View status

View My Stats

வியாழன், 28 ஜூலை, 2016

புறா வளர்ப்பு 50 ஜோடிகளுக்கு வரவு செலவு


10 அடி நீளம்,6 அடி அகலம், 6 அடி உயரத்தில்,ஓர் அறையை கட்டவேண்டும்.செம்மண் அல்லது சுக்கான் மண்ணை சுவர் எழுப்ப பயன்படுத்த வேண்டும். சுவரில் மண்பானைகளை நெருக்கமாக வைத்து அதன் வாய் பகுதி அறையின் உள் பக்கமாக இருக்கவேண்டும்.வாசலுக்கான இடைவெளி தவிர வேறு இடைவெளிகள் இருக்ககூடாது. வசதிக்கேற்ப கூரையை அமைக்க ஓலை,கான்கிரிட் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சுவரில் பதிக்கப்பட்ட மண் பானையில் ஜோடிஜோடியாக புறாக்கள் அடைந்துக்கொள்ளும். பெண் புறா இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். முட்டையை கையால் தொடக்கூடாது. தொட்டால் முட்டைகள் பொறிக்காது. பெண் புறா அடை படுத்தவுடன் ஆண் புறா வேறு பானைக்கு மாறிவிடும். 28 ஆம் நாளில் குஞ்சுகள் பொரிக்கும்.15 நாட்கள் முடிந்துடன் குஞ்சுகளை தனியே பிரித்துவிடவேண்டும்.
30 நாட்கள் முடிந்த உடன் மீண்டும் பெண் புறா முட்டையிட தொடங்கும். ஓராண்டில் 10 குஞ்சுகள் வரை கிடைக்கும்.
25 நாளாகிய குஞ்சுகள் ஜோடி 10௦0 ரூபாய்வரை விற்பனையாகிறது. ஒரு ஜோடி புறா மூலம் 1000 ரூபாய் கிடைக்கும்.50 ஜோடிகள் வளர்த்தால் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
முதலீடு: ஒரு ஜோடிபுறா 60 ரூபாய் வீதம் 50 ஜோடிகளுக்கு 3000 ரூபாய். அறை கட்டுவதற்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகும். முதலீடு 13ஆயிரம். வருமானம் 50 ஆயிரம். லாபம் 37 ஆயிரம். தீவன செலவு மழை காலங்களில் மட்டுமே

புதன், 27 ஜூலை, 2016

அப்துல் கலாம் விஞ்ஞானி

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்  விஞ்ஞானி என்பதைத் தாண்டி, அவர் ஒரு நல்ல எழுத்தாளர். அவர் எழுதி வெளியான  "அக்னி சிறகுகள்"  என்ற மிகவும் பிரபலமான புத்தகத்தை  தவிர, மேலும் பல புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். நாட்டின் முன்னேற்றம் மற்றும் இளைஞர் மனதில் எழுச்சியை ஏற்படுத்துவது குறித்தும் பல புத்தகங்களை  அவர் எழுதி இருக்கிறார்.

• இந்தியா 2020- ல் வளர்ந்த நாடாக மாற, எந்தெந்த துறைகளில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒய்.எஸ்.ராஜனுடன் இணைந்து இவர் எழுதிய புத்தகம்தான் "இந்தியா 2020:புதிய ஆயிரம் ஆண்டுக்கான ஒரு பார்வை"(India 2020- A vision for a new millennium).

• கலாம் ஒரு  பள்ளிக்கு சென்றிருந்தார். அங்கு ஒரு குழந்தை "உங்கள் எதிரி யார்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கலாம் "நம் எதிரி வறுமை" என்றார். இந்த கேள்வியின் தாக்கத்தினால் கலாம் ஒரு புத்தகத்தை எழுதி, அதை அந்த குழந்தைக்கே சமர்ப்பித்தார். அந்த புத்தகம்தான் "இக்னைடெட் மைண்ட்ஸ்"(Ignited minds-Unleashing the power within India).

• ஒரு புத்தகம், இந்திய பொருளாதாரத்தை முன்வைத்தும் கிராமப்புறங்களில் உள்ள பிரச்னைகள் குறித்தும் அதற்கான தீர்வுகளுடன் வெளியானது. ஸ்ரீஜன் பால் சிங்குடன் இணைந்து கலாம் எழுதிய இந்தப் புத்தகம் தான் "இலக்கு 3 பில்லியன்"(Target 3 Billion).


• அப்துல் கலாமின் எழுச்சியூட்டக்கூடிய கவிதைகள், முதுமொழிகள் போன்ற பல்வேறு சிறந்த படைப்புகளின் தொகுப்புதான்,"ஊக்கப்படுத்தும் யோசனைகள்"(Inspiring Thoughts) என்ற புத்தகம்.

• கலாம் ஏன் 2002-ல் ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற முடிவை எடுத்தார் என்பது குறித்தும், பின் 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் பல பேரின் ஆதரவு இருந்தும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்தும்  கூறும் ஒரு புத்தகம்தான் "திருப்புமுனைகள்: சவால்களுக்கு இடையே ஒரு பயணம்"(Turning Points: A journey through challenges).

• ராமேஸ்வரத்தில் துள்ளி விளையாடும் சிறு பருவத்தில் இருந்து நாட்டின் முதல் குடிமகன் ஆனது வரை,  தனது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், வெற்றியை நோக்கிச் செல்லும்போது வந்த தோல்விகளையும் பற்றி அவரே கூறும் ஒரு புத்தகம் "எனது பயணம்"(My Journey: Transforming dreams into actions).

• இது மட்டும் அல்லாது "வெளிச்ச பொறிகள்"(The Luminous Sparks), "மிஷன் இந்தியா"(Mission India)  போன்ற புத்தகங்களில் பல தகவல்களை கூறியுள்ளார்  கலாம்.

*The Naked Truth of Life*

There was a man with four wives.He loved his fourth wife the most and took great care of her and gave her the best.

He also loved his third wife and always wanted to show her off to his friends. However, he always had a fear that she might runaway with some other man.

He loved his second wife too. Whenever he faced some problems, he always turned to his second wife and she would always help him out.

He did not love his first wife though she loved him deeply, was very loyal to him and took great care of him.

One day the man fell very ill and knew that he is going to die soon. He told himself, *_"I have four wives. I will take one of them along with me when I die to keep me company in my death."_*

Thus, he asked the fourth wife to die along with him and keep him company. *_"No way!"_* she replied and walked away without another word.

He asked his third wife. She said *_"Life is so good over here. I'm going to remarry when you die"._*

He then asked his second wife. She said *_"I'm Sorry. I can't help you this time around. At the most I can only accompany you till your grave."_*

By now his heart sank and he turned cold. Then a voice called out: *_"I'll go with you. I'll follow you no matter where you go."_*

The man looked up and there was his first wife. She was so skinny, almost like she suffered from malnutrition. Greatly grieved, the man said, *_"I should have taken much better care of you while I could have!"_*

Actually, we all have four wives in our lives.

a. *The fourth wife is our body.* No matter how much time and effort we lavish in making it look good, it'll leave us when we die.

b. *The third wife is our possession, status and wealth.* When we die, they go to others.

c. *The second wife is our family and friends.* No matter how close they had been there for us when we're alive, the furthest they can stay by us is up to the grave.

d. *The first wife is our soul,* neglected in our pursuit of material wealth and pleasure. It is actually the only thing that follows us wherever we go.

*_One of the best messages I have received_*

Pass it on.....

🙏🌹

Careers through SSC & Bank PO - a comparison!


Dear PagaLGuY readers,
There are a lot of misconceptions about SSC vis-a-vis Bank PO. General perception is that SSC is better than PO. But that's not necessarily true. But first I want to make it clear that I am not prescribing anything to anybody. I am just giving an objective analysis. You can still hold a contrary view and take your own decision.
Here is my analysis:
1. Growth prospects: You should always think in terms of long term, not short term. In long term, does SSC provide better career than PO. Obviously not. Think for yoyrself. Does a post in SSC gives you an opportunity to reach to the top i.e. Secretary to the Govt of India. Never. All top posts in your department or ministry will be occupied by UPSC Direct Recruits. You will always be junior to them throughout your career. There is no way to surpass them in seniority.
Now look at the PO. PO is the highest level of entry in any banking organisation. It gives you opportunity to reach to the top i.e. CMD. In-fact all CMDs were once a PO.
(i) Ever heard of Mr S S Mundhra, DG, RBI? He started his career as Probationary Officer in Bank of Baroda.
(ii) Ever heard of Mr Yogesh Agarwal, Former Chairman, Pension Fund Regulatory and Development Authority (PFRDA)? He started his career as Probationary Officer in State Bank of India (SBI).
Many senior Govt officers used to work under him. There are many such examples. Does that make you feel positive about PO? Don't think in short term that you will have to handle cash or cross-sell insurance. Think what you can do in 30-35 years of your career.
2. Money / Earnings / Emoluments: Again don't think of starting salary. Think of entire career. PO offers more earnings than any SSC recruit. And if you are so desperate to earn more then work for 10-15 years in a PSB and switch to any of private banks. Many people in my knowledge have done that. There is no constraint if you are willing to go that extra mile. Is it possible for an SSC recruit? Think yourself.
3. Transfers / Postings / Settling in life: You will feel settles as soon as you join both PO and SSC. PO job is transferable but that should be considered its strength. Imagine of spending your entire career in 8-10 cities in different parts of India. What kind of experience and contact will you develop? If you are a Branch Head in a small town or a class-2 city, you will have a good network in the town.
4. Social Status / Gazetted status: Well, in our society Govt services are exaggerated. Social status is just a game of mind. I don't feel and neither should young generation like ours should feel proud if we have authority to 'Attest the Photocopies'. Come on. A career and a job is much more than that.
5. Workload: Yes, now you have to bear the consequences if you want high growth. PO job is much more demanding and time consuming than SSC jobs. SSC will give you much more peace of mind and better work-life balance. But we are in an organisation to work hard, not to take rest. All you need is develop a passion for the job. You may take a call.
6. Job security: Again, it's more in a Central Govt post than in PSB or PSU for that matter. But all PSBs have considerable job security as long as you work honestly and efficiently. Banks don't expel its employees for fun.
7. Exposure: By exposure I mean seeing various facets and colours of life. Bank PO provides much wider and more rich exposure than SSC posts or even insurance AOs.
A banker works in rural, semi-urban and urban areas. A bankers deals with Doctors, Engineers, Corporates, Govt. organisations and law enforcement agencies among many others, understands their requirements and provides financial solutions. Obviously you will have more headaches in the Bank as well.
I have compared both purely in terms of career prospects. If anyone wants a job to prepare for other exams, then this analysis does not hold true. I am not in favour of either SSC or PO, but still I believe that one should have a balanced view of the both. PO is much better than what people think of it.
Thanks!

செவ்வாய், 26 ஜூலை, 2016

நிறைவான வருமானம் கொடுக்கும் வளர்ப்பு புறாக்கள்!

பந்தயப் புறா... அழகுப் புறா...நிறைவான வருமானம் கொடுக்கும் வளர்ப்பு புறாக்கள்!
டிதம், தந்தி, எஸ்.எம்.எஸ்... என நவீன தகவல் பரிமாற்ற சாதனங்களுக்கெல்லாம் முன்னோடி புறாக்கள்தான். சங்க காலங்களில் காதலுக்குத் தூது சொல்வது முதல்... போருக்கான அறிவிப்பைச் சொல்வது வரை அனைத்துக்கும் புறாக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படி ஆரம்பிக்கப்பட்ட புறா வளர்ப்பு இன்றளவும் தொடர்கிறது. அழகுக்காக, இறைச்சிக்காக, பந்தயத்துக்காக... என புறா வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. அந்த வகையில், மொட்டைமாடியில் அழகுப் புறாக்களையும், பந்தயப் புறாக்களையும் வளர்த்து வருகிறார், திருவண்ணாமாலை, தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த வேடியப்பன். 
புறாக்களுக்கு தீவனம் இட்டுக் கொண்டிருந்த வேடியப்பனைச் சந்தித்தோம். பல புறாக்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்க... சில புறாக்கள் தீவனத்தைக் கொத்திக் கொண்டிருந்தன.
ஆரம்பத்தில் 10 ஜோடி...
தற்போது 50 ஜோடி!
'எங்க தாத்தா, அப்பா எல்லாருமே புறா வளர்த்தவங்கதான். அதனால எனக்கும் புறா வளர்ப்புல ஆர்வம் உண்டு. எனக்கு 13 வயசு இருக்கிறப்போ அப்பா இறந்துட்டார். அதனால எட்டாவதுடன் படிப்பை முடிச்சிக்கிட்டு மளிகைக் கடை வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். கிடைச்ச சம்பளத்தை வெச்சு, பத்து ஜோடி புறாக்களை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன். இருபது வருஷமா தொடர்ந்து வளர்த்துக்கிட்டு இருக்கேன். இப்போ 50 ஜோடி புறாக்கள் கையில இருக்கு.
எனக்கு புறாக்களைப் பந்தயத்துக்குப் பழக்குறதுல ரொம்ப ஆர்வம். இந்த இருபது வருஷங்கள்ல நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். புறாவை அழகுக்காகவும், பந்தயத்துக்காகவும்தான் அதிகளவுல வளர்க்கிறாங்க. பந்தயத்துல ரெண்டு விதம் இருக்கு. அதிக நேரம் பறக்கிறது ஒரு பந்தயம். தூரத்துல விட்டுட்டு வந்தாலும் இருப்பிடத்துக்குத் திரும்பி வர்றது ஒரு பந்தயம். இதுல 'பெட்டிங்’லாம் கிடையாது. பரிசு மட்டும்தான்' என்று முன்னுரை கொடுத்த வேடியப்பன், தொடர்ந்தார்.
பல்டி அடிக்கும் கர்ணப் புறா!
'அதிக நேரம் பறக்குற போட்டிக்காக நான், 'கர்ணப் புறா, பட்ன சாதா புறா’னு ரெண்டு ரகங்களை வளர்க்கிறேன். கர்ணப் புறாக்கள் அதிக உயரத்துல பறக்கும். தொடர்ச்சியாக 13 மணி நேரம் வரை கூட பறக்கும். பறக்குறப்போ 'பல்டி’ அடிக்கும். இந்த ரகம் சராசரியா ஒரு ஜோடி 2 ஆயிரம் ரூபாய்னு விற்பனையாகுது. பட்ன சாதா புறா தொடர்ந்து 15 மணி நேரம் வரைக்கும் பறக்கக் கூடியது. ஆனா, இது பல்டி அடிக்காது. இதுவும் ஜோடி 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும்.
நீண்ட தூரம் பறக்கும் ஹோமர் புறா!
ஹோமர் புறா ரகம்தான் அதிக தூர பந்தயங்களுக்குப் பயன்படுத்தப்படுது. நான் பயிற்சி கொடுத்த புறாக்கள் 125 கிலோ மீட்டர் தூரத்தை, ஒண்ணரை மணி நேரத்தில் கடந்து வந்திருக்கு. பறக்கும்போது, சில சமயங்கள்ல பருந்துகள் அடிச்சுடும். சில சமயங்கள்ல வெளியில குடிக்கிற தண்ணீர் சேராமப் போயிடும். அதனால புறாக்கள் இறந்துடும். 10 புறாக்களை இப்படி பறக்க விட்டா... அதிகபட்சமா 7 புறாக்கள்தான் திரும்பி வரும். இந்த வகைப்புறாக்கள் ஜோடி 3 ஆயிரம் ரூபாய்ல இருந்து  4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும்.  
அழகுக்காக வளர்க்கப்படுற புறாக்கள்ல பல வகைகள் இருக்குது. நான் கட்ட மூக்கு ஹோமர், ஆஸ்திரேலியா பர்ஃபி ரகங்களை வெச்சிருக்கேன். இதில்லாம பெயர் தெரியாத ரக பல வகையான புறாக்களையும் வளர்க்கிறேன். வீடுகள்ல அழகுக்காக வளர்க்கிற புறாக்கள் ஜோடி ஆயிரம் ரூபாய்ல இருந்து 1,500 ரூபாய் வரை விற்பனையாகும். நாட்டுப் புறாக்களையும், வயதான புறாக்களையும் மருந்துக்காக வாங்கிட்டுப் போவாங்க. அந்த மாதிரி புறாக்கள், ஜோடி 250 ரூபாய்ல இருந்து 500 ரூபாய் வரை விற்பனையாகும்' என்ற வேடியப்பன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
270 சதுர அடியில் 85 ஆயிரம்!
"270 சதுர அடி மொட்டை மாடியில, 50 ஜோடி புறாக்களை வளர்க்கிறேன். ஒரு ஜோடி புறா மூலம் வருஷத்துக்கு ஆறு முட்டை வீதம், மொத்தம் 300 முட்டைகள் கிடைக்கும். பொரிக்க வைத்துப் புறாக்களை உற்பத்தி செய்யும்போது, பொரிக்காத முட்டைகள், இறக்கும் குஞ்சுகள் எல்லாம் போக... சராசரியா 130 ஜோடி புறாக்கள் கிடைக்கும். எப்பவும் என்கிட்ட 50 ஜோடி இருக்கிற மாதிரி பார்த்துக்குவேன். சில புறாக்கள் பந்தயத்துல இறந்துடும். அந்த மாதிரி இழப்பை புதுக் குஞ்சுகள் மூலமா ஈடுகட்டிக்குவேன். அந்த வகையில பார்த்தா வருஷத்துக்கு 100 ஜோடியைத்தான் விற்பனை செய்ய முடியும். ஒரு ஜோடி சராசரியா ஆயிரம் ரூபாய்னு விற்பனை செய்தா, 100 ஜோடி மூலம் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். வயதான புறாக்கள், மருந்துக்காக விற்பனை செய்ற குஞ்சுகள் மூலமா 10 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் வரும். அதில், தீவனம், மருந்துனு எல்லா செலவும் போக, 85 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபமா நிக்கும். சந்தோஷத்தோட வருமானமும் கிடைக்கிறதுதால புறா வளர்ப்பை நேசிச்சு செய்துக்கிட்டு இருக்கேன்' என்று முகம் மலரச் சொன்னார் வேடியப்பன்! 
 காசி.வேம்பையன்
 படங்கள்: கா.முரளி

100 புறாக்களுக்கு 3 கிலோ தீவனம்!
100 வளர்ப்புப் புறாக்களுக்கு நாள் ஒன்றுக்கு கேழ்வரகு  1 கிலோ, சோளம் அரை கிலோ, கம்பு அரை கிலோ, கோதுமை  அரை கிலோ, மக்காச்சோளம்  அரை கிலோ ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தீவனமாகக் கொடுக்க வேண்டும்.
பந்தயப் புறாக்களைப் பொறுத்தவரை... பத்து புறாக்களுக்கு நாள் ஒன்றுக்கு பச்சைப்பட்டாணி  1 கிலோ, கொண்டைக்கடலை அரை கிலோ, பச்சைப்பயறு  அரை கிலோ, நிலக்கடலை அரை கிலோ, சஃபோலா விதை  அரை கிலோ ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வைக்க வேண்டும்.
புறாக்களுக்கு தினமும் காலை, மதியம், மாலை நேரங்களில் தண்ணீர் வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை கூண்டுகளை சுத்தம் செய்ய வேண்டும். அழகுக்காக வளர்க்கும் புறாக்களைக் காலையில் திறந்து விட்டு, மாலையில் அடைத்து வைத்தால் போதும். பந்தயப் புறாக்களை வாரம் ஒரு முறை மட்டும்தான் திறந்து பறக்க விட வேண்டும். புறாக்களுக்கு அம்மை, கழிச்சல் மாதிரியான நோய்கள் தாக்கினால், கடைகளில் கிடைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
 வளர்ப்புக்கு ஏற்ற 4 மாத குஞ்சுகள்!
வளர்ப்புக்காக இருந்தாலும் சரி... பந்தயங்களுக்குப் பழக்குவதாக இருந்தாலும் சரி,  நான்கு மாத வயது கொண்ட புறாக்களைத்தான் வாங்க வேண்டும். புதிதாக வாங்கிவந்த புறாக்களின் இறக்கையில் ரப்பர் பேண்டு போட்டு 20 நாட்கள் வைத்திருந்தால், இடம் பழகிவிடும். பந்தயப் புறாக்களுக்கு மூன்று மாதங்கள் முடிய கடுமையான பயிற்சி கொடுக்க வேண்டும்.
 ஆண்டுக்கு 6 முட்டை!
ஒரு புறா மூன்று மாதத்துக்கு ஒரு முறை இரண்டு முட்டைகள் வீதம் இடும். ஆண்டுக்கு நான்கு முறை முட்டை விடுவதற்கு வாய்ப்பிருந்தாலும், மூன்று முறை மட்டும்தான் இனப்பெருக்கத்துக்கு அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் ஆண்டுக்கு 6 முட்டைகள் கிடைக்கும். இந்த ஆறு முட்டைகளும் தரமானதாக இருந்தால், 6 குஞ்சுகள் கிடைக்கும். 18 முதல் 20 நாட்களில் புறாக்கள், குஞ்சுகளைப் பொரிக்கும். தாய்ப் பறவையும், தந்தைப் பறவையும் வாயில் கொண்டு வரும் உணவைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஊட்டி வளர்க்கும். பறக்க ஆரம்பித்த குஞ்சுக்கு அந்த இடத்தைக் கொடுத்துவிட்டு, பெற்றோர்கள் வேறு இடத்துக்கு மாறிவிடுவார்கள்.
 புறா வளர்ப்புக்கு ஏற்ற மொட்டை மாடி!
புறாக்களை வளர்க்க மொட்டை மாடி போதுமானது. ஒரு ஜோடி புறாவை அடைப்பதற்கு, ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி அளவில் கூண்டுகள் தேவை. அதிகமான அளவில் புறாக்களை வளர்க்கும் போது... ஒரு புறாவுக்கு முக்கால் அடி நீள, அகல, உயரத்தில் சிறிய அறைகளாக அமைத்துக் கொள்ள வேண்டும். பந்தயப் புறாக்களில் ஆண், பெண் புறாக்களைத் தனித்தனியாக கூண்டுகளில் அடைக்க வேண்டும். பருவகாலத்தில் மட்டும்தான் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.

இரண்டே கால் கோடிக்கு விற்பனையான பெல்ஜியம் பந்தயப் புறா!
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் லியோ ஹெர்மன்ஸ். இவர் பந்தயப் புறாக்கள் உட்பட, பல பறவைகளை வளர்ப்பதில் நிபுணர். ஒரு பந்தயப் புறாவுக்கு 'போல்ட்’ என்று பெயரிட்டு இவர் வளர்த்து வந்தார். அது, பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பரிசுகளைக் குவித்தது. இந்நிலையில், தன்னிடம் இருந்த எல்லா பறவைகளையும் விற்பனை செய்ய முடிவு செய்த லியோ, ஆன்லைனில் தன்னிடம் இருந்த 530 புறாக்களையும் ஏலம் விட்டார். இதன் மூலம் அவருக்கு 32 கோடி ரூபாய் கிடைத்தது. அதில், 'போல்ட்’ பந்தயப் புறா மட்டும் 2 கோடியே 25 லட்ச  ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே உலக அளவில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்ட புறா.
சாதனை படைத்த போல்ட் புறாவை, சீன வர்த்தகர் ஒருவர் வாங்கி உள்ளார். அவர் போல்ட் புறா மூலம் இனப்பெருக்கம் செய்து அவற்றை விற்பனை செய்யப் போவதாகச் சொல்லி இருக்கிறார். ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் புறா பந்தயம் புகழ் பெற்றது. பந்தயங்களில் வெற்றி பெறும் புறாக்களின் முட்டைகள் 25 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இறக்குமதி செய்யப்பட்ட முட்டையில் இருந்து, கிடைக்கும் புறாவுடன் நம் நாட்டில் இருக்கும் பந்தயப் புறாக்களைக் கலப்புச் செய்து தரமான புறாக்களை உருவாக்குகின்றனர் நம் நாட்டினர்.
புறா வளர்த்தால் குடும்பத்துக்கு ஆகாதா...?
புறாக்கள் ஒற்றைக் காலில் நிற்கும். இதனால் அந்தக் குடும்பத்தில் கெட்டது நடக்கும். புறாக்களின் அனத்தல் சத்தம் அபசகுனம்... என்றெல்லாம் நிறைய மூடநம்பிக்கைகள் உள்ளன.
குறிப்பாக, புறாக்கள் உள்ள இடம் இடிந்து, பாழடைந்துவிடும் என்றும்கூட சொல்கிறார்கள். ஆனால், உண்மை நிலை வேறுமாதிரியாக உள்ளது. மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் புறாக்களுக்கு தனி மரியாதை உண்டு. கடிதப் போக்குவரத்து, புறாக்கள் மூலமும் நடந்தது. அரண்மனையின் அந்தப்புரத்தில் புறாக்கள் கட்டாயம் இருக்கும்.
புறாக்கள் இல்லாத அந்தப்புரத்தில் பெண்கள் வசிக்க விரும்பமாட்டார்களாம். அதாவது, புறாக்கள் இருக்கும் இடத்தில்தான் அமைதி இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
 புறா... சில தகவல்கள்!  
பலவகையான பறவைகள், விலங்குகள் இருந்தாலும் 'சமாதானப் பறவை’ என்ற அடையாளம் வெள்ளை நிறத்தில் இருக்கும் புறக்களுக்கு மட்டுமே உள்ளது.
ஒரு புறா சராசரியாக 8 முதல் 9 அங்குல உயரம் வரை வளரக்கூடியது.
தாய்/தந்தைப் புறாக்கள், குஞ்சுகளுக்காக உணவு ஊட்டும்போது, தன் உடலில் சுரக்கும் ஜீரணமாக்கும் என்சைமை உணவோடு கலந்து கலவையாக ஊட்டும். இதை 'புறாப் பால்’ என்பார்கள்.
புறாக்குஞ்சுகள் 5 முதல் 6 மாதங்களில் பருவத்துக்கு வந்துவிடும். பிறந்த 6 முதல் 8 வாரங்களில் புறாக் குஞ்சுகள் கூட்டைவிட்டுப் பறந்துவிடும்.
ஆண் புறா, தன் பெண் புறாவை அழைக்கத் தலையை ஆட்டி ஆட்டி 'குர்..குர்’ என ஒலி எழுப்பும். இதை வைத்து ஆண், பெண் புறாக்களை அடையாளம் காணலாம்.
புறாக்கள் பெரும்பாலும் உயரமான இடங்களில் வாழ்வதையே விரும்பும்.
கி.மு. 4500ம் ஆண்டில் இருந்து வீட்டுப் பறவையாகப் புறா வளர்க்கப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஒரு புறாவின் சராசரி எடை 300  கிராம் முதல் 350 கிராம் வரை இருக்கும்.
புறாக்கள் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியவை.
தொடர்புக்கு,
வேடியப்பன்,
செல்போன்: 9629677087.

ஜோரான வருமானம் தரும், ஜோடிப் புறா! 


ஜோரான வருமானம் தரும், ஜோடிப் புறா! 

தீவனச் செலவு, பராமரிப்பு இல்லை.குஞ்சுப் புறாக்களுக்குத்தான் கிராக்கி ,பொழுது போக்குடன் கூடிய வருமானம்.
விவசாயம் வில்லங்கமாகும் போது, விவசாயிகளுக்குக் கைகொடுத்து கரை சேர்ப்பது.. கால்நடை வளர்ப்புத்தான். ஆனால், அதிலும் முதலீடு, நோய்த் தாக்குதல், தீவனச் செலவு என சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஆனால், மிகக்குறைந்த முதலீடு, தீவனச் செலவு, நோய்த் தாக்குதல் என எந்தச் சிக்கலும் இல்லாமல்.. பொழுதுபோக்குடன், வருமானத்திற்கும் வழிவகை 
செய்கிறது புறா வளர்ப்பு!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள குஞ்சாம்பாளையம், சீதாபாரதி, பல ஆண்டுகளாக புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர். அவரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது.. கண்களில் உற்சாகம் படபடக்கப் பேசத் தொடங்கினார்.

“எங்களுக்குனு இருக்கிற ஒரு ஏக்கர் நிலத்தில், மாட்டுக்குத் தேவையான பயிர், பச்சையை மட்டும் விதைப்போம். மத்தப்படி விவசாயத்துல பெரிதாக வருமானம் இல்லை. ரொம்ப வருடமாக நாங்க செய்துகிட்டு வர்ற புறா வளர்ப்புதான் ஓரளவு கைக்கொடுக்குது. ஆரம்பத்தில் பொழுதுபோக்கா பழைய பெட்டியில் இரண்டு ஜோடியை விட்டு வளர்த்தோம். அது இன்றைக்கு ஒரு தொழிலா வளர்ந்து நிற்கிறது” என்ற சீதாபாரதி, புறா வளர்ப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் விவரித்தார்.
‘கோழி, முயல், காடை வளர்ப்பில் வருமானம் அதிகம். என்றாலும், அதற்கு ஏற்ப கொட்டகை, மின்சாரம், தண்ணீர், தீவனம் என செலவுகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதே போல ஒவ்வொரு சீசனுக்கும் ஏதாவது ஒரு நோய் தாக்குதல் இருக்கும். ஆனால், புறா வளர்ப்பில் இது போன்ற எந்தத் தொல்லைகளும் இல்லை. புறாக்கள் தங்குவதற்கு மட்டும் ஒரு கூண்டு ஏற்பாடு செய்தால், போதும். மற்றபடி, எந்தத் தொல்லையும் வைக்காமல் அவை வெளியே சென்று இரையைத் தேடிக்கொண்டு, திரும்பிவிடும்.

தீவனச் செலவே இல்லை!
சிறிய அளவில் நான்க அல்லது ஐந்து ஜொடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும்.
மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் போது, இடையில் செங்கல் அல்லது கருங்கல் வைப்பதற்கு பதிலாக மண்பானைகளை நெருக்கமாக வைத்து கட்ட வேண்டும். இந்தப் பானைகளின் வாய்ப்பகுதி, அறைக்கு உள்பக்கமாக இருக்க வேண்டும். இதில்தான் புறாக்கள் வசிக்கும்.
வாசலுக்கான இடைவெளியைத் தவிர, வேறு எந்தப் பக்கமும் இடைவெளி இல்லாமல் வெளிப்புறச் சுவற்றை சிமெண்ட் வைத்து வழவழப்பாக பூசிவிட வேண்டும். வெளிச்சுவர் வழவழப்பாக இருந்தால்தான் விஷப்பூச்சிகள் சுற்றின் மீது ஏறி அறைக்குள் வராது. அதே போல அறையின் கீழ்பகுதிகளிலும், விஷப்பூச்சிகள் நுழையாதவாறு இடைவெளி இல்லாமல் அடைத்து விட வேண்டும்.

இரை தேடி, வெளியே போய் வருவதற்கு வசதியாக. சுவற்றில் ஐந்தரை அடி உயரத்தில், வீடுகளில் வெண்டிலெட்டர் வைப்பதைப் போல, சிறியதாக சதுர வடிவில் இரண்டு பக்கமும் இடைவெளி விட வேண்டும். கூரைக்கு ஓலை, தகரம், கான்கிரீட் என வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.
புறாக்களை அறைக்குள் விட்டுவிட்டால், ஜோடிஜோடியாக பானைகளுக்குள் சென்று அடைந்து கொள்ளும். மழைக் காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது, மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பருவம் வந்தவுடன் பெண் புறா முட்டையிடும். ஒரு பெண்புறா, இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். அருகிலுள்ள மற்றொரு பானையில் ஆண் புறா வசிக்கும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், முட்டையைக் கையால் தொடக் கூடாது, அப்படி தொட்டால் அந்த முட்டை பொறிக்காது. அடை உட்கார்ந்த 28 நாட்களில் குஞ்சு பொறிக்கும். 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான், அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும். ஒரு பெண்புறா மூலமாக ஓராண்டுக்கு குறைந்தது 10 குஞ்சுகள் வரை கிடைக்கும். 

ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம்!
வியாபார ரீதியா புறா வளர்க்க நினைப்பவர்கள், குஞ்சு பொறித்த 15 –ம் நாளில் குஞ்சுகளைப் பிரித்து, தனியாக வைத்து தீவனம் கொடுத்து வளர்த்தால்.. கூடுதல் எடை கிடைக்கும். புறா வளர்ப்பைப் பொறுத்தவரை இளம் குஞ்சுகளுக்குத்தான் கிராக்கி. 25 நாள் வயதுள்ள குஞ்சுகள் ஒரு ஜோடி 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இளம் குஞ்சுகளை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.


இளம் குஞ்சுகளின் ரத்தத்தை மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால், வலி குணமாகிவிடும் என்று அதற்காகவும் குஞ்சுகளை வாங்கிச் செல்கிறார்கள். அதே போல குஞ்சுகளில்தான் கறி அதிகமாக இருக்கும். பெரிய புறாவில் எலும்பு மட்டும் தான் இருக்கும். 25 நாள் வயதுள்ள குஞ்சு 300 முதல் 400 கிராம் எடை இருக்கும். குஞ்சுகளின் கறியை பக்கவாதம், மூலம் மாதிரியான நோய்களுக்கு மருந்தாக சிபாரிசு செய்கிறார்கள். பெரிய புறா ஜோடி 60 ரூபாய்க்குதான் விற்பனையாகும்.

ஒரு குஞ்சு 100 ரூபாய் வீதம் விற்பனை ஆனாலே .. ஒரு ஜோடிப் புறா மூலமாக ஆண்டுக்கு 1,000 ரூபாய் கிடைக்கும். 50 ஜோடிகள் இருந்தால், அதன் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். முதலீட்டைப் பொறுத்தவரை அறை கட்டுவதற்கு அதிகபட்சம் ரூ பத்தாயிரம்

தொடர்புக்கு:

சீதாபாரதி
அலைபேசி :98427-67355


வழ வழப்பான புறாக்கூண்டு:

 சிறிய அளவில் நான்கு அல்லது ஐந்து ஜோடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும். மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் போது, இடையில் செங்கல் அல்லது கருங்கல் வைப்பதற்கு பதிலாக மண்பானைகளை நெருக்கமாக வைத்து கட்ட வேண்டும். இந்தப் பானைகளின் வாய்ப்பகுதி, அறைக்கு உள்பக்கமாக இருக்க வேண்டும். இதில்தான் புறாக்கள் வசிக்கும். வாசலுக்கான இடைவெளியைத் தவிர, வேறு எந்தப் பக்கமும் இடைவெளி இல்லாமல் வெளிப்புறச் சுவற்றை சிமெண்ட் வைத்து வழவழப்பாக பூசிவிட வேண்டும். வெளிச்சுவர் வழவழப்பாக இருந்தால்தான் விஷப்பூச்சிகள் சுற்றின் மீது ஏறி அறைக்குள் வராது. அதே போல அறையின் கீழ்பகுதிகளிலும், விஷப்பூச்சிகள் நுழையாதவாறு இடைவெளி இல்லாமல் அடைத்து விட வேண்டும். இரை தேடி, வெளியே போய் வருவதற்கு வசதியாக. சுவற்றில் ஐந்தரை அடி உயரத்தில், வீடுகளில் வெண்டிலெட்டர் வைப்பதைப் போல, சிறியதாக சதுர வடிவில் இரண்டு பக்கமும் இடைவெளி விட வேண்டும். கூரைக்கு ஓலை, தகரம், கான்கிரீட் என வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். புறாக்களை அறைக்குள் விட்டுவிட்டால், ஜோடிஜோடியாக பானைகளுக்குள் சென்று அடைந்து கொள்ளும். 

தானிய உணவுகள்:

 மழைக் காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது, மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பருவம் வந்தவுடன் பெண் புறா முட்டையிடும். ஒரு பெண்புறா, இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். அருகிலுள்ள மற்றொரு பானையில் ஆண் புறா வசிக்கும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், முட்டையைக் கையால் தொடக் கூடாது, அப்படி தொட்டால் அந்த முட்டை பொறிக்காது. அடை உட்கார்ந்த 28 நாட்களில் குஞ்சு பொறிக்கும். 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான், அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும். 

உலர்வான கூண்டு

 எப்பொழுதும் கூட்டைச் சுத்தமாக, உலர்வாக வைத்திருங்கள். நீர் வைக்கும் பாத்திரம் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். மூன்று நான்கு நாட்களுக்கொருமுறை நீரில் வைட்டமின் B மாத்திரை ஒன்று கலந்து விடலாம். அது கோழித்தீவனம் விற்குமிடத்தில் கிடைக்கும். கோழிகளை விட இவை சிறிய பறவைகள் என்பதால் அந்த அளவைவிட சிறிது குறைத்துக் கொடுக்கலாம். 
கோழிகளோடு சேர்த்து வளரவிடாதீர்கள். அவற்றிலிருந்து ஏதாவது தொற்றக்கூடும்

ஒரு பறவையை கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்று காட்டுங்கள், தலை சுற்றல்நோய் மழைக்காலங்களில்தான் புறாவிற்கு தலை சுற்றல் நோய் வரும். எனவே இந்த நேரத்தில் கூண்டினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், புறா சாப்பிட்ட மீதி உணவை மீண்டும் வைக்கக் கூடாது. மழை காலத்தில் தண்ணீரில் மஞ்சள் கலந்து வைப்பது நோய் கிருமி தாக்குதலை தடுக்கும் வெயில் அவசியம் புறா மீது தினமும் வெயில் பட செய்ய வேண்டும். இதையும் மீறி தலை சுற்று நோய் வந்து விட்டால் பறவை நல மருத்துவரின் அறிவுரையோடு நிரோபியான் (NIROBIAN) மாத்திரை வாங்கி ஒரு வேளைக்கு 1/4 பகுதி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை கொடுக்கலாம் என்கின்றனர் பறவை வளர்ப்பாளர்கள்.

 இரண்டு நாட்களில் சரியாகிவிடும். தலை சுற்று நோய் வந்த புறா வை கூண்டில் இருந்து தனியாக பிரித்து வைக்க வேண்டும். இல்லை எனில் இது மற்ற புறா விற்கும் நோய் தாக்கும் அபாயம் உண்டு. முக்கியமாக எந்த காரணம் கொண்டும் இருட்டான அறையில் தலை சுற்று நோய் வந்த புறா வை அடைத்து வைக்க கூடாது.

திங்கள், 25 ஜூலை, 2016

உழைக்கும் மக்கள் யாவரும்...

தொழிற்சாலைகள் என்ற நவீன உற்பத்தி முறைக்குள் மனிதர்கள் வேலை செய்ய வைக்கப்பட்டபோது, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் கூட அவர்கள் வேலை செய்யும்படியான சூழல் ஏற்பட்டது. குழந்தைகள், பெண்கள் என்று உரிமைகள் எதுவும் தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடிய காலம் இல்லை அது. எல்லோரும் கசக்கிப் பிழியப்பட்டனர். 10 மணி நேரம்தான் வேலை செய்வோம் என்று முதலில் எதிர்ப்பு ஆரம்பித்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு, 8 மணி நேர வேலை என அவர்களின் கோரிக்கை உயர்ந்தது.
கடுமையான போராட்டங்களின் விளைவால், அமெரிக்காவில் 1856 முதல் சில இடங்களில் 8 மணி நேர வேலை அளிக்கப்பட்டது. ஆனாலும், அனைவருக்கும் அந்த உரிமை கிடைக்கும் வகையில் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கார்ல் மார்க்ஸ் தலைமையிலான சர்வதேசத் தொழிலாளர் இயக்கம் எழுப்பியது. 1867-ல் தான் வெளியிட்ட மூலதனம் நூலின் முதல் தொகுதியில் 8 மணி நேர வேலையை மார்க்ஸ் விவாதித்துள்ளார்.
1886 மே 4-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த மோதல்கள், தொழிலாளர்கள் படுகொலைக்குப் பிறகு, 8 மணி நேர வேலையை அறிவிக்க வேண்டிய நெருக்கடி தீவிரமானது. 8 மணி நேர வேலை நேர உரிமையை அனுபவிக்கிற தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக விரிவடைந்தது.
1916-ல் அமெரிக்க ரயில்வே தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை எனச் சட்டம் இயற்றப்பட்டது.1938-ல் அமெரிக்கா வாரத்துக்கு 44 மணி நேர வேலையை (சராசரியாக 8 மணி நேரத்துக்கும் குறைவாக) சட்டப்படியான வேலை நேரமாக அறிவித்தது. இவ்வாறு நியாயமான வேலை நேரத்தை அனுபவிக்கிற தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக விரிவடைந்துவந்துள்ளது. 1914-ல் அமெரிக்க ஃபோர்டு மோட்டார் கம்பெனி 8 மணி நேர வேலையை அறிவித்தது.
இந்தியாவில் 8 மணி நேரம்
1923-ல் சென்னையில் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் நீதிமன்றம் அருகிலும், திருவல்லிக்கேணியிலும் மே தின நிகழ்ச்சிகளை நடத்தி, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வெளியிட் டார். கம்யூனிஸ்ட் தலைவர் வி. சுப்பையா புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்காக நடத்திய போராட்டத்தால், 1936 ஜூலை 30-ல் 12 ஜவுளித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரியில் 8 மணி நேர வேலைக்கான சட்டத்தை ஃபிரான்ஸ் இயற்றியது. இந்தியாவில் 1948 முதல் சட்டரீதியாக 8 மணி நேர வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இந்தியாவின் டாடா ஸ்டீல் நிறுவனம் 1912-ல் தனது தொழிலாளர்களுக்குத் தானாக முன்வந்து 8 மணிநேர வேலையை அளித்ததை நல்லெண்ணச் செயலாகவே பார்க்க வேண்டும்.
இன்றைய மேற்கத்திய தொழிலாளர் வர்க்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையைத் தாண்டி சில துறைகளில் 6 மணி நேர வேலையையும் அனுபவிக்கிறது. அது தொடர்பான சமூகப் பாதுகாப்புச் சட்டங்களும் வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலோ நேரம் காலம் பார்க்காமல் உழைத்தாக வேண்டிய வகையில் பழைய கால வேலை நேரங்கள் எட்டிப்பார்க்கவும் செய்கின்றன.
அமைப்புசாராத் தொழிலாளர்கள்
இந்தியா ஏறத்தாழ 49 கோடி தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிகமாகத் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் 50 லட்சம் தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர். அவர்களில் 94% பேர் அமைப்புசாராத் தொழில்களில் தான் வேலை செய்கிறார்கள். அரசு ஊழியர்களாக ஒரு கோடியே 70 லட்சம் பேர் உள்ளனர். அவர்களையும் சேர்த்து ஏறத்தாழ இரண்டு கோடியே 70 லட்சம் பேர்தான் ஒழுங்கமைக்கப்பட்ட, அமைப்பு சார்ந்த தொழில்களில் உள்ளனர். அவர்கள்தான் பெரும்பாலும் 8 மணி நேர வேலையை அனுபவிக்கின்றனர் என்று சொல்லலாம். மற்ற 47 கோடித் தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு 8 மணி நேர வேலை என்பது இன்னமும் கனவாகவே இருக்கிறது.
இந்தியாவில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பணிகளில்தான் அமைப்புசாராத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களைத் தவிர்த்து, வேலைக்காக இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களாக மூன்று கோடிப் பேர் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. அவர்களில் மத்தியக் கிழக்கு நாடுகளில் 40 லட்சம் பேர் வரை பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் கட்டிடப் பணிகளை அவர்கள் அங்கு செய்கின்றனர். அந்த நாடுகளில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் மிகவும் குறைவு. உள்நாட்டுக்குள்ளேயே வேலைக்காக இடம்பெயர்பவர்கள் 42 லட்சம் பேர் எனக் கணிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் பெயரளவில்தான் இருக்கின்றன.
வேலைப் பாதுகாப்பு எதுவும் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களாக மூன்று கோடியே 60 லட்சம் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 8 மணி நேர வேலை நேரம் உள்ளிட்ட எந்த ஒரு உரிமையையும் இவர்கள் அனுபவிப்பதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர் முறையே ஒழிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவும் செய்கிறது.
இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஒரு கோடியே 26 லட்சம் பேர்; அவர்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ஆபத்தான தொழில்களில் இருப்பதாகத் தெரிகிறது. குழந்தைகளை வேலைக்கு வைப்பது சட்டப்படி தடைசெய்யப்பட்டிருந்தாலும்கூட நடைமுறையில் அது இயல்பாக இருப்பதுதான் வேதனை.
நவீன அடிமைத்தனம்
அடிமைத்தனத்தின் இன்னமும் நீடிக்கிற வடிவமாக, கையால் மலம் அள்ளும் வேலையை ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் என்று அரசு சொல்கிறது. ஆனால், ஐ.நா-வின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, இந்தியாவில் ஏழு லட்சம் பேர் இந்த இழிவில் சிக்கிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் பெண்கள்தான்.
இந்தியாவில் 50 லட்சம் பேர் கொத்தடிமை நிலையில் இருப்பதாக சேவை அமைப்புகளின் கணக்குகள் தெரிவிக் கின்றன. அவர்களில் தலித் மக்களும் பழங்குடிகளும் அதிகமாக உள்ளனர் என்று மத்திய திட்டக்குழுவின் கொள்கை உருவாக்கக் குழுக்களின் தலைவராக இருந்த பி.எஸ். கிருஷ்ணன் கூறுகிறார். இந்தியாவில் இந்தத் தொழி லாளி வர்க்கம் சாதிகளாக உடைந்து நொறுங்கியுள்ளது. சுகாதாரப் பணி போன்ற சேவைப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பது இந்த உண்மையை எடுத்துக்காட்டும். இந்தியத் தொழிலாளிகளில் மிகச் சிறுபான்மையோருக்குத்தான் 8 மணி நேர வேலை உள்ளிட்ட உரிமைகள் கிடைக்கின் றன என்ற நிலைமையில், அவையும் கூடப் புதிய பொருளா தாரக் கொள்கை, தாராளமயமாதல், உலகமயமாதல் ஆகியவற்றின் பெயரில் மீண்டும் பறித்துக்கொள்ளப்படும் அபாயங்கள் உருவாகின்றன. தொழில் வளர்ச்சிக்கான புதிய பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்போது, அங்கே தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் செயல்படாது எனத் தொழில் முனைவோருக்கு உறுதி யளித்துத் தொழிலாளர் உரிமைகளைக் கைவிடுகிற நிலைமைகளும் இன்று உள்ளன.
8 மணி நேரப் பணி என்பது தொழிலாளரை ஒரு மனிதராகக் கருதி அவருக்குரிய மாண்பை அங்கீகரிப்பதாகும். மனித உரிமைகள் பல மீட்டெடுக்கப்பட்ட இந்தக் காலத்திலும் 8 மணி நேர வேலை என்ற உரிமை இல்லாத தொழிலாளர்கள்தான் உலகில் அதிகம் என்ற நிலை நீடிக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவதுதான் ஒரே வழி.
தொடர்புக்கு: neethirajan.t@kslmedia.in