View status

View My Stats

திங்கள், 2 டிசம்பர், 2013

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ..



விடாமுயற்சி!

ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு, "இதற்கு மேல் என்னால் முடியாது...என்று சொல்பவன் சராசரி. "என் லட்சியத்தை எட்டும்வரைமுயற்சி செய்து கொண்டேயிருப்பேன்...என்று சொல்பவன்,சாதனையாளன்.

தோல்வியால் துவண்டவர் களைஇந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை. தோல்வி உங்களுக்குபுதிய உற்சாகத்தையும்,வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிரவிரக்தியைக் கொடுக்கக் கூடாது. யாருக்கும் முதல் முயற்சியிலேயேமிகப் பெரிய வெற்றி கிடைத்து விடுவதில்லை.

தடைக்கற்களைமுன்னேற்றத்துக்கான படிக்கற்கள் என்று நினைத்துக் கொள்வோம். "வீழ்ந்தோம்என்று இந்த உலகம்நம்மைப் பற்றிச் சொல்லும் போதுஅதே உலகம், "வென்றோம்என்று சொல்லும்படி சாதித்துக் காட்டுவோம்.

தோல்வி என்றைக்கும் நிரந்தரமானதல்ல. நம்முடைய முயற்சிகளில்,சில தோல்வியைத் தழுவலாம். ஆனால்முயற்சியே எடுக்காமல் விட்டு விட்டால்நம்முடைய வாழ்க்கையே தோல்வியில் முடியும்.

உடனுக்குடன் பலன் எதிர்பார்ப்பதுஉடனே பலன் கிடைக்காவிட்டால்,சோர்ந்து விடுவது சிறுபிள்ளைத்தனம். பிரச்னையை கண்டுஓடி ஒளிவது கோழைத்தனம். ஓடி ஒளிவதால்பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. பிரச்னையின் தன்மைக்கேற்பதீர்வு உடனே கிடைக்கலாம் அல்லது சில காலம் கழித்துக் கிடைக்கலாம்.

விடாமுயற்சியால்வரலாற்றில் இடம் பெற்ற சிலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்:

சிறுபிள்ளையாக இருக்கையில்பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட வில்மாருடாப் என்ற பெண்மணி, 1960 ஒலிம்பிக்கில்ஓட்டப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார்.

ஐந்து வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட ஷெல்லிமான், 1956 ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில்தங்கப் பதக்கம் பெற்றார்.

ஒரு ஊருக்குச் செல்வதற்குபல வழிகள் இருப்பது போலநம்முடைய இலக்கை அடைவதற்கும்பல்வேறு வழிகள் உள்ளன. ஒரு வழி அடைபட்டால்மாற்று வழி பற்றி யோசிக்க வேண்டும்.

மிகப் பிரபலமான விஞ்ஞானிஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம்முட்டாள் தனத்துக்கு விளக்கம் கேட்ட போது, "ஒரே வேலையைதிரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்துவிட்டுவித்தியாசமான பலனை எதிர்பார்ப்பதற்கு பெயர் தான் முட்டாள்தனம்...என்றாராம்.

அலெக்சாண்டர் கிரகாம் பெல்காது கேளாத தன் மனைவிக்குகாது கேட்பதற்காக கருவி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது தான்தொலைபேசியைத் தற்செயலாக கண்டுபிடித்தார். உங்களுக்குப்புதிய வாய்ப்புபிரச்னை உருவத்தில் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்குத் தோல்வியோபின்னடைவோ வரும் போதுநம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இதோ... "தோல்வி அல்லது பின்னடைவுக்கு என்ன காரணம்எங்கே தவறு நடந்ததுநான் இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்னஇனிமேல் இந்த மாதிரி தவறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?'

சாதனையாளர்கள்தங்களுடைய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடுவதில்லை. தான் இழந்த நாட்டை மீட்கப் போராடிய ராபர்ட் புரூஸ்இந்தியாவுக்குக் கடல்வழி கண்டுபிடித்தவாஸ்கோடகாமாஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் போன்ற பலரும்தங்களின் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை.

தேசிய கவி பாரதியாரும்கவிஞர் கண்ணதாசனும்தங்களின் ஆரம்பகால கவிதைப் போட்டியில்முதல் பரிசு பெறவில்லை.

அமெரிக்கா ஜனாதிபதியாகிஅடிமைத்தனத்தை ஒழித்துவரலாறு படைத்த ஆபிரகாம் லிங்கன்ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்ஐந்து முறை பல்வேறு தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தங்கள் பிள்ளை சரியாகப் படிக்கவில்லையே என்று புலம்பும் பெற்றோருக்கு, விஞ்ஞானி எடிசனின் நிஜவாழ்க்கைக் கதைதைரியமூட்டும். மின்சார விளக்கு உட்படஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான விஞ்ஞானிதாமஸ் ஆல்வா எடிசனுக்குகாது சரிவரக் கேட்காது. மூன்று மாதமே பள்ளியில் படித்தவர். "அடிமக்குஎன்றுஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டுபள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார்.

ஆயிரம் முறை புதுப்புது வழிகளில் முயற்சி செய்தும்மின்சார விளக்கைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதைப் பார்த்துமற்றவர்கள்கிண்டல் செய்த போது, "நான் ஆயிரம் வழிகளில் மின்சார விளக்கு எரியாது என்ற உண்மையைக் கண்டுபிடித்தேன் அல்லவா?' என்று தமாசாகப் பதிலளித்தார். தன், 67 வயதில்இவரது ஆராய்ச்சி மையம்தீ விபத்தில் சாம்பலாகியது. அப்போதுஅவர், "பரவாயில்லைகடவுள் புதிய கண்டுபிடிப்புக்கு வழி வகுத்துக் கொடுத்துள்ளார்...என்று கூறினார். விடா முயற்சிக்கும்மனவலிமைக்கும் எடிசனைத் தவிர,வேறு யாரை உதாரணமாகச் சொல்லுவது?

பீதோவன் காது கேளாதவர். இளம் வயதில்இசை ஞானம் இல்லாதவர் என்று ஒதுக்கப்பட்டவர். ஆனால்பிற்காலத்தில் உலகிலேயே உன்னதமான இசையை உருவாக்கியவர் என்று புகழப்பட்டார்.

மிகச் சிறந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவராகக் கருதப்பட்டப்ராங்ளின் ரூஸ்வெல்ட்சக்கர நாற்காலியில் அமர்ந்தபடிஇரண்டாம் உலகப் போரின் போதுஅமெரிக்காவை வழி நடத்தி வெற்றி கண்டார்.

நேருவுக்கு பின்இந்தியப் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி,பள்ளிக்குச் செல்வதற்கு தினமும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். ஆற்றின் குறுக்கேபாலம் இல்லாததால்,புத்தகத்தையும்கழற்றிய உடையையும்தலைக்கு மேல் சுமந்தபடிநீச்சலடித்துதினமும் அக்கரையை அடைந்திருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்அதிகாலையில் வீடு வீடாகச் சென்று பேப்பர் போட்டுபள்ளிக்குச் சென்றிருக்கிறார். இப்படிச் சொல்ல ஆரம்பித்தால்சுதந்திர இந்தியாவில்அடி மட்டத்திலிருந்து புகழின் உச்சத்தை அடைந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

மிகச் சிறந்த சாதனையாளர்கள் கூடஆரம்ப காலத்தில் தடுக்கி விழுந்திருக்கின்றனர். "போர்டுஎன்ற கார் கம்பெனியை நிறுவிபுதிய கார்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய கோடீஸ்வரரான ஹென்றிபோர்டுமுதல் காரை உருவாக்கும் போதுரிவர்ஸ் கியரைப் பொருத்த மறந்து விட்டார்.
தோல்வியடைந்து விடுவோமோஅவமானப்பட்டு விடுவோமோ என்று பயந்தேபலர் முயற்சி செய்வதேயில்லை.

இன்றுஉலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில் கேட்சும்ஆப்பிள் நிறுவனத்தின் மூலம்கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியஸ்டீவ் ஜாப்ஸ் ஆகிய இருவரும்கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே விட்டவர்கள்.
பில்கேட்ஸ்தன் நண்பரோடுவீட்டில் கார் நிறுத்துமிடத்தில் ஆரம்பித்த நிறுவனம் தான்உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட்.

இந்திய கம்ப்யூட்டர் துறையில் முத்திரை பதித்த நாராயணமூர்த்தி,கையிலிருந்த வேலையை விட்டு விட்டுஇந்தியாவை கம்ப்யூட்டர் துறையில் முன்னணிக்குக் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கத்தில்கம்ப்யூட்டர் தொழில் துவங்க நினைத்தார். இவரது ஆரம்பகால முயற்சிதோல்வியைத் தழுவியது. இறுதியில்தொழில் துவங்க கையில் பணமில்லாமல் திண்டாடிய போதுமனைவி தன் நகையை விற்றுக் கொடுத்த, 10,000 ரூபாயை வைத்துமற்ற நண்பர்களுடன் துவங்கிய நிறுவனம் தான்இன்று இந்தியாவில் முன்னணியில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ்.

தனக்கு நிறைய திறமையிருந்தும்அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுபவர்கள்ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புகழின் உச்சிக்குச் சென்ற பலர்ஆரம்ப காலத்தில் அங்கீகாரம் கிடைக்காமல்போராட நேர்ந்திருக்கிறது.

ஒரு துறையில் சாதனை படைக்கஇளம் மேதையாக இருந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஆர்வமும்ஈடுபாடும்,திறமையும்உழைப்பும் இருந்தால், எந்த வயதிலும் சாதனை படைக்கலாம்.

மிகச்சிறந்த சாதனையாளர்கள் துரதிர்ஷ்டவசமாக சறுக்கி விழ நேர்ந்தாலும்அவர்களுடைய தன்னம்பிக்கையும்கம்பீரமும் சற்றும் குறைவதில்லை.
எல்லா தோல்விகளும்அனைவரையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை.
உதாரணமாகதேர்வுபோட்டிவியாபாரம் மற்றும் காதலில் தோல்வியடைந்தவர்களில்தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு ரகம். ஆனால்அவர்களை விட மோசமான தோல்வியடைந்தவர்கள், "பரவாயில்லைஎனக்கு இது ஒரு நல்ல பாடம்...என்று ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்பவர்கள் மறு ரகம். நாம் இந்த இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவராக இருக்கலாம்!

எப்போதெல்லாம் பிரச்னை மற்றும் தோல்வியைச் சந்திக்கநேர்கிறதோஅப்போது இரண்டு கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம்"அதனால் என்னஅடுத்து என்ன?'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக