப்பத்தான் ஒரு சந்தையில விலை இல்லாட்டாலும், இன்னொரு சந்தையில விலை கிடைக்கும். விலையில ஏற்றம் இறக்கம் இருந்தாலும் நஷ்டம் வராது' என்கிறார், ராதாகிருஷ்ணன்.

முயல்கள், எலிகள் தொல்லைக்கு கூமுட்டைக் கரைசல்!    
'இந்தப் பகுதிகளில் முயல் தொல்லை அதிகம். புடலை விதை ஊன்றிய அன்றே குழியைத் தோண்டி விதையை எடுத்துவிடும். தப்பிச்சு வர்ற கொடிகளை தண்டுப்பகுதியில் கடிச்சி விட்டுடும். ரெண்டு அழுகின முட்டையை (கூமுட்டை) உடைச்சு 10 லிட்டர் தண்ணீரில் கலக்கி, வாரம் ஒரு முறை கொடியைச் சுற்றி தெளிச்சு விட்டா போதும். தோட்டத்துப் பக்கம் முயல் எட்டி கூடப் பார்க்காது. எலி, பெருச்சாளி தொல்லைக்கும் இதைச் செய்யலாம்' என்கிறார், ராதாகிருஷ்ணன்.

சிவப்பு வண்டுத் தாக்குதலுக்கு இஞ்சிபூண்டுக் கரைசல்!  
கொடி படர ஆரம்பித்தவுடன் சிவப்பு வண்டுகள் தாக்கலாம். இலை அல்லது தண்டுகளில் ஒரு சிவப்பு வண்டு தென்பட்டாலும், உடனே பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 250 கிராம் இஞ்சி, 250 கிராம் பூண்டு ஆகியவற்றை அரைத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். இக்கலவையிலிருந்து 100 மில்லி எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

புடலங்காயின் பயன்கள்!  
புடலங்காய் நம் உடலிலுள்ள நச்சுகளை அழித்து வெளியேற்றுகிறது. தண்ணீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதோடு, உடலிலுள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றி விடும் தன்மை கொண்டிருக்கிறது. புடலை இலைச்சாறுடன், கொத்தமல்லித்தழை சேர்த்து கொதிக்க வைத்த தன்ணீரை தினமும் 3 வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுக்குள் வரும். புடலங்காயில் வைட்டமின் ஏ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. பிஞ்சு அல்லது நடுத்தர காயைத்தான் சாப்பிட வேண்டும்.

பூஞ்சண நோயைக் கட்டுப்படுத்தும் விதைநேர்த்தி!
100 மில்லி பஞ்சகவ்யாவை, 300 மில்லி தண்ணீரில் கலந்து, அதில் புடலை விதைகளை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் விதைகளை எடுத்து, அவற்றின் மீது, 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து தூவி அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்தால், பூஞ்சண நோய் வராது.

புதன், 14 அக்டோபர், 2015

செப்பு பாத்திரம் தண்ணீர் பாதுகாப்பு....


செப்பு பாத்திரம் தண்ணீர் பாதுகாப்பு....-11391403_411545802364760_7190824566523645233_n.jpg
குடிநீரைப் பாதுகாக்கும் செப்பு செப்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் குடிநீரை தேக்கிவைக்கும் இந்திய மற்றும் இலங்கையரின் பழக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது என்று நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். 


செப்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்கள், தண்ணீரில் சுகயீனத்தை விளைவிக்கும் நுண்ணுயிர்க் கிருமிகள் பெருகுவதை தடுக்கும் என்று இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் டாக்டர். பி. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 


இப்படியாக தண்ணீரை இந்த பாத்திரங்களில் சேமித்து வைக்கும் போது நீர் மூலம் பரவும் பல தொற்று நோய்களை தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 


பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்க்கிருமிகளை கொல்லும் தன்மை உள்ளது என்றும், அதிலும் குறிப்பாக, இந்த செப்பு மற்றும் பித்தளை போன்ற உலோகங்களுக்கு அந்த தன்மை அதிகமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 


இதன் காரணத்தினாலேயே கங்கை நீர், செப்பு பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


செப்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என, இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் ஏற்கனவே இது குறித்து விளக்கப்பட்டுள்ளது. 

சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை. செப்புப் பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட குடிநீர், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என, ஆயுர்வேதம் கூறுகிறது. எகிப்தில், தொன்மைக் காலம் முதலே, செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் சேமிக்கும் பழக்கம் உண்டு. செப்பு உலோகத்தின் இன்னும் சில அதிசயங்கள்:

* கடந்தாண்டு உலகையே அச்சுறுத்திய இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.

* செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, நான்கே மணி நேரத்தில், நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில், பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில், நான்கு நாட்கள் உயிர் வாழ்கின்றன.

* ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.

* இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.

* உடலில், "மெலானின்' என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், "விடிலிகோ' என அழைக்கப்படும் வெண் படையும் குறைகிறது.


Read more: http://www.penmai.com/forums/nature-cure/96831-a.html#ixzz3oXcRZhY6

திங்கள், 12 அக்டோபர், 2015

பணம் மரத்தில்தான் காய்க்கிறது!

“பணம் என்ன மரத்திலா காய்க்குது?” – இந்த கேள்வி உங்கள் காதில் விழாத நாளே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராவது இனி இப்படி உங்களை கேட்டால், தயங்காமல் பதில் சொல்லுங்கள். “பணம் மரத்தில்தான் காய்க்கிறது!”

என்னென்னவோ தொழில் நடத்தி நஷ்டமடைந்தவர்கள் ஆயிரம் பேரை உங்களுக்கு தெரியலாம். நிச்சய லாபம் கொடுக்கக்கூடிய ஒரு தொழில் இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மரம் வளர்ப்பு!

மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென நிச்சயம் கொட்டும்.

முதலில் இரண்டு கதைகளை பார்த்துவிடுவோம்.

முதலில் அசலூர் கதை.

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமம் தர்காரா. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், குறைந்தது பத்து மாமரங்களை நடுவது இங்கே வழக்கம். இவ்வழக்கம் எப்போதிலிருந்து பின்பற்றப்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் பரம்பரை பரம்பரையாக ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சரி, இந்த சடங்கினால் வேறு என்ன பிரயோசனம்? சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது என்கிற உலகளாவிய பயன்பாட்டை எல்லாம் விட்டு விடுவோம்.

இக்கிராமத்தில் வசிக்கும் சுபாஷ்சிங் ஒரு சிறுவிவசாயி. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மகள் பிறந்தாள். நிகாகுமாரி என்று பெயர் வைத்து, ஊர் வழக்கப்படி பத்து மாங்கன்றுகளை நட்டு வளர்த்தார்.

இந்த இருபது ஆண்டுகளில் மகள் திருமணத்துக்கு செலவு செய்யவேண்டுமே என்றெல்லாம் சுபாஷ்சிங் என்றுமே கவலைப்பட்டதில்லை. சமீபத்தில் நிகாகுமாரிக்கு ஜாம் ஜாமென்று திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அரசுப்பள்ளியில் வாத்தியார்.

“என் மகள் வளரும்போது அவளோடு சேர்ந்து, அவளுக்காக நான் நட்ட மாமரங்களும் வளர்ந்தது. மூன்றே ஆண்டுகளில் காய்க்க ஆரம்பித்தது. பழங்களை சந்தையில் விற்கத் தொடங்கினேன். இத்தனை ஆண்டுகளாக இதில் கிடைத்த வருமானம், எனது மகளின் திருமணச் செலவினை விட பன்மடங்கு அதிகம்” என்று பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் சொன்னார் சுபாஷ்சிங்.

‘லாஜிக்’ ஆக யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய பொருளாதார ரகசியம், இந்த மரம் நடும் சடங்கில் அடங்கியிருக்கிறது. கிராமப் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கும் மரம் நடும் சடங்கு, நிச்சயமாக வெறும் மூடநம்பிக்கையல்ல. பெரும் பொருளாதார நிபுணர்களுக்கு கூட தோன்றாத ‘ஐடியா’வினை, இக்கிராமத்து மக்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

மாமரங்களால் இவ்வளவு பெரிய பொருளாதார அனுகூலங்களை அடையமுடியுமா என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். ஒரு நடுத்தர அளவிலான மாந்தோப்பு, ஒவ்வொரு வருடமும் ரூபாய் ரெண்டு லட்சம் வரை வருமானத்தை வழங்குகிறது. மாந்தோப்பில் கிடைக்கும் வருமானத்தை, அப்படியே சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் சேமிக்கிறார்கள்.

மாமரங்கள் தரும் வருமானத்தால் முன்பெல்லாம் கோதுமை, நெல் விதைத்து வந்த விவசாயிகளும் கூட இப்போது தோப்புகள் அமைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களாம். ஊரிலேயே வயதானவர் சத்ருகன் பிரசாத் சிங். 86 வயதாகும் இவர், அந்தக் காலத்தில் கடுமையான விவசாயி. 25 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். தன் நிலம் முழுக்க மாமரம் மற்றும் லிச்சி மரங்களை நட்டு இன்று நிம்மதியாக இருக்கிறார்.

தர்காரா இப்போது பசுமைச்சேலை உடுத்தி, மாஞ்சோலையாக பூத்துக் குலுங்குகிறது. நம்புங்கள். தர்காரா கிராமத்தில் மாமரம் மற்றும் லிச்சி மரங்களின் எண்ணிக்கை மட்டுமே ஒரு லட்சம். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மாமரங்கள் நன்கு வளர்ந்து வருடா வருடம் நல்ல மகசூலை தந்து வருகிறது.

அடுத்தது நம்மூர் கதை.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்துக்கு அருகில் சேந்தன்குடி என்றொரு கிராமம். இந்த ஊரில் தங்கசாமி என்றொரு விவசாயி. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. சொத்தை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஓட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.

அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே!’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களுட, இருபத்தைந்து ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய மதிப்பு பல கோடி. ஓட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோட்டீஸ்வரர்.

சேந்தன்குடியில் போய் ‘மரம்’ தங்கசாமி என்று விசாரித்துப் பாருங்கள். இவரது காட்டுக்கு வழி சொல்லுவார்கள். தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரகன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.

இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காடை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள் வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.

இரண்டு கதைகளையும் வாசித்து, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையத் தேவையில்லை. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ ஆனவைதான்.

உதாரணத்துக்கு செஞ்சந்தன மரம். அணு உலை கதிர்வீச்சினை தடுக்கும் சக்தி இம்மரவகைகளுக்கு உண்டு. ஒரு டன் மூன்றரை முதல் நாலு லட்ச ரூபாய் வரைக்கும் சந்தை மதிப்பில் போகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எத்தகைய வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது இம்மரம்.

குறைவான ஆள் தேவை, உற்பத்தி மற்றும் பராமரிப்புச் செலவும் மிகக்குறைவு என்பதால் ‘மரம் வளர்ப்பு’ நல்ல லாபகரமான தொழிலாக விளங்குகிறது. முழுநேரமும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டிய தேவையுமில்லை. நிறைய பேர் ‘பார்ட் டைம்’ மற்றும் ‘வீக் எண்ட்’ தொழிலாகவும் கூட இத்தொழிலை செய்து வருகிறார்கள்.

குமிழ், முள்ளில்லா மூங்கில், மலைவேம்பு, சந்தனம் ஆகிய மரங்கள், இத்தொழிலுக்கு நன்கு தோதுப்படும் மரங்கள். குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் விலை எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு சுமார் ஆயிரத்து இருநூறு மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கால்குலேட்டர் கொண்டு கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 

“மரக்கன்றுகளின் விலை இருபதிலிருந்து நூறு ரூபாய்தான். நம் கண்ணெதிரிலேயே அவை வளர்ந்து, பலன் தர ஆரம்பிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு விலையே இல்லை” என்கிறார் மர ஆர்வலரான நடேசன்.

அந்தகாலத்து அண்ணா பல்கலைக்கழக பொறியாளரான நடேசனுக்கு இப்போது வயது எழுபது. சொந்தமாக ஒரு தொழிற்சாலை அம்பத்தூரில் வைத்திருந்தார். தொழில் நிமித்தம் 1980ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றிருந்தபோது ‘க்ரீன் எர்த்’ என்றொரு கண்காட்சியை கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இவருக்கு வாய்த்தது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நிலப்பரப்பில் நாற்பது சதவிகித காடுகளை கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு முப்பதாண்டுகளிலேயே வெகுவேகமாக அந்நிலை மாறி பதினான்கு சதவிகித காடுகளையே கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தியை அங்கே அறிந்தார். நாட்டின் பசுமையை மனிதர்கள் சுயநலத்துக்காக அழித்துக் கொண்டிருக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி தோன்றியது. ஊர் திரும்பியதும் கும்மிடிப்பூண்டியில் 18 ஏக்கர், காரனோடையில் 6 ஏக்கர் நிலம் வாங்கி மரங்கள் வளர்க்க ஆரம்பித்தார்.

இன்று தனது ஓய்வுக்காலத்தை தான் வளர்த்த மரங்களோடு மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகளில் இவர் வளர்த்த மரங்களின் எண்ணிக்கை மட்டுமே இருபதாயிரம். தொழிலதிபரான இவர் ‘மரம் வளர்ப்பும் நல்ல லாபகரமான தொழிலே’ என்று பொருளாதாரரீதியான பார்வையில் சுட்டிக் காட்டுகிறார்.

“மரம் வளர்ப்பினை சுற்றுச்சூழலைக் காக்கவோ, உலகவெப்பமயமாதலை குறைக்கவோ மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை. வங்கியில் வைப்புநிதி போட்டு வைப்பது மாதிரி கூட வளர்க்கலாம். கனியாகவோ, பூவாகவோ, விறகாகவோ, மருந்தாகவோ ஏதோ ஒரு வகையில் நீங்கள் வளர்த்த மரம் உங்களுக்கு நிறைய திருப்பித் தரும். தரிசு நிலம் கையகலம் கூட இல்லை என்கிற நிலை வரவேண்டும். சும்மா கிடக்கும் நிலங்களில் எல்லாம் சவுக்கு, மூங்கில் என்று கிடைத்த மரங்களை நட்டுவைத்தால், காலப்போக்கில் அவை நிறைய வருமானத்தை அள்ளித்தரும்” என்கிறார் நடேசன்.

மரம் வளர்ப்பு என்பது புதிய விஷயமில்லை. பாரம்பரியமாக நம் முன்னோர் செய்து வந்ததுதான். என்ன, இடையில் நகரமய சொகுசில் எல்லாவற்றையும் மறந்துவிட்டோம். மீண்டும் அதைத்தொடர வேண்டிய அவசியம் ஏற்பட்டு வருகிறது. ஆளுக்கு ஒரு மரமாவது நட்டு, நாமும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்ப்போமே?


மரம் வளர்ப்பு : சில மகிழ்ச்சித் துளிகள்!

• மதுரை மாவட்டத்தில் இருக்கும் கிராமம் மாத்தூர். இந்த ஊர் கண்மாய் கரைகளில் பலன் தரும் புளிய மரங்களை பொதுமக்கள் நட்டு, பலன் பெற்று வருகிறார்கள். விறகுக்காக கண்மாய் மாதிரி பகுதிகளில் கருவேல மரங்களை வளர்ப்பது வழக்கம். இவை நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மாத்தூர் மக்கள் இவற்றை அழித்து, கரையோரங்களில் புளியமரங்களை நட்டு வருகிறார்கள். ஆண்டு தோறும் இம்மரங்களில் புளியம்பழம் பறிக்க ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகையை அரசு கஜானாவுக்கு வருவாயாகவும் கொடுத்து அசத்தி வருகிறார்கள் மாத்தூர் மக்கள்.

• சோளங்குருணி என்கிற கிராமமும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊரின் ஊடே செல்லும் நெடுஞ்சாலையின் இருபுறமும் பொதுமக்களால் புளிய மரங்கள் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இம்மரங்கள் நெடுஞ்சாலைத் துறைக்கே சொந்தமென்றாலும், பொதுமக்கள் முன்வந்து வளர்த்தவை என்பதால், இதில் கிடைக்கும் வருமானத்தை கிராமவளர்ச்சித் திட்டங்களுக்கே நெடுஞ்சாலைத்துறை தந்துவிடுகிறது.

• திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் ஒரு சர்வதேச அமைப்பு - The International Small Group Tree Planting (TIST) – ஒரு லட்சம் மரங்களை நட திட்டமிட்டிருக்கிறது. இம்மரங்கள் முழுக்க அப்பகுதி சிறு விவசாயிகளின் நிலங்களில் நடப்படும். விவசாயிகளின் வழக்கமான பணிகளோடு, மரம் வளர்ப்பையும் சேர்த்து செய்வதின் மூலம் கூடுதல் வருவாயை அவர்கள் ஈட்ட முடியும் என்ற நோக்கத்தில் இந்த மரங்கள் நடப்படுகின்றன.



என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?

மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.
சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி
பழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.


எப்போது நடலாம்?

மரக்கன்றுகளை நட மழைக்காலமே சிறந்தது. பருவமழை துவங்கும் ஜூன் முதல் செப்டம்பர் வையிலான மழைக்காலம் இதற்கு ஏற்றது. தாழ்வான பகுதிகளில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிடுவதால், இம்மாதங்கள் ஏற்றவை. மரக்கன்றுகளை காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நடுவது நல்லது. இல்லையேல் மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் நடலாம்.


மரக்கன்றுகளை எங்கே வாங்கலாம்?

வனத்துறை அலுவலகங்கள் அருகில் இருந்தால், அவர்களிடம் விசாரித்து வாங்கலாம். வனத்துறை தோட்டங்களில் குறைந்த விலையில் தரமான மரக்கன்றுகள் கிடைக்கும். இல்லையேல் நர்சரிகளில் நீங்கள் விரும்பும் மரக்கன்றுகளை வாங்கி நடலாம். மரக்கன்றுகளை வாங்கும் இடத்திலேயே, அவற்றை பராமரிப்பது, உரமிடுவது குறித்த ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.


நகரங்களில் மரம் வளர்ப்பு!

“நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?” என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு வளர்ந்து நிற்கும். இரண்டு வருடங்களில் ஐநூறு, அறுநூறு காய்கள் காய்த்துத் தொங்கும். முருங்கை கீரையும் போனஸ்.