View status

View My Stats

வியாழன், 29 செப்டம்பர், 2022

சந்தேகங்கள்

 அய்யா, வணக்கம் 

எனக்கு மூன்று சந்தேகங்கள் இருக்கிறது அய்யா. உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனக்கு பதில் அனுப்புங்கள் அய்யா தயவுசெய்து..


1. என் மாணவர்களிடம் நான் இரகசியம் புத்தகத்தை பற்றி சொல்லிக்கொடுக்கையில் ஒரு மாணவன் கேட்டான். நமது எண்ணங்களை இந்த பிரபஞ்சம் கேட்கிறது என்றால் நமக்குள் எழும் எதிர்மறை மற்றும் கெட்ட எண்ணங்கள் பலிக்குமா? அப்படி வரும் எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது இல்லை எப்படி கையாள்வது ?


2. அய்யா , நீங்கள் சொன்னது போல் ப்ரஷர் மற்றும் சுகர் போன்றவை நோய்கள் கிடையாது அது ஆங்கில மருத்துவம் ஏற்படுத்தியது என்று சொன்னால் என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர் கேட்கிறார் . அப்படி அது நோய் இல்லை என்றால் ஏன் மக்கள் இறக்கிறார்கள் ?


3. என் சக நண்பர்கள் இன்னும் வாழ்க்கையில் ஒரு நிலையில்லாத நிலைமையை நினைத்து வருந்துகிறார்கள். பிடித்த வேலையை செய்தால் வருமானம் குறைவாகிறது. வருமானம் வரும் என்றால் வேலை பிடிக்கவில்லை என்றும், எதிர்கால பயம், பொருளாதார பயம் , வாழ்க்கை பயம் இதனாலேயே நோய் பயம் , என்று 25 மற்றும் 27 வயதுகளிலே பயப்படுகிறார்கள்


இவர்களுக்கு என்ன பதில் அய்யா நான் சொல்வது.. ஒரு தெளிவான விளக்கம் இந்த கேள்விகளுக்கு சொல்லுங்கள் அய்யா. இதனால் பலபேர் நன்மையடைவார்கள். நன்றி அய்யா

[27/09, 10:59 am] Nagore Rumi / Mohd Rafee: 1. அழுத்தமாக இருந்தால் எல்லா எண்ணமும் பலிக்கும். நமக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று நாம் பயப்படுவதுதான். அதாவதுநம் எதிர்மறை எண்ணங்கள்தான். 


2. சுகர் நோயால் மக்கள் இறப்பதற்கு முக்கியமான காரணமே டாக்டர்கள் கொடுக்கும் இன்சுலின் போன்ற  மருந்துகள்தான். முழுமையாக குணப்படுத்தப்பட்ட ஒரு சுகர் நோயாளியையாவது ஆங்கில மருத்துவம் காட்ட முடியுமா? சுகர் பற்றி யூட்யூபில் நல்ல வீடியோக்கள் உள்ளன. பார்க்கலாம். மனசாட்சி உள்ள டாக்டர் ஒருவர் மாம்பழ ஜூசைக் குடித்து விட்டு கொஞ்ச நேரம் கழித்து சுகர் டெஸ்ட் எடுத்துக்காட்டுகிறார். அப்போது சுகர் லெவல் குறைந்துள்ளது. 



3. நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். பணம் என்பது உடல் உழைப்பால் மட்டும் வருவதல்ல. அது ஒரு சின்ன ஆற்றல். நாம் ஒரு பெரிய ஆற்றல். அதை நாம் நம்மை நோக்கி இழுக்க வேண்டும். அதற்கு நம்மிடம் செல்வ மனநிலை வேண்டும். பணத்தை மதிக்காத மனநிலை வேண்டும். என் அடுத்த விநாடி நூலைப் படித்துப் பார்க்கவும். உலகில் இன்று வாழும் / வாழ்ந்த பல கோடீஸ்வரர்கள் ஒரு கருத்தைக்கொண்டு பணத்தை இழுத்தவர்கள். உதாரணமாக ஸ்டீவ் ஜாப்ஸ், அல்லது கேஎஃப்சி சிக்கன் முதலாளி. அல்லது ஹென்றி ஃபோர்டு. அவர்களது வாழ்க்கையை ஆழமாகப் படிக்கச் சொல்லுங்கள். அல்லது என் அடுத்த விநாடி, இந்த விநாடி, சிலையும் நீ சிற்பியும் நீ போன்ற நூல்களை வாசிக்கச் சொல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக