View status

View My Stats

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

இன்று ஒரு தகவல்

ஒரு நல்ல பதிரிக்கையர்களை நாம் கண்டிப்பாக மதிக்க வேண்டும் !!! அவர்களின் எழுத்திற்கு பின்னால் அவர்கள் படும் இன்னல்கள் ஏராளம் !!! 

மனித உரிமையை அடகு வைத்துதான் மனித உரிமை பற்றி பேச வேண்டியிருக்கிறது !!!

ஒரு நல்ல பதிரிக்கையர்களை நாம் கண்டிப்ப
ாக மதிக்க வேண்டும்.அவர்கள் ஆற்றும் பணி சொல்லில் அடக்காதது . ஒரு நல்ல எழுத்துக்கு எல்லா காலகட்டத்திலும் மக்களிடையே மதிப்பு உண்டு . பல நாடுகளில் பல புரட்சிகள் நடைபெறுவதற்கு பத்திரிக்கையாளர்களின் பங்கு இருந்து இருக்கிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே .அதில ் வெற்றி கண்ட நாடுகளும் உண்டு எழுத்திற்கு அவளவு சக்தி இருக்கிறது .

உலகில் எங்கு எந்த தாக்குதல் நடந்தாலும் அது மக்களுக்கு செய்தி மட்டும்தான். ஆனால் அதை சேகரிக்கும் மீடியாக்களுக்கு உயிர்போய் உயிர் வரும் சங்கதி. இன்று உலகம் முழுவதும் மீடியாக்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கிறது.

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் நிருபர்களை கடந்து இன்று பிரீலான்ஸர் என்று சொல்லப்படுகிற சுதந்திர பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்தவகை நிருபர்களில் 45 சதவீதம் பேரை உலகம் முழுக்க சிறையில் அடைத்து வைத்திருக்கின்றன பல்வேறு நாட்டு அரசுகள்.

இவர்கள் எந்த நிறுவனமும் சாராதவர்கள் என்பதால் பத்திரிக்கையாளர் என்ற பட்டியலிலேயே கொண்டு வராமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 136 நிருபர்கள், பல பத்திரிகை ஆசிரியர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோர் பல்வேறு நாட்டு சிறைகளில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஈரானில் மட்டும் 23 பத்திரிக்கையாளர்கள் சிறையில் உள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா? என்ற அடிப்படை தகவல் கூட பல அரசுகள் வெளியிடுவதில்லை. இலங்கையில் நடந்த படுகொலைகள் பற்றி எழுதியதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட திசநாயகம் முதல் ஈரானில் அரசுக்கு எதிராக எழுதியதாக கைது செய்யப்பட்ட பிரீயா பஜூ வரை பத்திரிக்கையாளர்கள் அரசியல் மற்றும் விசாரணை கைதிகளாக முடக்கப்பட்டு உள்ளனர்.

1992 முதல் இன்றுவரை உலகம் முழுவதும் 810 பத்திரிக்கையாளர்கள் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் 31 பேர். யுத்தங்களில் இறந்து போனவர்கள், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்கள், வேறு நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை ஆள் கடத்தல் அல்லது காணாமல் போனவர்கள் என்ற தலைப்புகளில் கீழ் வைத்திருக்கின்றன பல நாட்டு சட்டங்கள். ஊருக்கெல்லாம் செய்தி சொன்னாலும் தனக்கு ஒரு பிரச்சினை என்றால் பத்திரிக்கையாளனின் நிலையும் இதுதான். மனித உரிமையை அடகு வைத்துதான் மனித உரிமை பற்றி பேச வேண்டியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக