View status

View My Stats

புதன், 27 ஜனவரி, 2016

கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்கான தகவல்கள் - தெரிந்து கொள்வோமா?


* திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு
முன்னர் “புளியோதரை”தான்
பிரசாதம்,லட்டு கிடையாது.
* .ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
* இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்”
முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
* ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண்
சிங்கம் சாப்பிடும்.
* வாத்து அதிகாலையில் மட்டுமே
முட்டையிடும்.
* கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
* பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
* முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய
அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும்
ஆவார்.
* உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26
ஆகும்.
* அமெரிக்காவை விட சகாரா பாலைவனம்
பெரியது
* கரையான்களால் அரிக்க முடியாத மரம்
தேக்கு மரம்.
* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும்
நீர்யானை உள்ளது.
* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை
மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள்
ஆகும்.
* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி
அளவை தரும் நாடு தென்னாப்பிரிக்க
ா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).
* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு
பஹ்ரெய்ன்.
* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு
பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண்
மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது
பழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு
பிடித்தவனாக இருந்தால் நீளமான
மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக
இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியை
யும் ஏற்றி வைப்பாள்.
* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற
மிருகங்களின் கொம்புகளிலிருந்து
வேறுபடுகிறது. இதன் கொம்பு
எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே
உருவானது.
* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக
தோன்றும். ஆனால், அது பச்சையாகத்
தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும்
தான்.
* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம்
யூகாலிப்டஸ் மரம்.
* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக்
கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து
விடும்.
* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள்
உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில்
மட்டும் 350 வகைகள் உள்ளன.
* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம்
ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும்,
4,819 கிளைகளும் இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக