View status

View My Stats

திங்கள், 12 அக்டோபர், 2015

குடிக்க மழை நீர் - 100 வயது இளைஞரின் ரகசியம்!

கவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அறிவியலின் அத்தனை விஷயங்களிலும் அதீத வளர்ச்சியடைந்திருக் கிறோம். ஒருவகையில் மனித வாழ்க்கையில் அது பலப்பல முயற்சிகளுக்கு வித்தாக இருந்தாலும் பாதகமான சில விஷயங்களும் அதில் உண்டு. 

துரித உணவுகள், உடலுழைப்பு குறைந்துபோனது, பரபரப்பான வாழ்க்கைப் பயணம் மற்றும் எதிலும் விரைவை எதிர்பார்க்கும் இயல்பான குணம் இவற்றால் மனிதன் எல்லாவற்றையும் பெற்றாலும், அடிப்படையான  ஆயுட்காலத்தை இழக்கவேண்டிதான் உள்ளது.  மனிதனின் சராசரி வயது குறைந்துவிட்ட இக்காலத்தில், 5வது தலைமுறையுடன் தன் 100வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார் விருதுநகரைச் சேர்ந்த எஸ்.ஏ.நடராஜன்.
நூற்றாண்டை சந்திக்கும் பாக்கியம் பெற்ற அவரது 100வது பிறந்தநாள் விழா, உறவினர்கள் புடைசூழ இன்று சிறப்பாக நடந்தது.  நடராஜன்  முன்னாள் கால்பந்தாட்ட வீரரும்கூட. 

பருப்பு வியாபாரியான நடராஜனுக்கு பரமேஸ்வரி (88) என்ற மனைவியும்,  வன்னியராஜன், ஜெயகர், ராம நாதன், தயானந்தன் என 4 மகன்களும்,  தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 5- வது தலைமுறை கண்டுள்ள நடராஜன்- பரமேஸ்வரி குடும்பத்தில் மகன்கள், மகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரப் பிள்ளைகள் என 69 பேர் அதிசயிக்க வைக்கின்றனர்.

விருதுநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், நூற்றாண்டைக் கடந்த பூரிப்புடன் இருந்தார் 100 வயது இளைஞர் நடராஜன்.
“ சின்ன வயசிலே கால்பந்தாட்ட வீரனாக இருந்ததால் உடல் மீது அதிக கவனம் எடுத்துக்கொண்டேன். திருமணத்திற்குப் பிறகு அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டேன். சைவ உணவு மட்டுமே அளவாக எடுத்துக்கொள்கிறேன்” என்கிற நடராஜன், தன் மனைவி பரமேஸ்வரியுடன் தனியே வசிக்கிறார். இந்த வயதிலும் மனைவியின் கையால் சமைக்கும் உணவுகளையே உண்கிறார் மனிதர்.

“இப்போதும் தினமும் அதிகாலையில் எழுந்து 3 கி.மீட்டர் துாரம் நடைபயிற்சி செல்கிறேன். மழை நீரை தொட்டிகளில் சேமித்து வைத்துக்கொண்டு, பின்னர் அவைகளை செப்புக் குடங்களில் ஊற்றிவைத்து, அதை மட்டுமே எப்போதும் குடிக்கப் பயன்படுத்துவேன்.
வீட்டில் மட்டுமின்றி வெளியூர் சென்றாலும் மழைநீரையே கையோடு எடுத்துச் செல்வேன்” என்கிற நடராஜன், இன்று வரையிலும் அதை விடாமல் கடைபிடிப்பதாகக் கூறி ஆச்சர்யப்படுத்துகிறார். 

நூறுக்குள் வயது இருந்தால் நூறாண்டு வாழ்க என வாழ்த்தலாம். நறை தொட்டுவிட்ட நடராஜனை என்ன சொல்லி வாழ்த்த... 

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!!!

நன்றி - விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக